முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 உயர்வு - பவுன் ரூ. 29,368-க்கு விற்பனை

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2019      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ. 29,368-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 13 உயர்ந்து ரூ.3,671- க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. கடந்த ஒரு வார காலமாக தங்கம் விலை 30 ஆயிரத்தை நெருங்கி, பின்னர் அதையும் தாண்டி விற்பனையானது. இந்த நிலையில், தங்கத்தின் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் சவரனுக்கு 664 ரூபாய் சரிந்த நிலையில், நேற்று 104 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஆபரணதங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 83 ரூபாய் விலை குறைந்து ரூ. 3,658- க்கு விற்பனையானது. ஒரு சவரன் 664 ரூபாய் வீழ்ச்சியடைந்து ரூ. 29,264 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தின  நிலவரப்படி வெள்ளியில் விலை கிராமுக்கு ரூ. 50 காசுகள் விலை குறைந்து, ரூ.51.30 காசுகளுக்கு விற்பனையானது. 

தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, அமெரிக்கா சீனா இடையே வர்த்தக போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வந்தது. கடந்த  5-ம் தேதி, அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 28 பைசா ஏற்றம் கண்டு 71.84 ஆக உயர்ந்தது. சீனாவும் அமெரிக்காவும் வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதாக கூறியதை அடுத்து முதலீட்டாளர்களின் நம்பிக்கை புத்துயிர் பெற்றுள்ளது. எனவே தான், ரூபாய் மதிப்பு ஏற்றம் கண்டது. நேற்று இந்திய ரூபாய் மதிப்பு மேலும், 12 பைசா உயர்ந்து டாலருக்கு எதிராக 71.72 என்ற அளவில் இருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தின வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்திருந்ததால் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது என்று வணிகர்கள் தரப்பில் தெரிவித்திருந்தனர். ஆனால் நேற்று காலை தொடங்கிய வர்த்தகத்தில் மீண்டும் சிறிது மாற்றம் காணப்பட்டதால், தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்றங்கள் காணப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து