எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், புதிய அறிவிப்பாணையை விரைவில் வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு ஆணையிட்டுள்ளது
தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2-ம் தேதி அறிவித்தது. இதைத் தொடர்ந்து நேற்று (6ம் தேதி) வேட்புமனு தாக்கல் தொடங்க இருந்தது. இந்த நிலையில் வார்டு மறுவரையறை பணிகளை சரியாக முடிக்காததால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதே போல் 6 மாவட்டங்களின் வாக்காளர் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மேற்கண்ட மனுக்கள் அனைத்தும் சுப்ரீ்ம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது தி.மு.க. தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் வில்சன் ஆகியோர் வாதிட்டனர். இதையடுத்து தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து உணவு நேர இடைவெளிக்கு பின்னர் மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கிய போது, மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் நீதிபதிகள் முன்னிலையில் ஒரு விளக்கம் தரப்பட்டது. அதாவது தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களை தவிர்த்து விட்டு, மீதம் உள்ளவைகளுக்கு தேர்தல் நடத்துவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என குறிப்பிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களை தவிர்த்து மற்றவைகளுக்கு தேர்தல் நடத்த தயாராக இருக்கிறோம் என்ற மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. இருப்பினும் அது குறித்து நாங்கள் உத்தரவாக பிறப்பிக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. அத்துடன் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், புதிய அறிவிப்பாணையை விரைவில் வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு ஆணையிட்டுள்ளது. மேலும் உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீட்டு முறைகளை முறையாக பின்பற்றவும் சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், வார்டு வரையறை முடிவடையாததால் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. அதே சமயம், விடுபட்ட 9 மாவட்டங்களில், 4 மாதங்களில் மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் மறுவரையறை செய்த பின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் படி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்த பிறகு ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
பொங்கல் பரிசு தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
04 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையையையொட்டி 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.3000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்ம
-
சர்வாதிகாரிகளை கையாள முடிந்தால்.. புதினை சிறைப்பிடிக்க உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சூசகம்..?
04 Jan 2026கீவ், ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் பெயரைக் குறிப்பிடாமல், அவரைச் சிறைப்பிடிக்குமாறு உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-01-2026
04 Jan 2026 -
மருத்துவமனையில் இயக்குநர் பாரதிராஜா திடீரென அனுமதி: உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்
04 Jan 2026சென்னை, தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. இவர் இயக்குநர் இமயம் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகிறார்.
-
ஜனநாயகன் படத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு நடவடிக்கையா? அமைச்சர் முத்துசாமி விளக்கம்
04 Jan 2026கோபி, ஜனநாயகன், பராசக்தி போன்ற படங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் தி.மு.க. அரசு ஈடுபட வேண்டிய தேவை இல்லை என்று முத்துசாமி கூறினார்.
-
தமிழ்நாட்டு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இதுவரை 7.40 லட்சம் பேர் விண்ணப்பம்
04 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 7.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்கா தாக்குதல்: வெனிசுலாவில் 40 பேர் உயிரிழப்பு
04 Jan 2026காரகாஸ், வெனிசுலாவில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உடபட 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
உக்ரைன் டிரோன் தாக்குதலில் ரஷ்யாவில் ஒருவர் உயிரிழப்பு
04 Jan 2026கீவ், ரஷ்யாவின் எல்லையோர மாகாணமான பெல்ஹொராட்டில் சாலையில் சென்ற கார் மீது உக்ரைன் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.
-
கேரளா: பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் பலி
04 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் மதவழிபாட்டு தலத்தில் பட்டாசு வெடித்து விபத்தில் ஒருவர் பலியானார்.
-
வெனிசுலா அதிபர் மதுரோ அமெரிக்க சிறையில் அடைப்பு
04 Jan 2026நியூயார்க், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்து நாடுகடத்தப்பட்ட நிலையில், அமெரிக்க சிறையில் அடைக்கப
-
தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு டோக்கன்கள் விநியோகம் பணி தொடக்கம்
04 Jan 2026சென்னை, தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு டோக்கன்கள் விநியோகம் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது.
-
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு
04 Jan 2026திருச்சி, இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பா.ஜ.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
வெனிசுலா அதிபர் மதுரோ சிறைபிடிப்பு: அதிபர் ட்ரம்புக்கு மேயர் மம்தானி நேரடி எதிர்ப்பு
04 Jan 2026நியூயார்க், வெனிசுலா அதிபர் மதுரோ சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மாம்தானி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல்: முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
04 Jan 2026சென்னை, ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல் என்று பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
-
10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைக்கிறார்
04 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் இன்று (ஜன.
-
விபி ஜி ராம்ஜி புதிய சட்டத்திற்கு எதிராக தெலுங்கானா மாநில சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
04 Jan 2026ஐதராபாத், விபி ஜி ராம்ஜி-க்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2,000 கன அடியாக அதிகரிப்பு
04 Jan 2026தருமபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 2,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
எதிர்காலத்தில் த.வெ.க. கூட்டணியில் ஓ.பி.எஸ்., தினகரன் இணைவார்கள் செங்கோட்டையன் பேட்டி
04 Jan 2026கோவை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் எதிர்காலத்தில் த.வெ.க.
-
கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
04 Jan 2026சென்னை, கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
5 மணி நேரம் காத்திருந்து திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
04 Jan 2026திருச்செந்தூர், திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்
-
வெனிசுலா மீதான தாக்குதல்: அதிபர் ட்ரம்ப் நடவடிக்கைக்கு கமலா ஹாரிஸ் கடும் எதிர்ப்பு
04 Jan 2026நியூயார்க், வெனிசுலா மீதான ட்ரம்பின் நடவடிக்கை அமெரிக்காவுக்கு பாதுகாப்பானதல்ல என முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
-
மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: பாகிஸ்தானில் 4 காவலர்கள் பலி
04 Jan 2026லாகூர், பாகிஸ்தானில் இரண்டு வெவ்வெறு சம்பவங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 காவலர்கள் கொல்லப்பட்டனர்.
-
டி-20 உலக கோப்பைக்கான வங்கதேச அணி அறிவிப்பு: 7 ஆல்-ரவுண்டர்கள் சேர்ப்பு
04 Jan 2026டாக்கா, டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாறுகிறது தமிழ்நாடு: மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பு
04 Jan 2026சென்னை, தமிழ்நாடு முழுமையாக எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிப்பதற்காகன மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
-
பொய் வாக்குறுதிகளால் தமிழ்நாடு மக்கள் சலிப்பு: தமிழில் பதிவிட்ட அமித் ஷா
04 Jan 2026புதுடெல்லி, தி.மு.க. அரசின் பொய் வாக்குறுதிகளால் மக்கள் சலிப்படைந்துள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.


