எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு மே மாதம் 6-ம் தேதி இந்தியா முழுக்க நீட் தேர்வுகள் நடைபெற உள்ளன. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, நாமக்கல், நெல்லை, வேலுர் உட்பட இந்தியா முழுவதும் 104 நகரங்களில் 2200 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத் உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு எழுதலாம்.
இத்தேர்வுக்கான கட்டணம் ரூ.ஆயிரத்து நானூறு ஆகும். பட்டியல் இனத்தவர்களுக்கு ரூ. 750 ஆகும். மூன்று மணி நேரம் நடைபெற உள்ள இத்தேர்வில் இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவிரவியல் ஆகிய பாடங்களில் இருந்து தலா 45 கேள்விகள் கேட்கப்படும். இதில் ஒருவினாவிற்கு நான்கு விடைகள் இருக்கும். அவற்றில் சரியான விடையை தேர்வு செய்து டிக் செய்தால் போதும். 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடநூல்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும். ஒரு சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு தவறான விடைக்கு 1 மதிப்பெண் கழிக்கப்படும். விடையளிக்காவிட்டால் மதிப்பெண் கிடைக்காது, கழியாது. மொத்தம் 720 மதிப்பெண்கள் ஆகும். இந்த தேர்ச்சி மதிப்பெண் என்பது ஒவ்வொரு ஆண்டும் வேறுபடும்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை போல நீட் தேர்வும் ஒரு சாதாரண தேர்வுதான் என்ற மனநிலையில் மாணவர்கள் தைரியத்துடனும் ஆழ்ந்து படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் வினாக்களுக்கு விடைகள் பக்கம், பக்கமாக எழுதுவது போல் நீட் தேர்வில் தேவையில்லை. மாநில பாடத்திட்டத்தில் படித்து விட்டு சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வினாப் புத்தகங்கள் கொடுக்கப்படுகிறது. குறைந்த கால அவகாசத்தில் இதை படித்து தயாராக வேண்டும் என்ற மன பயம் இருக்கக் கூடாது.
சி.பி.எஸ்.சி என்பது நீட் தேர்வை நடத்தும் அமைப்புதான். பாடத்திட்டத்திற்கும் அந்த அமைப்பிற்கும் தொடர்பு கிடையாது. பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகள் தான் வரும் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். பொதுத் தேர்வு எழுதி முடித்தபிறகு கிடைக்கின்ற சுமார் 50 நாட்களில் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பாடங்களை நாட்களை ஒதுக்கி திட்டமிட்டு படிக்கவேண்டும்.
பலமுறை எழுதி பார்க்க வேண்டும். அவற்றை திருத்தி தவறுகளை தெரிந்துகொள்ளவேண்டும் வேதியியல் இயற்பியல் பார்முலாக்களை தொகுத்து வைத்து பலமுறை படித்து பார்த்து மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். சிபிஎஸ்சி இணையதளத்தில் https://cbseneet.nic.in/cbseneet/Online பாடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அவற்றையும் பழைய வினாத்தாள்களையும் தரவிறக்கி முழுமையாக படிக்க வேண்டும். இளம் வயதில் வாய்பாடுகள் வேகமாக சொல்லும்போது திடீர் என தடைபடும். அப்போது முதலில் இருந்து சொன்னால்தான் விட்ட இடத்தில் இருந்து தொடர்ச்சி நினைவிற்கு வரும். உதாரணமாக இரண்டாம் வாய்பாடு என்றால் இரண்டு இரண்டாக பெருக்கல் அல்லது கூட்டல் என்கிற அடிப்படையை புரிந்து கொண்டால் வாய்பாடு தடைபடாமல் எளிமையாகி விடும். அதுபோல நீட் தேர்வில் மொத்தமுள்ள நான்கு கேள்விகளில் எது சரியான விடை என்று கண்டறிந்து படித்து தயார் ஆவதை போல மற்ற மூன்று பதில்கள் ஏன் தவறானது என்கிற அடிப்படையை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் கேள்விகள் எந்த வடிவத்தில் வந்தாலும் எளிமையாக பதில் தர முடியும்.
தமிழக அரசு நீட் தேர்வுக்கான தொடுவானம் பயிற்சி மையத்தையும் நடத்தி வருகிறது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பயிற்சி நடத்துகிறது. சி.பி.எஸ்.சி பாட புத்தகத்தின் அடிப்படையில் நீட் தேர்வுக்கான 10 பாகங்களை கொண்ட புத்தகங்களையும் தயாரித்துள்ளது. அவற்றையும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
தேர்வுகுறித்த வழக்கமான மிகையான பயம் இல்லாமல் மன தைரியத்துடன் மாணவர்கள் இந்த தேர்வையும் சாதாரணமாக எழுதி வெற்றி பெற முடியும். அதற்காக உரிய முறையில் தங்களை தயார்படுத்திக் கொள்வதே முக்கியம்.
இத்தேர்வு குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி மதியழகன் கூறுகையில், நீட் என்னும் தகுதித்தேர்வு, தாவரயியல், விலங்கியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் 45 வினாக்கள் வீதம் மொத்தம் 180வினாக்களையும் ஒவ்வொரு விடைக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண்களையும் கொண்டதாகும்.
தமிழக அரசின் பாட திட்டத்தின்படி தேர்வு எழுதும் மாணவர்கள் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடத்தினை வரிக்கு வரி முழுமையாகவும் ஆழ்ந்தும் படித்தல் அவசியம். கூடுதலாக மத்திய பாடதிட்டத்தின் 8ஆம் வகுப்பு 9 மற்றும் 10ஆம் வகுப்பு புத்தகங்களை படித்து செல்வது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
தேர்வு நேரத்தை முறையாக கணக்கிட்டு முதலில் உயிர் அறிவியல் பின்னர் வேதியியல் அதை தொடர்ந்து இயற்பியல் வினாக்களுக்கு விடையளிப்பது நல்லது. இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் கணித அடிப்படையிலான வினாக்கள் கேட்கப்படும். அவற்றை நன்றாக பயிற்சி செய்துகொண்டு விரைவாக விடையளிக்கவேண்டும். முந்தைய தேர்வுதாள்களையும் தமிழக அரசு வழங்கியுள்ள வினா வங்கியையும் முழுமையாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். தேர்வுபயம் நீங்கி தெளிவாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்று அதிக மாணவர்கள் மருத்துவ மாணவராக தேர்வுபெறவேண்டும்.
இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அதிகாரி வீ.மதியழகன் தெரிவித்தார்.
நடைபெற உள்ள நீட் பொதுத்தேர்வை தமிழக மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுதி அதிக மாணவமாணவிகள் தேர்வாகிட வாழ்த்துக்கள். இந்த நீட் தேர்வு சிறப்பு மையங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வித் துறையில் ஒரு பெரிய புரட்சியையே இந்த அரசு ஏற்படுத்தி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.