எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மேட்டூர் அணையிலிருந்து கொள்ளிடம் வரை 5 தடுப்பணைகள் கட்டுவதற்கு திட்டம் தீட்டப்பட்டிருக்கின்றது. 2 தடுப்பணைகள் கட்டுவதற்கு அனுமதி கொடுத்து விட்டோம். மேலும் 3 தடுப்பணைகள் கட்ட அரசு பரிசீலனை செய்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மேட்டூர் அணையிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தண்ணீர் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மேட்டூர் அணை தற்போது 101 அடியை எட்டியுள்ளது. அணையில் 66 டி.எம்.சி தண்ணீர் இருக்கிறது. மேலும் இப்பொழுது 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆகவே, அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். இன்னும் பருவ மழை பெய்யவில்லையே, இன்றைக்கு விவசாயிகளுக்கெல்லாம் தண்ணீரை எப்படி திறப்பது என்று எண்ணிக் கொண்டு வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன். திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து விட்ட வந்தவுடனே மழை பொழியும். ஆனால் இந்த முறை கொஞ்சம் காலதாமதமாக பெய்திருக்கிறது. இருந்தாலும், நாம் நினைத்தபடி எல்லாம் வல்ல இறைவனுடைய அருளால், ஏழுமலையானுடைய அருளாசியோடு, இன்றைய தினம் மேட்டூர் அணைக்கு சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆகவே, அணை முழு கொள்ளளவை எட்டும். விவசாயப் பெருமக்களுக்குத் தேவையான நீர் முழுவதும் இந்த ஆண்டு வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயப் பெருங்குடி மக்கள் பாசன வசதியை பெறுவர் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு இந்த தண்ணீர் திறப்பின் மூலமாக, சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகின்றது. மிகப்பெரிய பாசனம் பெறுகின்ற ஒரு ஜீவநதி என்று சொன்னால் அது காவேரி நதி தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு தேவைப்படும் மொத்த நீரின் அளவு சுமார் 339 டி.எம்.சி. ஆகும். மேட்டூர் அணையிலிருந்து 220 டி.எம்.சி. தண்ணீர் மற்றும் மீதமுள்ள 119 டி.எம்.சி. தண்ணீர் வடகிழக்கு பருவமழை மூலமும் உறுதி செய்யப்படும். மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய்களுக்கு இன்று(நேற்று) முதல் 132 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படும். இதனால் சுமார் 45,000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுவதால் ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயப் பெருமக்கள் பயன்பெறுவார்கள். இதற்காக சுமார் 9.6 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். மேலும் காவேரி ஆற்றிலிருந்து சுமார் 155 திட்டங்களின் மூலம் தினசரி 1700 மில்லியன் லிட்டருக்கும் மேற்பட்ட தண்ணீர் 8 மாவட்டங்களிலுள்ள பொதுமக்களின் குடிநீருக்காக பயன்படுத்தப்படுகின்றது. மேலும், 20 மாவட்ட மக்களுக்கு காவேரி நீர் குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.
அதுமட்டுமல்லாமல், நீர் மின் நிலையம் மூலம் 50 மெகாவாட் மின்சாரமும், சுரங்க மின் நிலையங்கள் மூலம் 200 மெகாவாட் மின்சாரமும், ஆக மொத்தம் 250 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்கின்றது. மேலும், காவேரி ஆற்றின் குறுக்கே உள்ள 7 கதவணை நீர் மின் நிலையங்கள் மூலம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூர் அணை கட்டப்பட்டதிலிருந்து பல்லாண்டு காலமாக தூர்வாரப்படாமல் இருந்தது. அந்த தூர்வாருகின்ற நிகழ்ச்சியும் இந்த ஆட்சியில்தான் நடைபெற்றது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், 1949 விவசாயிகள் 2.70 லட்சம் கனமீட்டர் அளவு வண்டல் மண்ணை எடுத்துச் சென்று பயனடைந்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி தண்ணீர் திறந்து விடுகின்ற பொழுது 109 அடி இருந்தது. அணையினுடைய நீரின் அளவு 71 டி.எம்.சி. இருந்தது. சென்ற ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து 210 டி.எம்.சி. தண்ணீர் பாசனத்திற்காக நாம் திறந்து விட்டோம். அதுமட்டுமல்லாமல், விவசாய மக்களுக்கு போதுமான விதை, நெல், உரம் ஆகியவையெல்லாம் இன்றைக்கு இருப்பு இருக்கின்றது. விவசாயிகளுக்கு தேவையான அளவு உரிய நேரத்தில் வழங்கப்படும். காவேரி டெல்டா விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் மேட்டூர் கால்வாய் பாசன பகுதி விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவரும் நீரை பங்கீட்டு, நிலைமைக்கேற்ப தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைக்குமாறும், மிக அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண்டுமென்றும் விவசாயப் பெருங்கடி மக்களை கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆண்டு வருண பகவானின் கருணையால் டெல்டா பாசன விவசாயிகளுக்குத் தேவையான நீர் வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
