எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெஹ்ரான் : ஈரானில் தடையை மீறி விளையாட்டு மைதானத்துக்கு சென்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பெண், தண்டனைக்கு பயந்து, கோர்ட்டுக்குள்ளேயே தீக்குளித்து உயிர் இழந்தார்.
ஈரானில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. குறிப்பாக ஆண்கள் பங்கேற்கும் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை மைதானத்துக்கு சென்று பார்க்க பெண்களுக்கு அனுமதி கிடையாது. இதனை மீறும் பெண்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார்கள். இந்த தடையை நீக்கி பெண்களையும் கால்பந்து போட்டிகளில் பார்வையாளர்களாக அனுமதிக்க வேண்டும் என சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ஈரானை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் தலைநகர் டெஹ்ரானில் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் தனக்கு விருப்பமான ஈரானின் எஸ்டேக்லால் அணி விளையாடியதால் இந்த ஆட்டத்தை நேரில் பார்க்கவேண்டுமென சஹர் கொடயாரி என்ற பெண் நினைத்தார். இதற்காக அவர் ஆண் போல் வேடமிட்டு மைதானத்துக்கு சென்றார். ஆனால் மைதானத்தில் இருந்த பாதுகாவலர்கள் அவரை பெண் என அடையாளம் கண்டுவிட்டனர்.
இதையடுத்து, தடையை மீறி மைதானத்துக்குள் நுழைய முயன்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட 3 நாட்களுக்கு பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், சஹர் கொடயாரி மீதான வழக்கு டெஹ்ரான் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதற்காக அவர் கோர்ட்டுக்கு வந்தார்.ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக நீதிபதி பணிக்கு வராததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சஹர் கொடயாரி கோர்ட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.ஆனால் அவர் தனது செல்போனை கோர்ட்டில் மறந்து வைத்து விட்டார். அதை எடுப்பதற்காக அவர் மீண்டும் கோர்ட்டுக்கு வந்தார். அப்போது அங்கிருந்த சிலர் சஹர் கொடயாரி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என பேசிக் கொண்டிருந்தனர். இதனை கேட்டு சஹர் கொடயாரி அச்சம் அடைந்தார். ஒரு கட்டத்தில் அவர், சிறைக்கு சென்று கஷ்டப்படுவதை விட உயிரை மாய்த்துக் கொள்வது நல்லது என்ற முடிவுக்கு வந்தார். இதையடுத்து கோர்ட்டுக்குள்ளேயே அவர் தனது உடலில் தீவைத்துக் கொண்டார். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சஹர் கொடயாரி உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 90 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சைப்பெற்று வந்த சஹர் கொடயாரி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அந்நாட்டின் பெண்கள் மற்றும் குடும்ப விவகார துறை துணை தலைவர் மசூமெஹ் எப்டெக்கர் உத்தரவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


