எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சேலம் : குடியுரிமை சட்டம் குறித்த அவதூறான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், தமிழகத்தில் எந்தவொரு சிறுபான்மையினரும் அச்சப்பட தேவையில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,
அனைத்து ஊடக நண்பர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் என்னுடைய இதயபூர்வமான தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள். சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பாகவும், கூட்டணியின் சார்பாகவும் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய துணைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், அனைவரும் என்னை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளனர். அ.தி.மு.க அரசு சிறப்பான முறையில் செயல்படுவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று தெரிவித்தார்.
அதை தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அவை வருமாறு:-
கேள்வி:- மத்திய அரசு பல்வேறு விருதுகளை கொடுத்திருக்கிறது, ஆனால் பொன் ராதாகிருஷ்ணன் பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறியிருக்கிறது என்று மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறாரே?
பதில்:- ஊடகத்தின் வாயிலாக எங்களுடைய மீன்வளத் துறை அமைச்சர் அழகாக பதில் சொல்லியிருக்கின்றார்.
கேள்வி:- அது குறித்து முதலமைச்சரின் கருத்து என்ன?
பதில்:- அதுதான் என்னுடைய கருத்து.
கேள்வி:- தீவிரவாதிகள் ஊடுருவல் இப்பொழுது அதிகமாகியிருக்கிறது, குறிப்பாக, நெல்சன் சுட்டுக் கொல்லப்பட்டது, அதே போல எல்லைகளை பாதுகாக்க எதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?
பதில்:- எல்லைகளில் எல்லாம், கடல் வழியாகவும், தரை வழியாகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, இன்றைக்கு தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாக நிலவிக் கொண்டிருக்கின்றது. இதை சிலர் சீரழிக்க முயற்சிக்கின்றார்கள், அதை அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து ஒடுக்கி, தமிழகம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக விளங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
கேள்வி:- தலைவர் தேர்தலில் பல்வேறு முறைகேடு நடந்ததாக ஸ்டாலின் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறிக் கொண்டிருக்கிறாரே?
பதில்:- எந்த இடத்தில் சேலம் மாவட்டத்தில் தவறு நடந்திருக்கிறது? இந்த மாவட்டத்தில் எந்தவித தவறும் நடக்கவில்லை. உதாரணத்திற்கு நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் அ.தி.மு.க. சார்பாக போட்டியிட்ட 2 கவுன்சிலர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தார்கள். ஒரு கவுன்சிலர் 11 வாக்குகள் வித்தியாசத்திலும், இன்னொருவர் 17 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி வாய்ப்பை இழந்தார்கள். எங்களுடைய மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் சேலம் மாவட்ட கவுன்சிலராக போட்டியிட்டவரும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதேபோல ஆத்தூர் மாவட்ட கவுன்சிலராக போட்டியிட்டவரும் வெகு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஏற்காடு ஒன்றியத்தில் போட்டியிட்ட மாவட்ட கவுன்சிலரும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆகவே, இந்தத் தேர்தல் நியாயமாக, முறையாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டிருக்கின்றது. அதுவும், தேர்தல் அதிகாரிகள்தான் வாக்கு மையங்களில் வாக்குகளை எண்ணுகின்றார்கள், அங்கு பலத்த பாதுகாப்பை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருக்கின்றது. தடுப்பு அமைக்கப்பட்டு தடுப்புக்கு வெளியிலே தான் எல்லா முகவர்களும் இருந்து வாக்குச் சீட்டுகளைப் பார்த்து எந்தெந்த வாக்குகள் யார், யாருக்கு விழுந்திருக்கிறது என்ற அந்த விவரத்தைக் காட்டி, அதிகாரிகள் அந்தந்த பெட்டிகளில் போடுகின்றார்கள். ஆகவே, இதில் எந்தவித முறைகேடு நடைபெறுவதற்கும் வாய்ப்பில்லை. ஏதாவது ஒரு குறை சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் வேண்டுமென்றே திட்டமிட்டு, அவர்கள் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அரசு அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட்டார்கள். காலையில் 8 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 8 மணி வரையிலும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றது. அதுவும் நின்றுகொண்டே, அரசு அதிகாரிகள் வாக்குகளை முறையாக எண்ணினார்கள். முகவர்கள் ஏதாவது சந்தேகத்தை எழுப்பினால், அதற்கு தீர்வு கண்ட பிறகு தான் அந்தந்த வாக்குப் பெட்டிகளில் அந்த வாக்கை அளிக்கிறார்கள். அப்படி இருக்கின்ற காரணத்தினால்தான், காலதாமதம் ஏற்பட்டது. இதில் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை, எந்த இடத்திலும் அப்படிப்பட்ட தவறு நடைபெற்றதாக செய்தி வரவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும், அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களும் இப்படி பரப்பி வருகிறார்கள். நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க. பெரிய வெற்றியைக் கண்டிருக்கின்றது.
கேள்வி:- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் பி.ஏ. மரணம் தொடர்பாக சிபிஐ, தமிழக காவல் துறையிடம் விளக்கம் கேட்டிருக்கிறது, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணை அறிக்கை கிடைத்த பின்புதான் அதற்கு பதில் சொல்ல முடியும்.
கேள்வி:- தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து?
பதில்:- தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும், தமிழ் மண்ணிலே பிறந்த எந்த சிறுபான்மையின மக்களும் பாதிக்கப்பிற்குள்ளாக மாட்டார்கள், இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பிரதமரும் தெளிவுபடுத்தியிருக்கிறார். வேண்டுமென்றே சில எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசியல் லாபத்திற்காக அவதூறான செய்தியை, இன்றைக்கு சிறுபான்மையின மக்களை அச்சுறுத்தும் வகையிலே இப்படிப்பட்ட செய்திகளை வெளியிட்டு, அதனால் சிறுபான்மையின மக்கள் அச்சப்பட்டிருக்கின்றார்கள். இது குறித்து விளக்கமாக, தெளிவாக சட்டமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றது. தமிழகத்தில் வாழ்கின்ற எந்த ஒரு சிறுபான்மையின மக்களும் அச்சப்பட வேண்டியதில்லை, அவதூறான செய்தியை நம்ப வேண்டியதில்லை.
தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் எந்த ஒரு சிறுபான்மையின மக்களும் பாதிக்கப்பட மாட்டார்கள், அவர்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்று சட்டமன்றத்திலேயே எங்களுடைய கழகத்தின் சார்பாகவும், அதேபோல அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கின்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெளிவுபடுத்தியிருக்கின்றார். நானும் சட்டமன்றத்திலே தெளிவுபடுத்தியிருக்கிறேன். இதை வேண்டுமென்றே ஊடக நண்பர்களும், பத்திரிகை நண்பர்களும் கேள்வி கேட்பது, பத்திரிகையில் வெளிவருவது, எதிர்க்கட்சிகள் பேசுவது, இது தேவையற்ற ஒரு பதற்றத்தை உண்டாக்குகின்ற செயலாகத்தான் நான் கருதுகின்றேனே தவிர, தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும், எந்த சிறுபான்மையின மக்களும் குறிப்பாக இஸ்லாமியர்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.
கேள்வி:- தமிழகத்தில் அமலுக்கு வந்துவிட்டதா?
பதில்:- இல்லை.
கேள்வி:- மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பயன்பாடு குறித்து நாடாளுமன்றக்குழு இந்த பொங்கல் நாளில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்களே, அது பற்றி தங்கள் கருத்து என்ன?
பதில்:- இதுபோன்று எங்களுக்கு எந்தவித தகவலும் வரவில்லை. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற