முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் 7-ம் தேதி நிறை புத்தரிசி பூஜை

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2019      ஆன்மிகம்
Image Unavailable

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அறுவடை விழாவின் தொடக்கமாக சகல ஐஸ்வர்யம் கிடைக்கவும், செல்வம் பெருகவும் நடத்தப்படும் நிறை புத்தரிசி பூஜை வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அறுவடை விழாவின் தொடக்கமாக சகல ஐஸ்வர்யம் கிடைக்கவும், செல்வம் பெருகவும் ஆண்டுதோறும் நிறை புத்தரிசி பூஜை நடைபெற்று வருகிறது. அப்போது, விளைந்த நெற்கதிர்களை கோவில் சன்னிதானத்தில் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த ஆண்டில் நிறை புத்தரிசி பூஜை வழிபாடு வருகிற 7- ம் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை வருகிற 7- ம் தேதி நடக்கிறது. இதற்காக கோவில் நடை 6- ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். மறுநாள் நிறைபுத்தரிசி பூஜைகள் நடத்தப்படும். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும். பின்னர், இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16- ம் தேதி மாலை திறக்கப்படும். 17- ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து