எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்த ஆண்டு மே மாதம் 6-ம் தேதி இந்தியா முழுக்க நீட் தேர்வுகள் நடைபெற உள்ளன. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, நாமக்கல், நெல்லை, வேலுர் உட்பட இந்தியா முழுவதும் 104 நகரங்களில் 2200 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத் உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு எழுதலாம்.
இத்தேர்வுக்கான கட்டணம் ரூ.ஆயிரத்து நானூறு ஆகும். பட்டியல் இனத்தவர்களுக்கு ரூ. 750 ஆகும். மூன்று மணி நேரம் நடைபெற உள்ள இத்தேர்வில் இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவிரவியல் ஆகிய பாடங்களில் இருந்து தலா 45 கேள்விகள் கேட்கப்படும். இதில் ஒருவினாவிற்கு நான்கு விடைகள் இருக்கும். அவற்றில் சரியான விடையை தேர்வு செய்து டிக் செய்தால் போதும். 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடநூல்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும். ஒரு சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு தவறான விடைக்கு 1 மதிப்பெண் கழிக்கப்படும். விடையளிக்காவிட்டால் மதிப்பெண் கிடைக்காது, கழியாது. மொத்தம் 720 மதிப்பெண்கள் ஆகும். இந்த தேர்ச்சி மதிப்பெண் என்பது ஒவ்வொரு ஆண்டும் வேறுபடும்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை போல நீட் தேர்வும் ஒரு சாதாரண தேர்வுதான் என்ற மனநிலையில் மாணவர்கள் தைரியத்துடனும் ஆழ்ந்து படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் வினாக்களுக்கு விடைகள் பக்கம், பக்கமாக எழுதுவது போல் நீட் தேர்வில் தேவையில்லை. மாநில பாடத்திட்டத்தில் படித்து விட்டு சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வினாப் புத்தகங்கள் கொடுக்கப்படுகிறது. குறைந்த கால அவகாசத்தில் இதை படித்து தயாராக வேண்டும் என்ற மன பயம் இருக்கக் கூடாது.
சி.பி.எஸ்.சி என்பது நீட் தேர்வை நடத்தும் அமைப்புதான். பாடத்திட்டத்திற்கும் அந்த அமைப்பிற்கும் தொடர்பு கிடையாது. பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகள் தான் வரும் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். பொதுத் தேர்வு எழுதி முடித்தபிறகு கிடைக்கின்ற சுமார் 50 நாட்களில் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பாடங்களை நாட்களை ஒதுக்கி திட்டமிட்டு படிக்கவேண்டும்.
பலமுறை எழுதி பார்க்க வேண்டும். அவற்றை திருத்தி தவறுகளை தெரிந்துகொள்ளவேண்டும் வேதியியல் இயற்பியல் பார்முலாக்களை தொகுத்து வைத்து பலமுறை படித்து பார்த்து மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். சிபிஎஸ்சி இணையதளத்தில் https://cbseneet.nic.in/cbseneet/Online பாடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அவற்றையும் பழைய வினாத்தாள்களையும் தரவிறக்கி முழுமையாக படிக்க வேண்டும். இளம் வயதில் வாய்பாடுகள் வேகமாக சொல்லும்போது திடீர் என தடைபடும். அப்போது முதலில் இருந்து சொன்னால்தான் விட்ட இடத்தில் இருந்து தொடர்ச்சி நினைவிற்கு வரும். உதாரணமாக இரண்டாம் வாய்பாடு என்றால் இரண்டு இரண்டாக பெருக்கல் அல்லது கூட்டல் என்கிற அடிப்படையை புரிந்து கொண்டால் வாய்பாடு தடைபடாமல் எளிமையாகி விடும். அதுபோல நீட் தேர்வில் மொத்தமுள்ள நான்கு கேள்விகளில் எது சரியான விடை என்று கண்டறிந்து படித்து தயார் ஆவதை போல மற்ற மூன்று பதில்கள் ஏன் தவறானது என்கிற அடிப்படையை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் கேள்விகள் எந்த வடிவத்தில் வந்தாலும் எளிமையாக பதில் தர முடியும்.
தமிழக அரசு நீட் தேர்வுக்கான தொடுவானம் பயிற்சி மையத்தையும் நடத்தி வருகிறது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பயிற்சி நடத்துகிறது. சி.பி.எஸ்.சி பாட புத்தகத்தின் அடிப்படையில் நீட் தேர்வுக்கான 10 பாகங்களை கொண்ட புத்தகங்களையும் தயாரித்துள்ளது. அவற்றையும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
தேர்வுகுறித்த வழக்கமான மிகையான பயம் இல்லாமல் மன தைரியத்துடன் மாணவர்கள் இந்த தேர்வையும் சாதாரணமாக எழுதி வெற்றி பெற முடியும். அதற்காக உரிய முறையில் தங்களை தயார்படுத்திக் கொள்வதே முக்கியம்.
இத்தேர்வு குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி மதியழகன் கூறுகையில், நீட் என்னும் தகுதித்தேர்வு, தாவரயியல், விலங்கியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் 45 வினாக்கள் வீதம் மொத்தம் 180வினாக்களையும் ஒவ்வொரு விடைக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண்களையும் கொண்டதாகும்.
