எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மற்றவர்களது உணர்வில் ஆழ்ந்து ஈடுபடும் பண்பே இரக்க உணர்வாகும். நமக்கு அடுத்திருப்பவரது உணர்வையும், பரிவையும் புரிந்துகொண்டு, அவர்களது இடுக்கண்களையும், துன்பங்களையும் துயரங்களையும் பகிர்ந்து கொள்ளும் ஆற்றலே இரக்கவுணர்வாகும். துன்பத்தில் ஆழ்ந்து கிடப்பவரது பாதிப்பை உணர்ந்து கொள்வதற்கு இரக்கவுணர்வு உதவுகிறது. மனத்தளவில் இருவேறு மனிதர்களுக்கு இடையில் நிலவும் இடைவெளியை இரக்கவுணர்வு இணைத்து விடுகிறது. துன்பத்தால் வீழ்ந்து கிடப்பவரது உள்ளத்தின் உணர்வுகளை அதே அலைகளின் அளவில் ஒத்து உணரச்செய்கிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் வழங்குமாறு இரக்கவுணர்வு தூண்டுகிறது. ஒருவருக்கு ஏற்பட்ட சோகத்தைத் தாங்கிக்கொள்ளுமாறு ஊக்கத்தையும், வலிமையினையும், ஆறுதலையும் அது வழங்குகிறது. சகமனித உணர்வு, தயவு ஆகியவற்றின் காரணமாக இரக்கவுணர்வு பெருக் கெடுக்கின்றது. மென்மையான இதயமும், பிறர் உணர்வின் மீதான அக்கறையும், துன்பத்தைப் பற்றிய கரிசனையும் காட்டுவது மெல்லுணர்வு எனலாம். அது ஒருவரது உள்ளத்தை மென்மையினாலும், அருள் பண்பினாலும் போர்த்துகின்றது. மனிதர்கள் சோதனையினாலும், இன்னல்களாலும், இடுக்கண்களாலும் வருந்தும்பொழுது ஆறுதல் அளிக்கிறது. துயருற்றவர் மனதில் இரக்கவுணர்வு தன்னம்பிக்கையைக் கட்டி யெழுப்புகிறது. அன்பைச் செயலளவுக்குக் கொண்டு செலுத்தும் ஆற்றல்மிக்கதாக இரக்கவுணர்வு திகழ்கிறது.
நிகழ்வு : “பாரிசு மாநகரத்தில் இரண்டு விண்வெளி வீரர்களுக்கு வழங்கப்பட்ட சிறப் பான வரவேற்பில் பங்குபெறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பல்லாயிரக்கணக் கான மக்கள் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு வெளியில் ஒன்று கூடினர். அவர்கள் இருவரும் வெளியே வந்து நின்ற பொழுது ஆம்ஸ்டிராங் முன்னாலே வந்தார்; காவல்துறையினர் ஏற்படுத்தியிருந்த தடைகளை உடைத்துவிட்டு, நேராகத் தான் சென்று அமரக்காத்திருந்த காரை நோக்கி அவர் செல்லவில்லை! வேறு திசையில் சென்றார். அனைவர் கண்களும் அவர் பின்னே சென்றன. சக்கர நாற்காலியில் அவரைக் காணவந்த மனிதரை நோக்கிச் சென்றார்.
கால்கள் ஊன முற்றிருந்த அந்த மனிதரால் நடக்க இயலாது. தனது அறையின் சன்னல் வழியாக ஆம்ஸ்டிராங் அவரைப் பார்த்திருந்தார். அப்போது அங்கே நின்று கொண்டிருந்த நாங்கள் அனைவரும் அழகானதொரு காட்சியினைக் கண்டோம். பழைய நெருங்கிய நண்பர்கள்போல இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். என்னருகில் இருந்த நண்பர் என்னிடம் சொன்னார்: “அற்புதமான காட்சி இல்லையா? உலகிலேயே வேகமாகப் பயணம் செய்யும் மனிதரும் உலகில் மெதுவாகச் செல்லும் மனிதரும் சந்தித்துக்கொள்கிறார்கள்.” அப்போது என் உள்ளத்தில் ஒரு கேள்வி உதய மாகிறது. எது மிகக் கடினமானது? நிலவுக்குச் செல்வதா? அல்லது நடையற்றுப் போன மனிதர் மீது அக்கறை காட்டுவதா?
