எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : 370-வது சட்டம் ரத்து செய்யப்பட்டதைத்தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தொடர்பான ஆவண புத்தகத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் நேற்று வெளியிட்டார். மாநிலங்களவைத் தலைவராக உள்ள துணை ஜனாதிபதியின் சாதனைகளையும், மாநிலங்களவையின் செயல்திறனையும், ஆற்றலையும் உயர்த்துவதற்கான இவரின் முன்முயற்சிகளையும் இந்த நூல் எடுத்துரைக்கிறது. இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்கினார்.
மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க. தலைவருமான அமித்ஷா புத்தகத்தை வெளியிட்டார். இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த், ராஜஸ்தான் மத்திய பல்கலை கழக வேந்தர் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், முன்னாள் அட்டர்னி ஜெனரல் பராசரன், அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, வி.ஐ.டி. வேந்தர் ஜி.விஸ்வநாதன், பேட்மிண்டன் அணியின் இந்திய பயிற்சியாளர் கோபிசந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்தநிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:-
தமிழில் பேச எனக்கு ஆர்வம் உண்டு. நான் முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால் பேச முடியாமல் போனது. நிச்சயம் விரைவில் பேசுவேன். உள்துறை அமைச்சர் என்ற முறையிலோ பா.ஜ.க. தலைவர் என்ற முறையிலோ நான் வரவில்லை. வெங்கையா நாயுடுவின் மாணவர் என்ற முறையில் நான் பங்கேற்றுள்ளேன். அவரது வாழ்க்கை மாணவர்கள், இளைஞர்கள் கற்று கொள்வதற்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது.
காஷ்மீரில் 370-வது சட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என வெங்கையா நாயுடு போராடினார். காஷ்மீர் பிரச்னையை ஒரு கண்ணில் அடிபட்டால் மற்ற கண்ணில் வலி ஏற்படுவது போல் என அவர் கூறியுள்ளார். 370-வது சட்ட மசோதா ரத்து செய்யப்பட்ட போது வெங்கையா துணை ஜனாதிபதியாகவும், ராஜ்யசபா தலைவராகவும் இருந்தார் என்பது தனிச்சிறப்பு ஆகும். 370-வது சட்டம் ரத்து செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். 370-வது சட்டம் ரத்துக்கு பிறகு, மற்றவர்களுக்கு குழப்பம், ஆனால் நான் தெளிவாக இருந்தேன். மேலும் இந்த சட்ட ரத்து மூலம் பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் .
அவரது வாழ்நாளில் ஏ.பி.வி.பி., சட்டசபை உறுப்பினர், சிறைவாசம் என பா.ஜ.க.வில் போராட்டங்களுடன் அந்த அளவுக்கு உயர்ந்த பதவிக்கு வந்துள்ளார். அனைவருக்கும் அறிவுரை கூறி கட்சியை வளர்த்தவர். மத்திய அமைச்சராக இருந்த போது தான் ஸ்மார்ட்சிட்டி கொண்டு வரப்பட்டது. அவசர நிலை கொண்டு வந்த போது அவர் சிறைவாசம் அனுபவித்தார். 19 நாடுகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். யாரும் செல்லாத நாடுகளுக்கு வெங்கையா சென்றார். கவனித்தல், கற்றல், தலைமையேற்றல் என்ற நூல் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் வழிகாட்டியாக இருக்கும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கயைா நாயுடு பேசியதாவது:
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி. மாணவர்கள் எல்லோரும் எப்போதும் கற்கும் ஆர்வம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். நான் பொதுவாழ்வில் பலரிடம் பாடம் கற்றுள்ளேன். பொருளீட்டும் முன் கல்வி அவசியம், பொருளீட்டும் போது கற்றல் அவசியம். நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும் சோர்ந்து விடவில்லை. நான் வசதி கொண்ட குடும்பத்தில் இருந்து நான் வரவில்லை. எனக்கு எந்தவொரு அரசியல் குடும்பமும் உதவி செய்யவில்லை. சாதாரணமாக பணியை துவக்கினேன். வாஜ்பாயின் வருகையை சுவரில் எழுதியவன். வாஜ்பாய் அருகில் தலைவராக அமர்ந்தேன். விவசாயி மகனான நான் துணை ஜனாதிபதியாக வந்த போது கண்ணீர் விட்டேன். நான் ஒன்றும் இந்த பதவிக்கு வர வேண்டும் என விரும்பியது இல்லை. கட்சி பணிகளை பார்க்க முடியாதே என்று வருந்தினேன். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இவ்வாறு வெங்கையா பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தி.மலை கோவிலில் பரபரப்பு: போலீசார் - ஆந்திர பக்தர்களிடையே வாக்குவாதம்
06 Dec 2025திருவண்ணாமலை கோவிலில் போலீசார் மற்றும் ஆந்திர பக்தர்களிடையே மோதல் ஏற்பட்டது.
-
குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
06 Dec 2025சென்னை, சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தங்கம் விலை உயர்வு
06 Dec 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-12-2025.
06 Dec 2025 -
ஒரேநாளில் இண்டிகோ 1,000 விமானங்கள் ரத்து
06 Dec 2025டெல்லி, ஒரேநாளில் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு இண்டிகோ நிறுவனம் திணறி வருகிறது.
-
இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆந்திர துணை முதல்வர் கருத்து
06 Dec 2025சென்னை, இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும் என்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார்.
