எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை: அக்.13 - குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறி, பல கோடி ரூபாய் கமிஷன் வாங்கி மோசடி செய்த அப்ரோ நிறுவன அதிபர் ஏசுதாஸை பெங்களூரில் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கொளத்தூரில் அப்ரோ என்ற தொண்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. சென்னை உள்பட பல மாவட்டங்களிலும் இதன் கிளை தொடங்கப்பட்டது. மகளிர் சுயஉதவி குழுவினருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என்று அப்ரோ நிறுவனம் விளம்பரம் செய்தது. இதற்காக பொதுமக்களிடம் முன்பணமும் பெறப்பட்டது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கடன் வழங்குவதாக அந்த நிறுவனம் விளம்பரம் செய்தது. ஆனால், அப்ரோ நிறுவனத்தின் விளம்பரத்தை ரிசர்வ் வங்கி நிராகரித்தது. இதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அதிரடியாக விளக்கம் அளித்தது. இதைத் தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தன்னிச்சையாக வழக்கு பதிவு செய்து முறைகேடாக குறைந்த வட்டியில் கடன் தருவதாக மோசடி செய்த அப்ரோ நிறுவனத்தின் நிர்வாகிகள் சிலரை 2 மாதங்களுக்கு முன்பு அதிரடியாக கைது செய்தனர். நிறுவன உரிமையாளர் ஏசுதாஸ் மட்டும் பிடிபடாமல் இருந்தார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் தமிழகம் முழுவதும் ஏசுதாசை தொடர்ந்து தேடி வந்தனர். இதை தெரிந்து கொண்ட ஏசுதாஸ், வெளி மாநிலத்துக்கு தப்பினார். இதையடுத்து ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தனிப்படையினர் சென்று தேடினர். இந்நிலையில், பெங்களூரில் ஏசுதாஸ் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு மாறுவேடத்தில் விரைந்த போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு ஏசுதாஸ் மற்றும் நிறுவன ஒருங்கிணைப்பாளர் தேவி ஆகியோரை சுற்றிவளைத்து கைது செய்தனர். இருவரையும் சென்னை கொண்டு வந்தனர். அவர்களிடம் முறைப்படி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எத்தனை பேரிடம், எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டது என்பது விசாரணை நடைபெறுகிறது.
அப்ரோ டிரஸ்ட்க்கு எதிராக 27 மகளிர் சுய உதவி குழுக்களிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த புகாரின்படி பல மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களிடம் சுமார் 2 கோடியே 12 லட்சத்து 63 ஆயிரத்து 20 ரூபாய் வரை வசூலித்து பொதுமக்களை ஏமாற்றியது தெரிய வருகிறது. மேலும் பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. ஆகையால் ஏமாற்றப்பட்டவர்கள் மேலும் அதிகரிப்பதால் ஏமாற்றப்பட்ட பணமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்நிறுவனத்தின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அப்ரோ டிரஸ்ட் நிறுவனம் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களிடம் சுமார் பல கோடி ரூபாய் வரை ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என விசாரணையில் தெரிய வருகிறது. தலைமறைவாக இருந்த அப்ரோ டிரஸ்ட் நிறுவன அதிபர் ஏசுதாசை கைது செய்த தனிப்படையினரை மாநகர கமிஷனர் எஸ்.ஜார்ஜ் பாராட்டினார்.
பொது மக்கள் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வரும் இதுபோன்ற போலியான நிதிநிறுவனங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 days ago |
-
பெண்கள் பெயரில் பதியப்படும் சொத்துகளுக்கு பத்திரப்பதிவில் ஒரு சதவீதம் கட்டணம் குறைப்பு: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு இன்று முதல் அமல்
31 Mar 2025சென்னை, பெண்கள் பெயரில் வீடு, மனை உள்ளிட்ட அனைத்து வகையான அசையா சொத்துகளையும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும்போது இன்று முதல் (ஏப்ரல் 1) பதிவு கட்டணம் ஒரு சத
-
ரூ.5 முதல் ரூ.25 வரை அதிகரிப்பு: 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு
31 Mar 2025சென்னை, தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படிரூ.5 முதல் ரூ.25 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.
-
டோனி உடல்நிலை முன்பு போல் இல்லை: பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தகவல்
31 Mar 2025சென்னை : டோனி உடல்நிலை முன்பு போல் இல்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
-
சிறப்பான தொடக்கம் இல்லாததே தோல்விக்கு காரணம்: ருதுராஜ்
31 Mar 2025கவுகாத்தி : சிறப்பான தொடக்கம் இல்லாததே சென்னை அணி தோல்விக்கு காரணம் என்று கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-04-2025.
01 Apr 2025 -
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கு மவுனத்தை பதிலாக அளித்த செங்கோட்டையன்
01 Apr 2025சென்னை : டெல்லி சென்றது குறித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கு பதில் அளிக்க செங்கோட்டையன் மறுத்து விட்டார்.
-
தி டோர் விமர்சனம்
01 Apr 2025அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓர் இடத்தில் உள்ள சிறு கோவில் இடிக்கப்படுகிறது.
-
சிங்கம் புலி நடிக்கும் செருப்புகள் ஜாக்கிரதை
01 Apr 2025ஜீ5 ஓடிடி தளத்தின் அடுத்த படைப்பாக ’செருப்புகள் ஜாக்கிரதை’ என்ற தொடரை வெளியிட்டுள்ளது.
-
ஆர்பிஎம் டிரைலர் வெளியீடு
01 Apr 2025நடிகர் டேனியல் பாலாஜியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவர் நடித்த ஆர்பிஎம் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.