இரக்கவுணர்வைப் பண்படுத்தி வளர்த்துக் கொள்ள வழிமுறைகள் : துன்பத்தில் கிடந்து தவிப்போரை உணர்வுப்பூர்வமாகப் புரிந்து கொள்ளுதல், மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், நெருக்கடியான வேளைகளில் ஒருவரைப் புரிந்துகொண்டு இசைவான உணர்வை வெளிப்படுத்துதல், மூளை வளர்ச்சி குன்றிய, மனநிலை பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்தல், மக்கள் நோயினால் பிடிக்கப்பட்டிருந்தால் அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்ளுதல், பிறர் துன்பங்களை எதிர்கொள்வதற்கு உதவி புரிதல், மற்றவர்களிடம் இனிமையாக வும், ஈடுபாடுகாட்டும் முறையிலும் நடந்துகொள்ளல், நலிவுற்றவர்பால் அக்கறை காட்டுதல், துன்பத்தில் வீழ்ந்து கிடப்போருக்குக் கைகொடுத்து உதவுதல், நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறுதல், வயது முதிர்ந்தோர், புறக்கணிக் கப்பட்டோரைப் பேணுதல், இயற்கைச் சீற்றங்களாகிய வெள்ளம், தீ விபத்து, நிலநடுக்கம், புயல், மழை முதலிய பாதிப்புகள் ஏற்படும்போது அக்கறையை வெளிப்படுத்துதல்.
சேவை : அறிவு, உள்ளம், உடல் ஆகியவற்றைப் பிறர் நலனுக்காக அவர்களது தகுதி, சாதி, வர்க்கம் பாராமல் செயல்படுத்துவதே சேவை. தன்னலமற்ற சேவை புரிந்து பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்குச் செயல்படுவதே சேவையாகும். உடல் உழைப்பின் மூலமாக வளர்ச்சிப் பணிகளுக்கான பங்களிப்பை ஒருவர் வழங்குவதே சேவையாகும். கல்விப் பயிற்சி வாயிலாக ஒருவரது உள்ளடங்கிய ஆற்றல்களைக் கண்டுகொள்ள சேவைச் செயல்பாடு உதவுகிறது.
மற்றவர்களது தேவைகளைக் குறித்துச் சேவை அக்கறை கொள்ளுகிறது. ஒருவருடைய நன்னடத்தை, ஆளுமை ஆகியவற்றின் வளர்ச்சிக்கான ஏராளமான வாய்ப்புகளைச் சேவை ஏற்படுத்துகிறது. கைம்மாறு கருதாமல் தன்னலமின்றி நம்மைத் தருவதற்குச் சேவை உறுதி தருகிறது.
கதை : ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார் ஒருவர். வுழியில் கள்வர்கள் அவரைப் பிடித்துக் கொண்டனர். அவரிடம் இருந்த ஆடை உள்ளிட்ட எல்லாவற்றையும் பறித்துக்கொண்டனர். அவரைக் காயப்படுத்திக் குற்றுயிராய்க் கிடக்குமாறு அடித்துப் போட்டனர். சாலையோரம் கிடந்த அவரைப் பார்த்தவாறு பலரும் கடந்து சென்றார்கள். ஆனால் எவருமே காயமுற்றவருக்கு உதவி செய்ய முன்வரவே இல்லை.
ஆனால் ஏழை மனிதர் ஒருவர் கருணையோடு அவரைக் கண்டு மனமிரங்கினார். அவரது காயங்களைக் கட்டினார். அவரைத் தூக்கினார்; மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார் - அவர் அருகிலேயே இருந்து கவனித்துக்கொண்டார். மறுநாள் மருத்துவமனை உரிமையாளருக்குத் தம்மிடமிருந்த பணத்தையும் எடுத்துக்கொடுத்தார். இரண்டு நாட்கள் கடந்த பிறகு தாம் திரும்பி வரும்போது ஆகும் செலவுகளைக் கொடுத்துவிடுவதாக உறுதி கூறினார்.
சேவை மதிப்பு நலனைப் பண்படுத்தி உருவாக்கிக் கொள்ள வழிமுறைகள் : தன்னலமற்ற சேவை மனப்பான்மையுடன் மற்றவர்களுக்கு நன்மை செய்தல். தேவை கருதி எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சிறிய உதவிகள் செய்தல். மற்றவருக்கு உதவி புரிதல். ஆறுதல் கூறுதல், வழிகாட்டுதல். வலியச் சென்று பிறருக்கு உதவுதல். பிறருக்கு உதவி செய்வதற்காக சொந்தத் தேவைகளையும் நலன்களையும் தியாகம் செய்தல். பிறர் எளிதில் சந்திப்பதற்கு உரியவராக இருத்தல். இன்னல்கள் நேரிடும்போது தக்க நேரத்தில் உதவுதல். முதியோர், பார்வையற்றோர் இல்லங்களுக்குச் சென்று உதவுதல். நாட்டுக்கு நற்பணி செய்யத் தயாராக இருத்தல்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025 -
ஜோர்டான் முதலீட்டாளர்களுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு
16 Dec 2025அம்மான், ஜோர்டான் முதலீட்டாளர்களுக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
-
‘பெண்டானில்’ ஒரு பேரழிவு ஆயுதம்: முக்கிய உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து
16 Dec 2025வாஷிங்டன், பெண்டானிலை ஒரு பேரழிவு ஆயுதமாக வகைப்படுத்தும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்தது
