எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாளையொட்டி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் அவரது நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினர்.
ராஜீவ் காந்தி கடந்த 1944-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி பிறந்தார். இந்தியாவின் 6-வது பிரதமரான ராஜீவ் காந்தியின் பிறந்த நாள், இந்தியாவின் சமய நல்லிணக்க நாளாக அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த நாளான நேற்று, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, ராபர்ட் வேத்ரா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்திக்கு, அவரது பிறந்த நாளான இன்று(நேற்று), என் மரியாதையை செலுத்துகிறேன் என ராஜீவ் காந்தியை நினைவுக் கூர்ந்து பதிவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |