எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு (2020–21) 10 ஆயிரத்து 276 போலீசார் நியமனம் செய்யப்படுவார்கள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். பட்ஜெட்டில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:–
பொருளாதார வளர்ச்சியையும், மக்கள் நல்வாழ்வினையும் பேணுவதற்காக, சட்டம் ஒழுங்கை திறம்படக் கையாள்வது முக்கியமானதாகும். மாநிலக் காவல் படை தனது பணிகளை திறம்பட மேற்கொள்வதை உறுதி செய்ய, போதுமான காவலர்கள், தளவாடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை காவல் துறை பெறுவதை இந்த அரசு உறுதி செய்துள்ளது. காவல் துறையிலுள்ள காலிப் பணியிடங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டு, தற்போது 1.13 லட்சம் காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 2019–20 ஆம் ஆண்டில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக, மொத்தம் 10,242 காவல் துறைப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 2020–21ம் ஆண்டில், மேலும், 10,276 சீருடைப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
குற்றங்களையும், குற்றவாளிகளையும் கண்காணிக்கும் கணினி வலையமைப்புத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, இந்த அமைப்பு முறை, 54.84 கோடி ரூபாய் செலவில் மேலும் தரம் உயர்த்தப்பட்டு பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. அப்பாவிப் பொதுமக்கள் இணையவழிக் குற்றங்களால் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும், இணையப் பாதுகாப்பை அதிகரிக்கவும், 28.97 கோடி ரூபாய் செலவில் இணையதள குற்றத் தடுப்புக் காவல் பிரிவு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகளுக்காக 431 கோடி ரூபாயும், காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்திற்காக 100 கோடி ரூபாயும் உட்பட, மொத்தமாக 8,876.57 கோடி ரூபாய் காவல் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் பிற பேரிடர் நிவாரணப் பணிகளில் துரித தீர்வு அளிக்க வேண்டியதன் அத்தியாவசியத்தை உணர்ந்து, தேவையான இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களை அவ்வப்போது அரசு தொடங்கி வந்ததால், மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களின் எண்ணிக்கை இப்பொழுது 346 ஆக உள்ளது. 2019-20 ம் ஆண்டில் 18.22 கோடி ரூபாய் செலவில் 16 புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உயர் அடுக்குமாடிக் கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்துகளை நவீன முறையில் தடுக்கும் மற்றும் மீட்புப் பணிகளில் உதவும் 104 மீட்டர் தீயணைப்பு ஏணிகள் உட்பட நவீன தீயணைப்பு மீட்புக் கருவிகள் வாங்குவதற்காக 13.67 கோடி ரூபாய் ஒப்பளிக்கப்பட்டுள்ளது. பதினைந்தாவது நிதிக்குழு தேசியப் பேரிடர் நிவாரண மற்றும் மேலாண்மை நிதியத்தில், தீயணைப்புப் பணிகள் நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கத்திற்காக 1,000 கோடி ரூபாயை பரிந்துரைத்துள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு முன்மொழிவுகளை அனுப்பும். 2020-21 ம் ஆண்டிற்கான வரவு – செலவுத்திட்ட மதிப்பீடுகளில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு 405.68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகள், மனிதநேயத்திற்கும், சீர்திருத்த அணுகுமுறைக்கும் நற்பெயர் பெற்றவை. சீர்திருத்த முயற்சியின் ஒரு பகுதியாக, சிறைவாசிகள் சிறைத் தொழிற்கூடங்களில் ஈட்டும் ஊதியத்தில் அவர்களின் பராமரிப்புக்காகப் பிடித்தம் செய்யும் தொகை 50 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக குறைக்கப்பட்டு, ஊதியத்தில் அவர்களின் பங்கு 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படும். ஒரு புதிய தொடக்க முயற்சியாக, சிறைவாசிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வுக்காக, புழல், வேலூர், கோயம்புத்தூர், பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள சிறைகளின் வெளி வளாகங்களிலும், புதுக்கோட்டையிலுள்ள பார்ஸ்டல் பள்ளியிலும் 5 பெட்ரோல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.வரும் நிதியாண்டில், மேலும் 6 பெட்ரோல் நிலையங்கள் அமைக்கப்படும். 2020 - 21ம் ஆண்டில், சிறைத் துறைக்கு 392.74 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் படுகாயங்களை பாதியாகக் குறைக்க வேண்டும் என்பது, 2020-ம் ஆண்டிற்குள் அடைய வேண்டிய நிலைக்கத்தக்க வளர்ச்சிக்கான இலக்குகளில் ஒன்றாகும். 2018-ம் ஆண்டில், சிறப்பான சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான விருதை, மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு பெற்றது. 2016ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2019-ம் ஆண்டில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38.87 சதவீதம் குறைந்துள்ளது. தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டம் 2017ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டம், சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்ட பிறகு, அவசர சிகிச்சை பிரிவில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8.3 சதவீதத்திலிருந்து 2.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. தற்போது அணுக வசதியாக அமைந்துள்ள 80 அரசு மருத்துவமனைகள், தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன. சாலைப் பாதுகாப்பில் தமிழ்நாட்டின் ஆக்கத்திறனை மேலும் மேம்படுத்துவதற்கும், தவிர்க்கக் கூடிய உயிரிழப்புகள் மற்றும் படுகாயங்களை குறைப்பதற்கும், தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு இயக்கத்தினை அரசு உருவாக்கும். இந்த இயக்கம், பல்வேறு துறைகளின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து, ‘சாலை விபத்தில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைவதற்காக, அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இத்திட்டத்தின் கீழ், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விபத்துகளை பொறியியல் சார்ந்த தீர்வு நடவடிக்கைகள் மூலம் சரி செய்தல், ஓட்டுநர் கல்வி, சட்ட அமலாக்கம், விபத்திற்குப் பிந்தைய உயிரிழப்புகளைத் தடுத்தல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்தப்படும்.
நெடுஞ்சாலைகள், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, காவல், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்களை ஒருங்கிணைத்து, சாலைப் பாதுகாப்பிற்கான நிதி ஒதுக்கீடு 500 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். சாலை வடிவமைப்பில் சாலைப் பாதுகாப்பு அம்சங்களும் உள்ளடங்கியிருப்பதை உறுதி செய்வதற்கு, மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பாதுகாப்பிற்கான தனியானதொரு பிரிவு உருவாக்கப்படும். சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் சாலைப் பாதுகாப்புப் பிரிவுகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
அறிவுச்சூரியன் தந்தை பெரியார்: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
17 Sep 2025சென்னை: உலகம் முழுவதற்குமான கொள்கைகளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாக்., போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!
17 Sep 2025அபுதாபி: இந்திய வீரர்கள் - பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரத்தில் பாகிஸ்தானின் அனைத்துப் போட்டிகளில் இருந்து நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் நீக்கப்பட்டுள்ளதாகத்
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.