16 Dec 2025சென்னை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது.
-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க முயற்சி மத்திய அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு
16 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முடக்க மத்தி அரசு முயற்சிக்கிறது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஏற்க மறுப்பு : விசாரணையை தொடர டெல்லி நீதிமன்றம் அறிவுறுத்தல்
16 Dec 2025புது டெல்லி, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட 58 லட்சம் பேர் விவரங்கள் வெளியீடு: ஜன.15 வரை திருத்தங்களைக் கோர அவகாசம்
16 Dec 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட 58 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர், விவரங்களை தேர்தல்
-
ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் ஏதும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
16 Dec 2025சென்னை, ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
-
மகாத்மா காந்தி மீதான வெறுப்பால் 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கிறார் பிரதமர் மோடி ராகுல் காந்தி குற்றச்சாட்டு
16 Dec 2025டெல்லி, மகாத்மா காந்தி மீதான வெறுப்பால் 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கிறார் பிரதமர் மோடி என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வைகோ, சண்முகம் சந்திப்பு
16 Dec 2025சென்னை, சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் சண்முகம் சந்தித்து பேசினர்.
-
ஈரோட்டில் விஜய் பிரசார பொதுகூட்டம்: மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
16 Dec 2025ஈரோடு, ஈரோட்டில் விஜய் பிரசார பொதுகூட்டம் மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: தர்காவுக்கு சொந்தமான இடத்தில் தூண் உள்ளது : ஐகோர்ட் கிளையில் வக்பு வாரியம் வாதம்
16 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் தூண் உள்ளது என்று ஐகோர்ட்டில் வக்பு வாரியம் வாதம் முன் வைத்தது.
-
2014 முதல் இந்தியாவிற்குள் ஊடுருவிய 23,926 பேர் கைது: பார்லி.யில் மத்திய அரசு தகவல்
16 Dec 2025புதுடெல்லி, இந்தியாவில் 2014-ம் ஆண்டு முதல் ஊடுருவிய 23,926 பேரை கைது செய்துள்ளதாக மத்தி அரசு தெரிவித்துள்ளது.
-
இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில் சென்னை அருகில் ரூ.39.20 கோடி மதிப்பில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
16 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (16.12.2025) பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சென்னையில் நடைபெ
-
வரும் ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டசபை கூடுகிறது: பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
16 Dec 2025சென்னை, தமிழக சட்டசபை ஒவ்வொரு ஆண்டும் முதல் முறையாக கூடும்போது, அதில் கவர்னர் உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது.
-
ஜோர்டான் பட்டத்து இளவரசருடன் காரில் பயணம் செய்த பிரதமர் மோடி
16 Dec 2025புதுடெல்லி, ஜோர்டான் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பட்டத்து இளவரசர் பின் அல் ஹுசைன் இரண்டாம் அப்துல்லா அருட்காட்சியகத்திற்கு ஒரே காரில் அழைத்து சென்றார்.
-
எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்குவதற்காக மத்திய முகமைகளை தவறாக பயன்படுத்துவது அம்பலம்: மத்திய பா.ஜ.க. அரசுக்கு மீது முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
16 Dec 2025சென்னை, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி
-
100 நாள் வேலைத்திட்ட பெயரை மாற்ற பார்லி., மக்களவையில் புதிய மசோதா அறிமுகம்: திரும்பப்பெற தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
16 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை ‘விபி-ஜி ஆர்.ஏ.எம்.ஜி’ என மாற்றும் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
-
இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்தம்: ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்து
16 Dec 2025மாஸ்கோ, இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்து
-
அங்கன்வாடி பணியாளர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும்: சோனியா காந்தி
16 Dec 2025புதுடெல்லி, அங்கன்வாடி பணியாளர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்தார்.
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் நானோ தொழில்நுட்ப மாநாடு: போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு
16 Dec 2025வேலூர், வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆகிய
-
ஆஷஸ் 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
16 Dec 2025அடிலெய்டு, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் 3-வது டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா வெற்றி....
-
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவரை நேரில் சென்று விசாரித்தார் ஆஸி., பிரதமர் அப்பனீஸ்
16 Dec 2025சிட்னி, சிட்னியில் யூதர்கள் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கியபோது குண்டடிப்பட்ட அகமத்-அல்-அகமதுவை மருத்துவமனையில் சந்தித்து அந்நாட்ட



