முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் நடந்த சம்பவம்: 7 மணி நேரத்தில் 10 இடங்களில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி

திங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவில் 7 மணி நேரத்தில் பத்து இடங்களில் நடந்த வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ப்ரெட் வாலர் கூறும் போது,

சிகாகோ நகரில் 7 மணி நேரங்களில் சுமார் பத்து துப்பாக்கிச் சூடுகள் வெவ்வேறு இடங்களில் நடந்தன. இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 5 பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  இந்தத் துப்பாக்கிச் சூடு சில இடங்களில் இலக்கு வைத்தும், சில இடங்களில் கும்பல் மோதலாகவும் நடந்துள்ளது. துப்பாக்கிச் சூடுகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச் சூடு அதிகஅளவில் நடந்து வரும் இடமாக சிகாகோ மாறியுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து