எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவை நேற்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். முதல்வர் தாக்கல் செய்த இந்த சட்ட மசோதா நேற்று தமிழக சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.
முதல்வரின் பதில் உரைக்குப் பின் சட்ட மசோதா சட்டமாக நிறைவேறியது. அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த சட்டத்தின் மூலம் காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் தலைவாசலில் நடந்த கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் எனவும் கூறியிருந்தார். மேலும் விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி வெளியிடப்படும் என அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் தலைமையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சிறப்பு வேளாண் மண்டல திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பாதுகாக்கப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டலம் தொடர்பான சட்ட மசோதா நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
நான் ஒரு விவசாயியாக இருந்து இந்த சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த சட்ட முன்வடிவை அவையில் தாக்கல் செய்வதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். இந்த வாய்ப்பு இறைவனாக காட்சியளிக்கிற ஜெயலலிதா தந்த பாக்கியமாக நான் கருதுகிறேன். 2020-ம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்படுத்தப்பட்ட சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய அனுமதி கோருகிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறியிருப்பதாவது:-
காவிரி ஆற்றுப்படுகை மண்டலமானது தமிழகத்தின் நெற்களஞ்சியமாக கருதப்படுகிறது. இது மாநிலத்தில் உணவு தானிய மற்றும் பிற வேளாண் விளைபொருட்களின் உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பதுடன் மாநிலத்திற்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்கிறது. பல்வேறு வகைப்பட்ட வேளாண் நடவடிக்கைகளானது விவசாயிகளுக்கும், பண்ணை தொழிலாளர்களுக்கும் நாகரீகமான வாழ்க்கை தரத்தை உறுதி செய்கிறது. சமீப ஆண்டுகளில் சில வேளாண்மை சாராத நடவடிக்கைகள் இம்மண்டலத்தில் வேளாண்மையை எதிர்விளைவாக பாதித்து மாநில உணவு பாதுகாப்பை அச்சுறுத்துகிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இம்மண்டலத்தில் வேளாண்மையை பாதுகாக்கும் பொருட்டு சில நடவடிக்கைகளை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக விவசாயிகளின் நலனுக்காக சேவை செய்வதற்கும், பண்ணை உற்பத்தி மற்றும் பண்ணை உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கும் பண்ணை நடவடிக்கைகளை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் உயர்மட்ட குழு ஒன்றினை இந்த சட்ட முன்வடிவு அமைக்க விழைகிறது. எந்த ஒரு நபரும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எந்தவொரு புதிய திட்டத்தையோ, புதிய செயல்பாட்டையோ மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. துத்தநாக உருக்கு ஆலை, இரும்பு தாது செயல்முறை ஆலை, ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இலகு இரும்பு ஆலை, செம்பு உருக்கு ஆலை, அலுமினியம் உருக்கு ஆலை, விலங்குகளின் எலும்பு, கொம்பு, குளம்பு மற்றும் பிற உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல், எண்ணை மற்றும் நிலக்கரி படுகை மீத்தேன், மென்களிக்கல் எரிவாயு மற்றும் பிற ஒத்த ஹைட்ரோ கார்பன்கள் உள்ளடங்களான இயற்கை வாயுக்களின் ஆய்வு, துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை போன்றவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம், திருவாரூர் மாவட்டம், நாகை மாவட்டம், கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோயில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் குமராட்சி வட்டாரங்கள், புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம், மற்றும் கறம்பக்குடி வட்டாரங்கள், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. இந்த சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பு என்ற பெயரில் ஒரு அதிகார அமைப்பு இருத்தல் வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வரை தலைவராகவும், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அரசு செயலாளர்கள் உள்ளிட்ட 24 பேர் கொண்ட அதிகார அமைப்பு ஒன்று உருவாக்கப்படுகிறது. அதே போல் இந்த அதிகார அமைப்புக்கு உதவுவதற்காக மாவட்ட அளவில் ஒரு குழு இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட கலெக்டர் தலைமையில் 13 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படுகிறது. இதில் மாவட்ட கலெக்டரால் பரிந்துரை செய்யப்பட்ட 2 விவசாயிகளின் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள். வேளாண்மையின் நிலையான வளர்ச்சிக்கு இருக்கிற வேளாண் நிலங்களை பயன்படுத்தவும், மற்றும் வேளாண் அற்ற பயன்பாடு அல்லது பிற வளர்ச்சி தேவையற்ற முறையில் வேளாண் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதில்லை என இந்த சட்ட முன்வடிவு தெரிவித்துள்ளது. மேலும் பயிர் மற்றும் பண்கைளின் உற்பத்தி, உற்பத்தி திறனை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி ஒருங்கிணைந்த வேளாண்மை மற்றும் மேம்பட்ட சாகுபடி முறைகள் மூலம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மேம்படுத்தவும், வேளாண் துறையில் வெள்ளநீர் மேலாண்மை, பிற இடுபொருட்கள் உள்ளடங்கலான நீரின் உகந்த பயன்பாட்டின் வளர்ச்சிக்காவும் நிலையான வேளாண் மேம்பாட்டிற்காக வேளாண் சார்ந்த மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்களை மேம்படுத்தவும், வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் திறன் மேம்பாடு உள்ளிட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளர்ச்சிக்காகவும் இந்த சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தை செயல்படுத்துவதற்காக வருவாய் கோட்டாட்சியர் பதவிக்கு குறையாத எந்தவொரு அலுவலரும், இதுதொடர்பாக அரசால் அதிகாரம் அளிக்கப்பட்ட எவரும் அல்லது துணை கண்காணிப்பாளர் பதவிக்கு குறையாத காவல் அலுவலர் எவரும் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்தில் சட்டத்தின் வரைமுறைகளுக்கு முரணான சட்டத்தின் வகை முறைகளில் இணக்கத்தை உறுதி செய்யும் நோக்கில் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது என நம்புவதற்கான காரணத்தை கொண்டிருந்தால் அவர் எந்தவொரு வளாகத்திலும் நுழைந்து தேடலாம். மற்றும் அத்தகைய செயலுக்காக பயன்படுத்தியதாக கருதப்படும் எந்த ஒரு பொருள், இயந்திரங்கள், உபகணரங்கள் போன்றவற்றையும் கைப்பற்றலாம். மற்றும் அத்தகைய கைப்பற்றுதல் தொடர்பான ஒரு அறிக்கையை நடவடிக்கை தொடங்கப்பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் அத்தகைய கைப்பற்றுகை செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அந்த பகுதியின் அதிகார வரம்பை கொண்டுள்ள மாவட்ட அளவிலான குழுவிற்கு அறிவிப்பு செய்ய வேண்டும். இந்த சட்டத்தின் கீழ் செய்யப்படும் அனைத்து தேடுதல்களும் 1972-ம் ஆண்டு குற்றவியல் நடைமுறை தொகுப்பு சட்டத்தின் வரைமுறைகளுக்கு இணைங்கிய வகையில் செயல்படுத்தப்பட வேண்டும். கைப்பற்றுகை தொடர்பான அறிக்கை பெறப்பட்ட பின் மாவட்ட அளவிலான குழுவானது பொருத்தம் என கருதினால் கைப்பற்றுதல் செய்த பொருட்களை பறிமுதல் செய்ய ஆணையிடலாம். இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், குறைந்த பட்சம் ரூ. 10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை அபராதமும், தொடர்ச்சியான அத்துமீறல் ஈடுபடுபவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ரூ. 50 ஆயிரம் கூடுதல் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த இந்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக தமிழக சட்டசபையில் நிறைவேறியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
அறிவுச்சூரியன் தந்தை பெரியார்: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
17 Sep 2025சென்னை: உலகம் முழுவதற்குமான கொள்கைகளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.