முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் இன்று மீண்டும் சுப்ரபாத சேவை தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 14 ஜனவரி 2020      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி : இன்று (தை 1-ந்தேதி) முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்குகிறது.    

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் பாடி துயில் எழுப்பி அதன்பின் நித்திய கைங்கரியங்களான தோமாலை, அர்ச்சனா உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாதத்துக்கு பதிலாக ஆண்டாள் எழுதிப் பாடிய திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டு ஏழுமலையானை துயில் எழுப்புவது வழக்கம். அதன்படி கடந்த டிசம்பர் 17-ம் தேதி (மார்கழி 1-ம் தேதி) முதல் திருமலையில் சுப்ரபாத சேவை நிறுத்தப்பட்டு திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டு வருகின்றன.

நேற்று போகி பண்டிகையுடன் மார்கழி மாதம் நிறைவு பெற்றது. இன்று 15-ம் தேதி (தை 1-ம் தேதி) முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்க உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து