எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- புயல், மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாத்து மீட்க முன்எச்சரிக்கை ஒத்திகை நடைபெற்றது. இதில் கலெக்டர் வீரராகவராவ் கலந்து கொண்டு ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், தொண்டியில் நடைபெற்ற புயல் மற்றும் வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, பொதுமக்களுக்கான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை மாவட்ட கலெக்டர் வீர ராகவ ராவ் நேரில் சென்று பார்வையிட்டு அலுவலர்களிடத்தில் அறிவுரை வழங்கினார். தமிழ்நாடு மற்றும் பிற கடலோர மாநிலங்களின் புயல் மற்றும் வெள்ளம் முன்னெச்சரிக்கை பற்றிய விவரங்கள் குறித்து, ஹைதராபாத்தில் உள்ள இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு (ஐNஊழுஐளு) தெரிவிக்கின்றது. புயல் மற்றும் வெள்ளம் வரும்பட்சத்தில், இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பின் மூலமாக புயல் மற்றும் வெள்ளம் எச்சரிக்கை முன் அறிவிப்புகள் பெறப்படும்போது, அத்தகைய எச்சரிக்கை அறிவிப்புகள் மாவட்ட அவசர கால செயலாக்க மையம் வாயிலாக பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த மீட்புக்குழு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் எவ்வாறு சென்றடைகிறது என்பதை கண்காணித்திடும் வகையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும், பொதுமக்களுக்கான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களான திருவாடானை வருவாய் வட்டம், தொண்டி கிராமத்திலும், கீழக்கரை வருவாய் வட்டம், கல்பார் கிராமத்திலும் புயல் மற்றும் வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. அதன்படி, தொண்டியில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகையில் மாவட்ட கலெக்டர் வீர ராகவ ராவ் பங்கேற்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இப்பாதுகாப்பு ஒத்திகையில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, பொதுசுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய பயிற்சி பெற்ற சிறப்பு காவலர்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களும், பேரிடர் முதன்மை பொறுப்பாளர்கள் ஒருங்கிணைந்து வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக மீட்கும் விதமாகவும், மீட்கப்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ உதவி வழங்கி பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்து உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கிடும் வகையில் ஒத்திகை நடத்தப்பட்டது. குறிப்பாக, மழை வெள்ளம் காரணமாக தொண்டி கிராமத்தில் உள்ள தனியார் வணிக வளாகம் இடிந்து விழுந்து 80 பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அவசர கால செயலாக்க மையத்திலிருந்து வயர்லெஸ் மூலம் எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு உடனடியாக தீயணைப்பு மீட்புப்பணிக் குழு மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற காவல்துறை மீட்புக்குழு அலுவலர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களை மீட்கும் வகையில் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, தொண்டி கடற்கரை சாலைப் பகுதியில் உள்ள முருகன் கோவில் பகுதியில் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்து பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கை அறிவிப்பு சம்பந்தப்பட்ட நபர்கள் மீட்புக்குழுவினர் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பு மையங்களில் மருத்துவ உதவி வழங்கிடும் விதமாக ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல மழைவெள்ளம் காரணமாக தொண்டியில் உள்ள தனியார் உணவு விடுதியில் 30 பொதுமக்கள் சிக்கியுள்ளதாகவும், தொண்டியிலுள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி மைய அலுவலகத்தில் 5 நபர்கள் சிக்கியுள்ளதாகவும் எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு மீட்புக்குழு அலுவலர்கள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். தொடர்ந்து, தொண்டி அரசு மருத்துவமனையில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு நோயாளிகள் பாதிக்கப்படுவதாக எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வகையில் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, தொண்டி கிராமப் பகுதியில் தேங்கியுள்ள மழை வெள்ளத்தில் முதலை தென்படுவதாக பொதுமக்கள் தகவல் தெரிவிப்பதாக எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு உடனடியாக வனத்துறையின் மூலமும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் மாசு ஏற்பட்டு சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக எச்சரிக்கை தகவல் அறிவிப்பு வழங்கப்பட்டு பொது சுகாதாரத் துறையின் மூலம் போர்க்கால அடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதேபோல, கீழக்கரை வருவாய் வட்டம், கல்பார் கிராமத்திலும் பல்வேறு அவசரகால எச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டு பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த பாதுகாப்பு ஒத்திகையில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் மரு.ஆர்.சுமன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் முருகன், காவல்துணை கண்காணிப்பாளர் (பொ) திரு.ஆர்.சுரேஷ்குமார், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் தொண்டி நிலைய அலுவலர் ஜெ.அருளானந்து, வட்டார மருத்துவ அலுவலர் மரு.கார்த்திகேஷ்வரன், உதவி ஆட்சியர்கள் (பயிற்சி) ஜெ.சரவணக்கண்ணன், எம்.கோகிலா, செஞ்சிலுவைச்சங்க மாவட்டச்செயலர் ராக்லண்ட் மதுரம் உட்பட அரசு அலுவலர்கள், பேரிடர் முதன்மை பொறுப்பாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.