-
2 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி
06 Dec 2025இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
-
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு: காங்., மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை சந்திப்பு
06 Dec 2025திருச்சி, காங்கிரஸ் மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் திடீர் சந்தித்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் 2 பேர் விலகல்
06 Dec 2025கேப்டவுன் : இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான டோனி டி சோர்ஜி மற்றும் குவேனா மபாகா விலகியுள்ளனர்.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணி: 99.81 சதவீதம் பேருக்கு படிவங்கள் விநியோகம்
06 Dec 2025சென்னை, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு 99.81 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு வடிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
-
மேகதாது அணை திட்ட அறிக்கை: திருப்பி அனுப்பியது காவிரி மேலாண்மை ஆணையம்
06 Dec 2025தஞ்சாவூர், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணையை காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், மேகதாது அணை திட்ட அறிக்கையை மத்
-
திருச்செந்தூரில் தீடீரென 75 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்...!
06 Dec 2025தூத்துக்குடி : திருச்செந்தூரில் திடீரென 75 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 265 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
06 Dec 2025சென்னை, முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் சமூக நல்லிணக்கத்துடன் வாழும் 10 கிராம ஊராட்சிகளுக்கு விருது, கல்வி உதவித்தொகை, சுயதொழில் புரிந்திட கடனுதவி என ரூ.26
-
காதலியுடன் ஆடம்பரமாக வாழ திருடிய வாலிபர் உள்பட 2 பேர் கைது
06 Dec 2025பெங்களூரு, காதலியுடன் ஆடம்பரமாக வாழவே திருடிய வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
டெல்லி காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு புகார்
06 Dec 2025புதுடெல்லி, டெல்லி பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பில் ஜி.கே.மணி புகார் அளித்துள்ளார்.
-
மேலமடை சந்திப்பு மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
06 Dec 2025சென்னை, இன்று திறந்து வைக்கப்படவுள்ள மதுரை - சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் மேலமடை சந்திப்பு சாலை மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரை சூட்டிப் பெருமையடைகிறோ
-
வக்ப் உரிமையை காக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
06 Dec 2025சென்னை : வக்ப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
இம்மாத இறுதியில் மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாக வாய்ப்பு: தமிழகத்திற்கு அதிக மழை பொழிவு இருக்கும்
06 Dec 2025சென்னை, வடகிழக்கு பருவமழை காலத்தின் 3-வது புயல் சின்னம் தெற்கு வங்கக்கடலில் 23-ம் தேதிக்கு பிறகு உருவாவதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது என்று தனியார் வானிலை ஆய்வாளர்
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் ஆஸி., 511 ரன்களுக்கு ஆல்-அவுட்
06 Dec 2025பிரிஸ்பேன் : ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 511 ரன்களுக்கு ஆல்-அவுடானது.
-
தெலுங்கானாவில் பரபரப்பு: 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
06 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
புதிய விதிகளை ஏற்க மறுப்பு: மஸ்கின் எக்ஸ் நிறுவனத்துக்கு 1,250 கோடி ரூபாய் அபராதம்
06 Dec 2025லண்டன், எலான் மஸ்க் எக்ஸ் வலைத்தள நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
விஜய் - சக்கரவர்த்தி சந்திப்பு: செல்வப்பெருந்தகை கருத்து
06 Dec 2025சென்னை, விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
-
நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
06 Dec 2025சென்னை, நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
இண்டிகோ விமான சேவை பாதிப்பு: விமான டிக்கெட் விலை கடும் உயர்வு
06 Dec 2025டெல்லி, இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டதையடுத்து விமான டிக்கெட்டின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.சென்னையில் இருந்து கோவைக்கு விமான டிக்கெட் விலை வழக்கமாக ரூ.5 ஆயிரத்து
-
இண்டிகோ விமான விவகாரம்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு
06 Dec 2025புதுடெல்லி, இண்டிகோ பிரச்சினை மத்திய அரசின் ஏகபோக மாடலின் விலை என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.


