எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெளிமாநிலத்தவர் பட்டினியாக இருக்கக்கூடாது என்பது தான் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் நோக்கமாகும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
ஜெயலலிதா எந்த வழியை எங்களுக்குக் காட்டினார்களே,அந்த வழியில் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ,தமிழகத்தின் உணவுத்துறையை மேலும் செம்மைப்படுத்தி,பொதுமக்களுக்குப் பொதுவிநியோக திட்டத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் அதனுடைய நடவடிக்கைகளை, அன்றாடம் கவனித்து, அதற்குஏற்ப எங்களுக்கு ஆலோசனை வழங்கிவருகிறார். அந்த அடிப்படையில் தமிழகத்தின் பொதுவிநியோகத் திட்டம், வெகு சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுவருகிறது.இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவில் தமிழகத்தில்மட்டும்தான், அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தினை செயல்படுத்துகிறோம்.
எல்லா மாநிலங்களும் குறிப்பிட்ட அளவுக்குப் பொருட்கள் வழங்கும் நிலையில் தமிழகத்தில் மட்டும்தான், அனைவருக்குமான பொது விநியோகத்திட்டத்தை செயல்படுத்துகிறோம். இதன் அடிப்படையில் இந்த கூட்டத்தை நடத்தியுள்ளோம். ஒவ்வொரு மாதமும் இந்த கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் ஒரே நாடு,ஒரே ரேஷன்கார்டு திட்டம் குறித்து எதுவும் பேசவில்லை. கடந்த 3-ம் தேதி மாநில உணவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் மத்திய அமைச்சர் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பொதுவிநியோகத்திட்ட செயல்பாடுகள், குடும்ப அட்டைகளைகணினி மயமாக்குதல், கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட 6 அம்சங்கள் குறித்துப் பேசப்பட்டது. அந்த கூட்டத்திலும் ஒரே நாடு,ஒரே ரேஷன்கார்டு குறித்துக் குறிப்பிட்டுப் பேசவில்லை.
இருந்தபோதிலும் பல்வேறு கருத்துக்கள் நிலவியதால் நான் அதற்கு பதில் அளித்துப் பேசினேன். நமது மாநிலத்தில் அனைவருக்குமான பொது விநியோக திட்டத்தைச் செயல்படுத்துகிறோம். இதில் எந்த மாற்றமும் கிடையாது. ஒரே நாடு, ஒரே ரேஷன்கார்டு திட்டத்தை தமிழகத்தில் அமுல்படுத்துவதால் நமக்கு எந்த பாதிப்பும் வராது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் என்பதை காங்கிரஸ் அரசு 2013-ம் ஆண்டில் கொண்டுவந்தது. இதற்கு திமுக ஆதரவு அளித்தது. அன்றைக்கு திருத்தப்பட்ட மசோதா வந்தால்தான் நாங்கள் ஆதரவு அளிப்போம் என்று, ஜெயலலிதா தெரிவித்தார். திருத்தப்படாமல் மசோதா கொண்டுவரப்பட்டது. இதை ஆதரித்து வாக்களித்தவர்கள் திமுகவினர். அன்றைக்கு இந்த திட்டத்தைப் போற்றும் வகையில் திமுக தலைவர் கருணாநிதி காங்கிரஸ் தலைவர் சோனியாவை மணிமேகலை என்று வர்ணித்தார்.
எங்களைப் பொறுத்தவரை அந்த மசோதா திருத்தப்படாமல் வந்த காரணத்தால் அதனை எதிர்த்து வாக்களித்தோம்.பின்பு திருத்தப்பட்டு வந்த காரணத்தினால் 2016 ம் ஆண்டு இதனை செயல்படுத்த ஒத்துக்கொண்டோம். இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தைத் தமிழகத்தில் செயல்படுத்தினால் தமிழகம் பாதிக்கப்படும் என்றுபலர் தெரிவித்தனர். எந்த பாதிப்பும் இல்லாமல் அந்த திட்டம் சென்றுகொண்டுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் ஒரு அங்கம்தான் இந்த ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்.வெளிமாநிலத்தவர் பட்டினியாக இருக்கக்கூடாது என்பதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். அவர்களுக்கு அரிசியோ, கோதுமையோ வழங்கவேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அந்த அரிசி அல்லது கோதுமையை மத்திய தொகுப்பிலிருந்து மத்திய அரசு நமக்குத் திருப்பி அளித்துவிடுகிறது. இதனால் மாநில அரசுக்கு எந்த ஒரு நிதிச் சுமையும் இல்லை. இவ்வாறு தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை
18 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2025.
18 Oct 2025 -
நாடு முழுவதும் அதிகரித்துள்ள டிஜிட்டல் கைது சம்பவங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை
18 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் டிஜிட்டல் கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், டிஜிட்டல் கைது விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்
-
விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன் தகவல்
18 Oct 2025சென்னை : விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
வைகையில் கடும் வெள்ளப்பெருக்கு : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
18 Oct 2025தேனி : தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா 25-ம் தேதி கோவை வருகை
18 Oct 2025கோவை, ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க கோவைக்கு வருகிற 25-ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிறார்.
-
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி
18 Oct 2025சென்னை : விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
-
பீகார் துணை முதல்வரின் வயது, கல்வித்தகுதி குறித்து சர்ச்சை
18 Oct 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கல்வித்தகுதி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. குறைப்பால் நுகர்வோருக்கு பலன் : நிர்மலா சீதாராமன் பெருமிதம்
18 Oct 2025சென்னை : ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது என்றும், ஜி.எஸ்.டி.
-
கள்ளக்குறிச்சியில் வீடு தீப்பிடித்து விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி
18 Oct 2025சென்னை : எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்
18 Oct 2025வாரணாசி, காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்.
-
தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை: பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு
18 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்
-
ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர்
18 Oct 2025ஸ்ரீராமபுரம் : ஒருதலை காதலால் விபரீதம்.. கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
-
முற்றிலும் உள்நாட்டில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
18 Oct 2025லக்னோ : பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் திறப்பு
18 Oct 2025சென்னை : பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
கூடுதல் கட்டணம் வசூல் புகார்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம்
18 Oct 2025சென்னை, ஆம்னி பஸ்களுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம், விதித்து வரி வசூத்த போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
-
தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
18 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார்.
-
தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்
18 Oct 2025கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பில் பயணிகள் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி
18 Oct 2025அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
-
பா.ஜ. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது: ராகுல்
18 Oct 2025லக்னோ, பா.ஜ.க. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியது பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
18 Oct 2025லக்னோ : வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது பாதுாகப்பு துறைக்கான உ