எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா இன்று (ஞாயிற்றுக் கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு மேல் 7.05 மணிக்குள் அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி முன்பு உள்ள 61 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. விழா நடைபெறும் 10 நாட்களும் பகல், இரவில் உற்சவ மூர்த்திகள் மேளதாளம் முழங்க மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
முதல் நாளான இன்று பகலில் பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனத்திலும், இரவில் மூஷிகம், மயில், வெள்ளி அதிகாரநந்தி. அம்ச, சிம்ம வாகனத்தில் பவனி நடைபெறும். முக்கிய விழாவான மகாதீபதிருவிழா 10-ம் நாளான வருகிற 10-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயரமலையில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் இணை ஆணையர் ஞானசேகர் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


