எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காபூல் : ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 89 தலிபான் பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் தாஹார் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரமாக தலிபான் இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகளின் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் 89 தலிபான் பயங்கரவாதிகள் பலியானதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரோஹுல்லா அகமத்ஸி கூறுகையில், ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல இடங்களில் தலீபான்கள் பின்வாங்கி விட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் தாஹார் மாகாணத்தில் மட்டும் 89 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 67 பேர் காயமடைந்துள்ளனர். தாஹார் மாகாணத்தின் பாஹார்க் மாவட்டம், ஆப்கானிஸ்தான் படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது என்று தெரிவித்தார். கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை எதிர்த்து தலிபான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


