எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெய்ஜிங் : லெகிமா புயல் சீனாவின் கிழக்குப் பகுதிகளைத் தாக்கியதில் 13 பேர் பலியானதாகவும். 16 பேர் மாயமாகியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஊடகங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
சீனாவின் கிழக்குப் பகுதிகளில் லெகிமா புயல் தாக்கியது. இதில் வென்சுவா மாநகராட்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. புயலைத் தொடர்ந்து கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. லெகிமா புயல் தாக்கியதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். 16 பேர் மாயமாகியுள்ளனர் என்று செய்தி வெளியிட்டுள்ளது. புயல் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தப் புயல் காரணமாக அன்ஹு, ஜிலங்சூ, ஷாங்காய் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கிழக்குப் பகுதிகளில் அதிகம் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து இடம் பெயர்ந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு சீனாவைத் தாக்கிய சக்தி வாய்ந்த புயலாக லெகிமா புயல் கருதப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


