முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரிக்கடலில் சூறைக்காற்று வீசும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : குமரிக்கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேநேரம் கடலோரத் தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மணிக்கு 40 - 50 கி.மீ. வேகத்துக்கு சூறைக்காற்று வீசக் கூடும் என்பதால் குமரிக்கடல் மற்றும் மாலத்தீவுப் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். லட்சத்தீவு பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் கடவூர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று அதில் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து