-
சர்தார்-2 டீசர் வெளியீடு
01 Apr 2025சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் PS மித்ரன் இயக்கத்தில், “சர்தார் 2” உருவாகியுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி.
-
ஏப்ரல் 4 ல் வெளியாகும் டெஸ்ட்
01 Apr 2025மாதவன், நயன்தாரா சித்தார்த் ஆகியோர் நடிக்கும் டெஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 4 அன்று நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
-
தஞ்சையில் மெகா நெல் கொள்முதல் நிலையம்: பேரவையில் அமைச்சர் தகவல்
01 Apr 2025சென்னை : தஞ்சாவூரில் ரூ.1.41 கோடியில் மெகா நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, இப்போது சோதனை அடிப்படையில் செயல்படுகிறது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூற
-
வாரம் இரு வேலை நாட்கள் என்ற நடைமுறை விரைவில் வரும்: பில் கேட்ஸ் தகவல்
01 Apr 2025அமெரிக்கா, செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் வாரம் இரு வேலை நாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை இன்னும் பத்தாண்டுகளில் வழக்கத்தில் இருக்கும் என்று பி
-
திருச்செந்தூர் கோவிலில் வாரத்தில் 3 நாட்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து
01 Apr 2025திருச்செந்தூர், கோடை விடுமுறையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக, வாரத்தில் 3 நாள்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டு
-
இந்தியா பொருட்களுக்கான புதிய இறக்குமதி வரி இன்று முதல் அமல்: அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
01 Apr 2025வாஸிங்டன், இந்தியா அமெரிக்க இறக்குமதிக்கு அதிகமாக வரி விதிப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
-
காவிரி - வைகை - குண்டாறு திட்டம்: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
01 Apr 2025சென்னை : காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து சட்டப் பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இரண்டாவது கட்சி யார் என்பதில்தான் போட்டி: திருமாவளவன்
01 Apr 2025சென்னை : பா.ஜ.க., அ.தி.மு.க. மற்றும் த.வெ.க. ஆகிய கட்சிகளுக்கிடையே தமிழகத்தில் இரண்டாவது கட்சி யார் என்பதில் தான் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.
-
சமாதி அடைந்தாரா சாமியார் நித்யானந்தா ? - சகோதரி மகன் வீடியோவால் புதிய பரபரப்பு
01 Apr 2025சென்னை : சாமியார் நித்யானந்தா சமாதி அடைந்ததாக அவரது சகோதரி மகன் வெளியிட்ட வீடியோவால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு: தமிழகத்தில் தஞ்சை சாதனை
01 Apr 2025தஞ்சாவூர் : தமிழகத்தில் இதுவரை 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் தஞ்சை மாவட்டம் சாதனை படைத்திருப்பதாகவும் வழக்குரைஞர் சஞ்சய் காந்தி கூ
-
நடந்தாய் வாழி காவிரி திட்ட நிதியைப் பெற நடவடிக்கை : அமைச்சர் துரைமுருகன் தகவல்
01 Apr 2025சென்னை : “காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளை சுத்தப்படுத்தும் ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்துக்கான நிதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தம
-
பிரதமர் மோடியுடன் சிலி அதிபர் சந்திப்பு
01 Apr 2025புது டில்லி : அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
-
சாட் ஜி.பி.டி.-யில் கிபிலி பாணி ஓவியங்கள் இலவசம் ஓபன் ஏ.ஐ.சி.இ.ஓ. அறிவிப்பு
01 Apr 2025புதுடெல்லி, ஸ்டுடியோ கிப்லி பாணியில் படங்களை உருவாக்க சாட் ஜி.பி.டி.ஐ பயன்படுத்தும் சமீபத்திய போக்கு அதிகரித்துள்ள நிலையில், இனி இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அற
-
புல்டோசர்களால் வீடுகளை இடிப்பது சட்டவிரோதமானது; மனிதாபிமானமற்றது - தலா ரூ.10 லட்சம் வழங்க உ.பி. அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
01 Apr 2025புதுடெல்லி : புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடித்து தள்ளும் உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசின் செயல், மனிதாபிமானமற்றது; சட்டவிரோதமானது என சுப்ரீம் கோர்ட் மீண்டும் கடும் கண்டன
-
இந்தியர்களுடன் விண்வெளி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள ஆர்வம்: சுனிதா வில்லியம்ஸ் பேட்டி
01 Apr 2025அமெரிக்கா, சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பிய பிறகு முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து சுனிதா வில்லியம்ஸ் பேசியுள்ளார்.
-
எத்தியோப்பியாவில் வேகமாக பரவும் காலரா நோய் தொற்றினால் 10 லட்சம் பேருக்கு ஆபத்து
01 Apr 2025தெற்கு சூடான், கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் வேகமாகப் பரவி வரும் காலரா நோயினால் சுமார் 10 லட்சம் பேர் அபாயத்திலுள்ளதாகக் கூறப்படுகின்றது.