எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : மேட்டூர் அணையிலிருந்து கொள்ளிடம் வரை 5 தடுப்பணைகள் கட்டுவதற்கு திட்டம் தீட்டப்பட்டிருக்கின்றது. 2 தடுப்பணைகள் கட்டுவதற்கு அனுமதி கொடுத்து விட்டோம். மேலும் 3 தடுப்பணைகள் கட்ட அரசு பரிசீலனை செய்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மேட்டூர் அணையிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தண்ணீர் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மேட்டூர் அணை தற்போது 101 அடியை எட்டியுள்ளது. அணையில் 66 டி.எம்.சி தண்ணீர் இருக்கிறது. மேலும் இப்பொழுது 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆகவே, அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். இன்னும் பருவ மழை பெய்யவில்லையே, இன்றைக்கு விவசாயிகளுக்கெல்லாம் தண்ணீரை எப்படி திறப்பது என்று எண்ணிக் கொண்டு வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன். திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து விட்ட வந்தவுடனே மழை பொழியும். ஆனால் இந்த முறை கொஞ்சம் காலதாமதமாக பெய்திருக்கிறது. இருந்தாலும், நாம் நினைத்தபடி எல்லாம் வல்ல இறைவனுடைய அருளால், ஏழுமலையானுடைய அருளாசியோடு, இன்றைய தினம் மேட்டூர் அணைக்கு சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆகவே, அணை முழு கொள்ளளவை எட்டும். விவசாயப் பெருமக்களுக்குத் தேவையான நீர் முழுவதும் இந்த ஆண்டு வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயப் பெருங்குடி மக்கள் பாசன வசதியை பெறுவர் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு இந்த தண்ணீர் திறப்பின் மூலமாக, சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகின்றது. மிகப்பெரிய பாசனம் பெறுகின்ற ஒரு ஜீவநதி என்று சொன்னால் அது காவேரி நதி தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு தேவைப்படும் மொத்த நீரின் அளவு சுமார் 339 டி.எம்.சி. ஆகும். மேட்டூர் அணையிலிருந்து 220 டி.எம்.சி. தண்ணீர் மற்றும் மீதமுள்ள 119 டி.எம்.சி. தண்ணீர் வடகிழக்கு பருவமழை மூலமும் உறுதி செய்யப்படும். மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய்களுக்கு இன்று(நேற்று) முதல் 132 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படும். இதனால் சுமார் 45,000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுவதால் ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயப் பெருமக்கள் பயன்பெறுவார்கள். இதற்காக சுமார் 9.6 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். மேலும் காவேரி ஆற்றிலிருந்து சுமார் 155 திட்டங்களின் மூலம் தினசரி 1700 மில்லியன் லிட்டருக்கும் மேற்பட்ட தண்ணீர் 8 மாவட்டங்களிலுள்ள பொதுமக்களின் குடிநீருக்காக பயன்படுத்தப்படுகின்றது. மேலும், 20 மாவட்ட மக்களுக்கு காவேரி நீர் குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.
அதுமட்டுமல்லாமல், நீர் மின் நிலையம் மூலம் 50 மெகாவாட் மின்சாரமும், சுரங்க மின் நிலையங்கள் மூலம் 200 மெகாவாட் மின்சாரமும், ஆக மொத்தம் 250 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்கின்றது. மேலும், காவேரி ஆற்றின் குறுக்கே உள்ள 7 கதவணை நீர் மின் நிலையங்கள் மூலம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூர் அணை கட்டப்பட்டதிலிருந்து பல்லாண்டு காலமாக தூர்வாரப்படாமல் இருந்தது. அந்த தூர்வாருகின்ற நிகழ்ச்சியும் இந்த ஆட்சியில்தான் நடைபெற்றது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், 1949 விவசாயிகள் 2.70 லட்சம் கனமீட்டர் அளவு வண்டல் மண்ணை எடுத்துச் சென்று பயனடைந்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி தண்ணீர் திறந்து விடுகின்ற பொழுது 109 அடி இருந்தது. அணையினுடைய நீரின் அளவு 71 டி.எம்.சி. இருந்தது. சென்ற ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து 210 டி.எம்.சி. தண்ணீர் பாசனத்திற்காக நாம் திறந்து விட்டோம். அதுமட்டுமல்லாமல், விவசாய மக்களுக்கு போதுமான விதை, நெல், உரம் ஆகியவையெல்லாம் இன்றைக்கு இருப்பு இருக்கின்றது. விவசாயிகளுக்கு தேவையான அளவு உரிய நேரத்தில் வழங்கப்படும். காவேரி டெல்டா விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் மேட்டூர் கால்வாய் பாசன பகுதி விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவரும் நீரை பங்கீட்டு, நிலைமைக்கேற்ப தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைக்குமாறும், மிக அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண்டுமென்றும் விவசாயப் பெருங்கடி மக்களை கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆண்டு வருண பகவானின் கருணையால் டெல்டா பாசன விவசாயிகளுக்குத் தேவையான நீர் வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
குடிமராமத்துத் திட்டத்தை பொறுத்தவரைக்கும் முழுக்க முழுக்க விவசாயிகள்தான் அந்தத் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவாக, இந்தத் திட்டம் ஒரு வெற்றிகரமாக அமையும் என்ற முறையிலே இந்தத் திட்டத்தை நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். 2017-2018-ஆம் ஆண்டு 1,519 ஏரிகளுக்கு பரிட்சார்த்த முறையில் ரூ. 100 கோடி ஒதுக்கி அந்தப் பணியை துவக்கினோம். விவசாயிகளிடத்திலே அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததன் விளைவாக, 2018-2019-ம் ஆண்டு 1,511 ஏரிகள் எடுக்கப்பட்டு ரூ. 328 கோடி இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தப் பணி முடிவுறும் நிலையில் இருக்கின்றது. விவசாயிகளுடைய கோரிக்கையை ஏற்று, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, அந்தத் திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக சுமார் ரூ. 