எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், -திண்டுக்கல் அருகே நடந்த கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திண்டுக்கல் அருகிலுள்ள கம்பிளியம்பட்டி ஆண்டியபட்டியில் மகாலட்சுமி, ஸ்ரீகருப்பசாமி கோவிலில் ஆடித்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும். ஆடிப்பெருக்கை முன்னிட்டு நடைபெறும் இத்திருவிழாவில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் நடந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபட்டனர். சுவாமிக்கு பல்வேறு நேர்த்திக்கடன்கள் செலுத்தியும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர். விழாவின் ஒரு பகுதியாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன்படி சுவாமிக்கு நேர்த்திக்கடன் வைத்திருந்த பக்தர்கள் கோவில் முன்பு வரிசையாக அமர வைக்கப்பட்டனர். அவர்களின் தலையின் மீது கோவில் பூசாரி தனது வாயில் துணியை மூடியவாறு தேங்காயை உடைத்தார். இந்நிகழ்ச்சியைக் காண சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர். விழா முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு கிராமமே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