குடிமராமத்துத் திட்டத்தை பொறுத்தவரைக்கும் முழுக்க முழுக்க விவசாயிகள்தான் அந்தத் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவாக, இந்தத் திட்டம் ஒரு வெற்றிகரமாக அமையும் என்ற முறையிலே இந்தத் திட்டத்தை நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். 2017-2018-ஆம் ஆண்டு 1,519 ஏரிகளுக்கு பரிட்சார்த்த முறையில் ரூ. 100 கோடி ஒதுக்கி அந்தப் பணியை துவக்கினோம். விவசாயிகளிடத்திலே அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததன் விளைவாக, 2018-2019-ம் ஆண்டு 1,511 ஏரிகள் எடுக்கப்பட்டு ரூ. 328 கோடி இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தப் பணி முடிவுறும் நிலையில் இருக்கின்றது. விவசாயிகளுடைய கோரிக்கையை ஏற்று, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, அந்தத் திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக சுமார் ரூ. 500 கோடி மதிப்பீட்டில், சுமார் 1,829 ஏரிகள் இந்த ஆண்டு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. பொதுப்பணித் துறையின் கீழ் இருக்கின்ற 14,000 ஏரிகளும் படிப்படியாக தூர்வாரப்படும். ஆகவே, பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி, குளம், குட்டை போன்றவற்றை தூர்வாருவதற்கு ரூபாய் 1,250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தப் பணியும் இன்றைக்கு துவங்கப்பட்டு விட்டது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இருக்கின்ற குளங்கள், ஏரிகள், குட்டைகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு, பெய்கின்ற மழைநீர் முழுவதும் சேமித்து வைக்கக்கூடிய சூழ்நிலையை இந்த அரசு திட்டமிட்டு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகக் கூடாது என்பதற்காக ஓடையின் குறுக்கே, நதிகளின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுகின்றது. இதற்காக அரசால் ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூபாய் 600 கோடி செலவழிக்க திட்டம் தீட்டப்பட்டு செயலாக்கத்திற்கு வந்திருக்கின்றன. மேட்டூர் அணையிலிருந்து கொள்ளிடம் வரை கிட்டத்தட்ட 5 தடுப்பணைகள் கட்டுவதற்கு திட்டம் தீட்டப்பட்டிருக்கின்றது. 2 தடுப்பணைகள் கட்டுவதற்கு அனுமதி கொடுத்து விட்டோம். மேலும் 3 தடுப்பணைகள் கட்டுவதற்கு அரசின் பரிசீலனையில் உள்ளது. அதற்குண்டான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கின்ற பணி நடைபெற்று வருகின்றது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தங்க நகைகள் மீதான கடன்களில் எச்சரிக்கையாக இருக்க நிதி நிறுவனங்கள், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
23 Dec 2025சென்னை, நகைக்கடன் மீதான இடர் மேலாண்மை அதிகரித்துள்ளதால் தங்க நகைகளின் மீது வழங்கப்படும் கடனில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ரிசர்வ் வங்கி
-
எட்டு மாவட்டங்களுக்கு புதிய த.வெ.க. நிர்வாகிகளை நியமனம் செய்தார் விஜய்
23 Dec 2025சென்னை, த.வெ.க.வில் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் விஜய் தெரிவித்தார்.
-
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்த டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ் எத்தனை இடம்
23 Dec 2025சென்னை, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்த டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்பட்ட இடம் வருமாறு.
-
இலங்கை கடற்பைடையால் கைதாகும் தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
23 Dec 2025சென்னை, இலங்கைக் காவலில் உள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நீண்டகால பிரச்சினைக்கு ஒரு நிரந்த
-
சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரண் தி.மு.க. அரசு: கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Dec 2025சென்னை, சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக தி.மு.க.