500 கோடி மதிப்பீட்டில், சுமார் 1,829 ஏரிகள் இந்த ஆண்டு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. பொதுப்பணித் துறையின் கீழ் இருக்கின்ற 14,000 ஏரிகளும் படிப்படியாக தூர்வாரப்படும். ஆகவே, பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி, குளம், குட்டை போன்றவற்றை தூர்வாருவதற்கு ரூபாய் 1,250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தப் பணியும் இன்றைக்கு துவங்கப்பட்டு விட்டது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இருக்கின்ற குளங்கள், ஏரிகள், குட்டைகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு, பெய்கின்ற மழைநீர் முழுவதும் சேமித்து வைக்கக்கூடிய சூழ்நிலையை இந்த அரசு திட்டமிட்டு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகக் கூடாது என்பதற்காக ஓடையின் குறுக்கே, நதிகளின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுகின்றது. இதற்காக அரசால் ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூபாய் 600 கோடி செலவழிக்க திட்டம் தீட்டப்பட்டு செயலாக்கத்திற்கு வந்திருக்கின்றன. மேட்டூர் அணையிலிருந்து கொள்ளிடம் வரை கிட்டத்தட்ட 5 தடுப்பணைகள் கட்டுவதற்கு திட்டம் தீட்டப்பட்டிருக்கின்றது. 2 தடுப்பணைகள் கட்டுவதற்கு அனுமதி கொடுத்து விட்டோம். மேலும் 3 தடுப்பணைகள் கட்டுவதற்கு அரசின் பரிசீலனையில் உள்ளது. அதற்குண்டான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கின்ற பணி நடைபெற்று வருகின்றது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு
21 Oct 2025சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025 -
வட தமிழகத்தை நோக்கி நகர்கிறது புயல் சின்னம் : 15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
21 Oct 2025சென்னை, வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக தீவிரமாகும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், புயல் சின்னம் வட தமிழகத்தை நோக்கி நகர்வதாக தெரிவ
-
தங்கம் விலை சற்று சரிவு
21 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று மாலை (அக். 21) சவரனுக்கு ரூ.1,440 குறைந்து விற்பனையானது. காலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.
-
விருதுநகரில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி : அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
21 Oct 2025விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ந
-
மழை வெள்ள முன்னேற்பாடு பணிகள்: சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
21 Oct 2025சென்னை : சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
21 Oct 2025புதுடெல்லி : வட கிழக்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட 10 மாவட்டங
-
நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
21 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளா
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை
21 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
-
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம்
21 Oct 2025புதுடெல்லி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
-
நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
21 Oct 2025புதுடெல்லி, நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம் என நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு
21 Oct 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
21 Oct 2025மதுரை, மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
-
ஊட்டி மலை ரயில் ரத்து
21 Oct 2025மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் ரத்துசெய்யப்பட்டது. இதனால் சற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 8 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
21 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உள்ளிட்ட 8 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதல்
-
நடப்பு ஆண்டில் 7-வது முறையாக நிரம்பியது: மேட்டூர் அணையில் இருந்து 34 அயிரம் கன அடி நீர் திறப்பு
21 Oct 2025மேட்டூர் : காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, நடப்பாண்டில் மேட்டூர் அணை 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
போர்க்கால அடிப்படையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
21 Oct 2025சென்னை, போர்க்கால அடிப்படையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அ.தி.மு.க.
-
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியாது - ஆர்.பி.உதயகுமார் தகவல்
21 Oct 2025சென்னை : தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
-
பரூக் அப்துல்லா பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
21 Oct 2025சென்னை : காஷ்மீரின் உரிமைகளுக்காக போராடி வரும் பரூக் அப்துல்லா பிறந்த நாள் வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
காவலர் வீரவணக்க நாள்: முதல் முறையாக காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
21 Oct 2025சென்னை, காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
-
பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டம்: டெல்லியில் 15 மடங்கு அதிகரித்த காற்று மாசு
21 Oct 2025புதுடெல்லி : டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து மக்கள் 'பட்டாசு தீபாவளி'யை கொண்டாடியதன் எதிரொலியாக, உலக சுகாதார நிறுவனம் நிர்
-
சபரிமலையில் தங்கம் மாயம்: ஐகோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல்
21 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் தங்கம் மாயம் ஆனதை தொடர்ந்து ஐகோர்ட்டில் முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு 10 பேர் மது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
-
சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 151 மெ.டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
21 Oct 2025சென்னை : சென்னையில் கடந்த 3 நாட்களில் 151 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
-
எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு
21 Oct 2025வாஷிங்டன், எச்-1 பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
கனமழையால் நாகை, திருவாரூரில் நீரில் மூழ்கிய குறுவை நெற்பயிர்கள்
21 Oct 2025நாகப்பட்டினம் : நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழைக்காரணமாக அயிரக்கனக்கான குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.