முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச விண்வெளி மையத்துக்கு ரஷ்யா அனுப்பிய முதல் மனித உருவ ரோபோ

வியாழக்கிழமை, 22 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

மாஸ்கோ : ரஷ்யா முதல் முறையாக பெடார் என்ற மனித உருவிலான ரோபோவை சர்வதேச விண்வெளி மையத்திற்கு நேற்று அனுப்பியுள்ளது.

கசகஸ்தான் நாட்டின் பாய்கோர் மாகாணத்தில் உள்ள ரஷ்யாவின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நேற்று சோயுஸ் எம் எஸ்-14 என்ற ஆளில்லா விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்துடன் பெடார் என்ற மனித உருவ ரோபோவும் அனுப்பப்பட்டுள்ளது.  இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில்,

ஸ்கைபோட் எப் 580 என்ற அடையாள எண்ணுடன் அனுப்பப்பட்டுள்ள இந்த ரோபோ, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு அவசர காலங்களில் உதவி செய்வதற்காக 10 நாட்கள் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறது. இந்த ரோபா 1.8 மீ உயரமும் 160 கிலோ எடையும் கொண்டது. இது, மின் இணைப்புகளை சரி செய்தல், தீயணைப்பாண்களை பயன்படுத்துதல் போன்ற பணிகளை விரைவாகச் செய்யும். சோயுஸ் விண்கலங்கள் பொதுவாக விண்வெளி வீரர்களுடன் பயணங்கள் மேற்கொள்ளும். ஆனால் இம்முறை புதிய அவசர மீட்பு அமைப்பை சோதிக்கும் பொருட்டு எந்த மனிதர்களும் பயணிக்கவில்லை என்றார்.

இதே போன்று 2011-ம் ஆண்டு அமெரிக்கா விண்வெளி மையமான நாசா, ரோபோனாட்-2 என்ற மனித ரோபோவை அனுப்பியது. ஆனால் அது தொழில் நுட்ப கோளாறுகள் காரணமாக 2018-ம் ஆண்டு திருப்பி அனுப்பப்பட்டது. 2013-ம் ஆண்டு ஜப்பான் இதே போன்று கிரோபோ என்ற சிறிய ரோபோவை அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து