-
நன்னிலம், மயிலாடுதுறை உள்ளிட்ட 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
23 Dec 2025சென்னை, நன்னிலம், மயிலாடுதுறை, பூம்புகார் தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன்’ சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
-
இந்து இளைஞர் கொலையை கண்டித்து டெல்லியில் வங்காள தேச தூதரகத்தின் முன் இந்து அமைப்பினர் போராட்டம்
23 Dec 2025புதுடெல்லி, வங்காள தேசத்தில் இந்து இளைஞர் கொலையை கண்டித்து டெல்லியில் உள்ள வங்காள தேச தூதரகம் முன் விஸ்வ இந்து பரிஷத் போராட்டம் நடத்தினர்.
-
எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக தேர்தலை எதிர்கொள்வோம்: பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் பேட்டி
23 Dec 2025சென்னை, வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் எதிர்கொள்வோம் என்று தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-12-2025.
23 Dec 2025 -
அமெரிக்கா: சிறிய ரக விமானம் கடலில் விழுந்ததில் 5 பேர் பலி
23 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கெல்வெஸ்டான் நகர் அருகே கடற்பகுதியில் விமானம் சென்றுகொண்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து விபத்துக்குள்ளான
-
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து நிச்சயம் வேண்டும்: அதிபர் ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை
23 Dec 2025நியூயார்க், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து பகுதி நிச்சயமாக வேண்டும் என கூறி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் ஏற்படுவதை நிறுத்தினேன்: டொனால்ட் ட்ரம்ப்
23 Dec 2025வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்கள்
23 Dec 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 75 ஆயிரம் வாக்கு சாவடிகளில் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் வருகிற டிச.
-
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்குகிறது இந்தியா
23 Dec 2025கொழும்பு, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளது.
-
ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
23 Dec 2025மெல்போர்ன், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை நாளை முதல் வழங்கும் இண்டிகோ
23 Dec 2025மும்பை, விமான சேவை ரத்து, தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை டிசம்பர் 26ம் தேதி முதல் வழங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன
-
எப்ஸ்டீன் ஆவணங்களில் நீக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப் படங்கள் மீண்டும் சேர்ப்பு
23 Dec 2025வாஷிங்டன், எப்ஸ்டீன் ஆவணங்களில் இருந்து நீக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப்பின் புகைப்படங்களை அந்நாட்டு நீதித்துறை மீண்டும் சேர்த்துள்ளது.
-
வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
23 Dec 2025சென்னை, சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தமிழக தேர்தல் பா.ஜ.க.
-
6500 கி. எடையுள்ள ’புளு பேர்ட்-6' செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது எல்.வி.எம்.3- எம்.6 ராக்கெட்
23 Dec 2025பெங்களூரு, 6500 கி. எடையுள்ள அமெரிக்காவின் ’புளுபேர்ட்-6′ செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது எல்.வி.எம்.3- எம்.6 ராக்கெட்.
-
பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: 5 காவல் துறை அதிகாரிகள் பலி
23 Dec 2025லாகூர், பாகிஸ்தானில், காவல் துறையினரின் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 காவலர்கள் கொல்லப்பட்டனர்.
-
இ.பி.எஸ். உடன் பேசியது என்ன? நயினார் நாகேந்திரன் விளக்கம்
23 Dec 2025கோவை, அ.தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தையில் ஓ.பன்னீர்செல்வம், தினகரன் குறித்து பேசவில்லை என்றும் தொகுதி பங்கீடு
-
வங்காளதேசத்தில் மேலும் ஒரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச்சூடு - பதற்றம்
23 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தில் மேலும் ஒரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அங்கும் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரதமருடன் நீரஜ் சோப்ரா சந்திப்பு
23 Dec 2025புதுடெல்லி, டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை, தடகள வீரர் நீரஜ் சோப்ரா மற்றும் அவரது மனைவி ஹிமானி மோர் ஆகியோர் நேரில் சந்தித்து உரையாடினார்.
-
கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவமனையில் திடீர் அனுமதி
23 Dec 2025சென்னை, கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவமனையில் நேற்று திடீரென அனுமதிக்கப்பட்ட நிலையில் வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெள
-
முதல் முறையாக ஐ.சி.சி. தரவரிசையில் தீப்தி சர்மா முதலிடம்
23 Dec 2025துபாய், ஐ.சி.சி.யின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.