தமிழக அரசின் பாட திட்டத்தின்படி தேர்வு எழுதும் மாணவர்கள் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடத்தினை வரிக்கு வரி முழுமையாகவும் ஆழ்ந்தும் படித்தல் அவசியம். கூடுதலாக மத்திய பாடதிட்டத்தின் 8ஆம் வகுப்பு 9 மற்றும் 10ஆம் வகுப்பு புத்தகங்களை படித்து செல்வது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
தேர்வு நேரத்தை முறையாக கணக்கிட்டு முதலில் உயிர் அறிவியல் பின்னர் வேதியியல் அதை தொடர்ந்து இயற்பியல் வினாக்களுக்கு விடையளிப்பது நல்லது. இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் கணித அடிப்படையிலான வினாக்கள் கேட்கப்படும். அவற்றை நன்றாக பயிற்சி செய்துகொண்டு விரைவாக விடையளிக்கவேண்டும். முந்தைய தேர்வுதாள்களையும் தமிழக அரசு வழங்கியுள்ள வினா வங்கியையும் முழுமையாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். தேர்வுபயம் நீங்கி தெளிவாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்று அதிக மாணவர்கள் மருத்துவ மாணவராக தேர்வுபெறவேண்டும்.
இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அதிகாரி வீ.மதியழகன் தெரிவித்தார்.
நடைபெற உள்ள நீட் பொதுத்தேர்வை தமிழக மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுதி அதிக மாணவமாணவிகள் தேர்வாகிட வாழ்த்துக்கள். இந்த நீட் தேர்வு சிறப்பு மையங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வித் துறையில் ஒரு பெரிய புரட்சியையே இந்த அரசு ஏற்படுத்தி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 6 days ago |
-
ஏறுமுகத்தில் தங்கம் விலை
03 Jul 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 3) பவுனுக்கு ரூ.320 உயர்ந்து விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோர் மத
-
உதயநிதிக்கு கம்ப்யூட்டர் மைண்ட்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
03 Jul 2025வேலூர்: துணை முதல்வர் உதயநிதிக்கு அவரது தாத்தா கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட் என துரை முருகன் பேசினார்.
-
1,000 ரூபாய் பயண அட்டை மின்சார பஸ்களில் செல்லுமா? போக்குவரத்து கழகம் விளக்கம்
03 Jul 2025சென்னை, மின்சார பஸ்களில் பயண அட்டை செல்லுமா என்பது குறித்து போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
-
அடுத்த 2 நாட்களுக்கு கோவை, நீலகிரியில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Jul 2025சென்னை, தமிழகத்தில் நீலகிரி கோவையில் ஜூலை 5 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: அணையின் நீர்மட்டமும் சரிவு
03 Jul 2025சேலம், மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, காவிரி ஆற்றிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியாக சரிந்தது அணையின் நீர்வரத்துக் குறைந்த
-
தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு
03 Jul 2025சென்னை: த.வெ.க.
-
வரும் 19-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு
03 Jul 2025புதுடெல்லி, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி வருகிற ஜூலை 19-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
மாலியில் இந்தியர்கள் 3 பேர் கடத்தல்: பத்திரமாக மீட்க இந்தியா கோரிக்கை
03 Jul 2025புதுடெல்லி, மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கேய்ஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து கடத்தப்பட்ட 3 இந்திய தொழிலாளர்களை உடனடியாக மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவு
-
40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை தரமணியில் 'தமிழ் அறிவு வளாகம்' முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
03 Jul 2025சென்னை, 40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
விரைவில் கையெழுத்தாகிறது இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்
03 Jul 2025புதுடெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது.
-
கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம் பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது
03 Jul 2025திருவனந்தபுரம்: பிரிட்டனின் எப்-35 போர் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விம
-
20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர்: 'நீட்' மறுதேர்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Jul 2025சென்னை, நீட் தேர்வின்போது மின் தடையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மறு தேர்வு நடத்த கோரிய மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
காவலாளி அஜித்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் விசாரணை
03 Jul 2025திருப்புவனம்: திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு தமிழக மாநில மனித உரிமை ஆணையம் எடுத்தது.
-
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்
03 Jul 2025டெல்லி, பிரதமர் மோடிககு கானா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
-
இந்தியாவில் ஹாக்கி விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி
03 Jul 2025புதுடில்லி: அடுத்த மாதம் இந்தியாவின் பீஹாரில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
-
நம்பிக்கையளிக்கும் கில்: ஜோனதன் டிராட் புகழாரம்
03 Jul 2025பர்மிங்ஹாம்: இந்திய அணி வீரர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் விதமாக ஷுப்மன் கில் விளையாடுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் பாராட்டியுள்ளார்.
-
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா: பதக்கங்களை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வழங்கினார்
03 Jul 2025சென்னை, மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழாவில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கினார்.
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீத வரி: அமைச்சர் ஜெய்சங்கர் கவலை
03 Jul 2025வாஷிங்டன்: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்க முன்மொழியும் அமெரிக்க மசோதா குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
-
4-வது முறையாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட்..!
03 Jul 2025வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் 4-வது முறையாக தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
-
அடுத்த புத்த மதத் தலைவரை சீனா தீர்மானிக்க முடியாது: இந்தியா பதிலடி
03 Jul 2025புதுடெல்லி: “அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரான தலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து
-
புதிதாக 14 பேருக்கு தொற்று: மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
03 Jul 2025புனே: மகாராஷ்டிராவில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
-
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
03 Jul 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
-
'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம் துவக்கம்: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்தார்
03 Jul 2025சென்னை, சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
-
விவசாயிகள் தற்கொலை: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்
03 Jul 2025புதுடெல்லி: மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை சுட்டிக்காட்டி, “விவசாயிகள் கடனில் மூழ்குகிறார்கள் ஆனால், அரசோ அலட்சியமாக இருக்கிறது” என