முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் - திருப்பதியில் விரைவில் அறிமுகம்

சனிக்கிழமை, 20 ஜூலை 2019      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை : ரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் திருப்பதியில் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார். மேலும் தினந்தோறும் 3 மணி நேரத்திற்கு மேல் வி.ஐ.பி. தரிசனம் நடைபெற்றது எனவும், வி.ஐ.பி.களுக்கு ஒதுக்கக்கூடிய நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு 5 ஆயிரம் பேர் வரை பொது தரிசனத்தில் சுவாமியை தரிசிக்கலாம் எனவும் சுப்பாரெட்டி கூறினார்.

இந்நிலையில், தற்போது கொண்டு வரப்பட உள்ள புதிய திட்டத்தை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் துவங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்களை அமைத்து வருகிறது புதிதாக துவங்கப்பட்ட ஸ்ரீவாணி டிரஸ்டிற்கு ரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் என்பது தான் இந்த புதிய முறை. சாமானிய பக்தர்களின் மீது கவனம் செலுத்துவதற்காகவும், ஸ்ரீவாணி டிரஸ்ட் நன்கொடையை அதிகரிக்க செய்யவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து