எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி, டிச. 20 - சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த இமாச்சல் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்பு மத்தியில் நடக்கிறது. இன்று மதியத்திற்குள் முடிவுகள் தெரிந்து விடும். அப்போது இரண்டு மாநிலங்களிலும் வெற்றி பெறப் போவது பாரதீய ஜனதாவா? அல்லது காங்கிரசா என்ற கேள்விக்கு விடை கிடைத்து விடும்.
குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
அதன்படி முதலில் இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. பிறகு குஜராத் மாநிலத்தில் கடந்த 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக கடந்த 13 ம் தேதியன்று 87 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது 70.75 சதவீத வாக்குகள் பதிவாயின. பிறகு 2 ம் கட்ட மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் கடந்த 17 ம் தேதியன்று 95 சட்டமன்ற தொகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த இறுதிக் கட்ட தேர்தலிலும் குஜராத் வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்தனர். நீண்ட கியூ வரிசையில் நின்று ஆண்களும், பெண்களும், முதியோர்களும் வாக்களித்தனர். இந்த தேர்தலுக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி போட்டியிட்ட மணி நகர் தொகுதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டிருந்தார்கள். தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறியிருந்தார்கள். அதைப் போல் ஒரு சில அசம்பாவித சம்பவங்களை தவிர மற்றபடி இம்மாநிலத்தில் தேர்தல் அமைதியாகவே நடந்து முடிந்தது.
முன்னதாக இந்த இரண்டு கட்ட தேர்தலிலுமே அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் வகையில் பிரச்சாரம் செய்தார்கள். மாநில முதல்வர் மோடி பம்பரமாக சுழன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் தனது 10 ஆண்டு ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரித்தார். பா.ஜ.க. தலைவர்களும் அவருக்காக பிரச்சாரம் செய்தனர்.
இதே போல் காங்கிரஸ் தரப்பில் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோரும் தீவிர பிரச்சாரம் செய்தனர். இங்கு பிரச்சாரம் செய்த பிரதமர் பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். இப்படியாக விறுவிறுப்பாக நடந்த பிரச்சாரம் ஓய்ந்து கடந்த 17 ம் தேதி இறுதிக்கட்ட தேர்தலும் நடைபெற்றது. அந்த தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா சார்பில் முதல்வர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் ஆனந்தி பட்டேல், சவுரவ் பட்டேல், பிரபுல் பட்டேல், ஜெயநாராயணன் உள்ளிட்டோரும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தரப்பில் முன்னாள் முதலமைச்சர் சங்கர்சிங் வகேலா, அவரது மகன் மகேந்திர வகேலா உள்ளிட்டோரும் போட்டியிட்டனர்.
முதல்வர் மோடியை எதிர்த்து ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ்பட் மனைவி சுவேதாபட் களமிறங்கினார். முன்னாள் முதலமைச்சர் கேசுபாய் பட்டேல் புதிய கட்சி தொடங்கியிருந்தார். இவரது கட்சியான குஜராத் பரிவர்த்தன் கட்சியும் தேர்தல் களத்தில் குதித்தது. இதனால் பாரதீய ஜனதாவின் ஓட்டுக்கள் பிரியும் என்று காங்கிரஸ் கட்சி கணக்குப் போட்டது. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் முதல்வர் மோடியே வெற்றி பெறுவார் என்று தகவல்கள் கூறுகின்றன. இதே கருத்தை முதல்வர் மோடியும் கூறியுள்ளார்.
தேர்தலில் வாக்களித்த பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மூன்றாவது முறையாக நான் ஆட்சியைப் பிடிப்பேன். எனது நல்லாட்சிக்கும், நான் ஏற்படுத்திய முன்னேற்றத்திற்கும் மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கையோடு கூறினார். ஒரு வேளை இவர் இந்த தேர்தலிலும் வெற்றி பெற்றால் அது இவருக்கு ஹாட்ரிக் சாதனையாகத்தான் இருக்கும். எது எப்படியோ இன்று மதியத்திற்குள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும். அப்போது குஜராத்திலும் சரி, இமாச்சல் பிரதேசத்திலும் சரி, ஆட்சியைப் பிடிப்பது காங்கிரசா?அல்லது பா.ஜ.க.வா என்பது தெரிந்து விடும். வாக்குகள் எண்ணப்படுவதை முன்னிட்டு இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெறும். மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்பட்டதால் முடிவுகள் 4 மணி நேரத்திற்குள் தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 21 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2025
18 Apr 2025 -
கூட்டணி குறித்த கேள்வி: ஓ.பன்னீர் செல்வம் பதில்
18 Apr 2025கோவை : கூட்டணி குறித்த கேள்விக்கு இன்று லீவு என ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்தார்.
-
ப்ளோரிடா பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 2 பலி; 6 பேர் காயம்
18 Apr 2025ப்ளோரிடா : அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர்.
-
பவன் கல்யாண் மீது ரோஜா தாக்கு
18 Apr 2025திருப்பதி : பவன் கல்யாண் மீது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ரோஜா பாய்ச்சல்.
-
நடிகர் ஸ்ரீ குறித்து அவதூறு: குடும்பத்தினர் வேண்டுகோள்
18 Apr 2025சென்னை : நடிகர் ஸ்ரீ குறித்து அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
என்.ஐ.ஏ.வால் தேடப்படும் பயங்கரவாதி அமெரிக்காவில் கைது
18 Apr 2025புதுடெல்லி : பஞ்சாபில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியான ஹேப்பி பாசியாவை அமெரிக்க போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தன
-
புனித வெள்ளி நாளில் கருணை, இரக்கத்தைப் போற்றுவோம்: பிரதமர் நரேந்திரமோடி பதிவு
18 Apr 2025புதுடெல்லி, புனித வெள்ளி நாளில் கருணை, இரக்கத்தைப் போற்றுவோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
-
சீனாவுக்கு இனியும் வரியை அதிகமாக்க விரும்பவில்லை: அதிபர் ட்ரம்ப் திடீர் முடிவு
18 Apr 2025வாஷிங்டன், சீனா மீதான வரிவிதிப்பு நடவடிக்கை முடிவுக்கு வரக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஜி.பி.எஸ். முறையில் சுங்கக்கட்டணம் வசூலிப்பா..? மத்திய அரசு விளக்கம்
18 Apr 2025புதுடில்லி, மே 1 முதல் ஜி.பி.எஸ். முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பரவும் தகவல் உண்மையல்ல என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
பெலிஸ் நாட்டில் சிறிய ரக விமானத்தை கடத்த முயன்றவர் சுட்டுக்கொலை
18 Apr 2025அமெரிக்கா : பெலிஸ் நாட்டில் சிறிய ரக விமானத்தை கடத்த முயன்றவர் சக பயணியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
விரைவில் தமிழ் வழி மருத்துவக் கல்வி: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
18 Apr 2025சென்னை : தமிழகத்தில் மருத்துவ பாடத்திற்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்த முயற்சியை கைவிடுகிறது அமெரிக்கா?
18 Apr 2025பாரிஸ் : ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு தெளிவாக தெரியாவிட்டால் அடுத்த சில நாட்களில், இதற்கான மத்தியஸ்த முயற்சியில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால
-
கொலம்பியாவில் சுகாதார அவசர நிலை: மஞ்சள் காய்ச்சலுக்கு 34 பேர் பலி
18 Apr 2025பொகாடா : தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சலால் 34 பேர் இறந்ததை அடுத்து, நாடு தழுவிய சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூ.9 ஆயிரத்தை நெருங்கிய ஒரு கிராம் தங்கம் விலை..!
18 Apr 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.9000-ஐ நெருங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.8945-க்கு விற்பனையானது.
-
ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதல்: 38 பேர் பலி
18 Apr 2025சனா : இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வரும் நிலையில், ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 38 பேர் பலியானார்கள்.
-
கோவையில் 26, 27-ம் தேதிகளில் விஜய் தலைமையில் பூத் கமிட்டி மாநாடு
18 Apr 2025சென்னை, கோவையில் வருகிற 26, 27-ம் தேதிகளில் விஜய் தலைமையில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
-
சென்னையில் குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி
18 Apr 2025சென்னை, சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல், மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
-
கொடியேற்றத்துடன் தொடங்கியது ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர்த்திருவிழா
18 Apr 2025திருச்சி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
பிணைக்கைதிகளை விடுவிக்க தயார் : ஹமாஸ் தலைவர் திடீர் அறிவிப்பு
18 Apr 2025கெய்ரோ : பிணைக்கைதிகளை விடுவிக்க தயார் என்று ஹமாஸ் தலைவர் அறிவித்துள்ளார்.
-
செங்கோட்டையன் தலைமையில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
18 Apr 2025கோபி : அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சை கண்டித்து செங்கோட்டையன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
டெல்லி ஆளுகைக்கு தமிழகம் என்றைக்குமே அடிபணியாது: திருவள்ளூர் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
18 Apr 2025சென்னை, டெல்லி ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்கும் அடிபணியாது. மற்ற மாநிலங்களைப் போல ரெய்டுகளால், கட்சிகளை உடைக்கும் உங்கள் பார்முலா தமிழகத்தில் நடக்காது.
-
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கையைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்கு
18 Apr 2025வேதாரண்யம் : மயிலாடுதுறை மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்பாக இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
பக்தர்கள் யாரும் வராததால் மேல்பாதி அம்மன் கோவில் மூடல்
18 Apr 2025விழுப்புரம் : பக்தர்கள் யாரும் வராததால் மேல்பாதி அம்மன் கோவில் நேற்று மூடப்பட்டது
-
உணவு ஆணையத்தின் உறுப்பினராக அன்னபூர்ணா சீனிவாசன் நியமனம்
18 Apr 2025சென்னை : கோவை ஸ்ரீஅன்னபூர்ணா உணவகத்தின் நிறுவனர் சீனிவாசனை தமிழக உணவு ஆணையத்தின் உறுப்பினராக நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழ்நாடு கவர்னருக்கு எதிராக சென்னையில் மா.கம்யூ. போராட்டம்
18 Apr 2025சென்னை, தமிழக கவர்னர் ஆர்.என்.