எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவை நேற்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். முதல்வர் தாக்கல் செய்த இந்த சட்ட மசோதா நேற்று தமிழக சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.
முதல்வரின் பதில் உரைக்குப் பின் சட்ட மசோதா சட்டமாக நிறைவேறியது. அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த சட்டத்தின் மூலம் காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் தலைவாசலில் நடந்த கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் எனவும் கூறியிருந்தார். மேலும் விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி வெளியிடப்படும் என அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் தலைமையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சிறப்பு வேளாண் மண்டல திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பாதுகாக்கப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டலம் தொடர்பான சட்ட மசோதா நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
நான் ஒரு விவசாயியாக இருந்து இந்த சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த சட்ட முன்வடிவை அவையில் தாக்கல் செய்வதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். இந்த வாய்ப்பு இறைவனாக காட்சியளிக்கிற ஜெயலலிதா தந்த பாக்கியமாக நான் கருதுகிறேன். 2020-ம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்படுத்தப்பட்ட சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய அனுமதி கோருகிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறியிருப்பதாவது:-
காவிரி ஆற்றுப்படுகை மண்டலமானது தமிழகத்தின் நெற்களஞ்சியமாக கருதப்படுகிறது. இது மாநிலத்தில் உணவு தானிய மற்றும் பிற வேளாண் விளைபொருட்களின் உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பதுடன் மாநிலத்திற்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்கிறது. பல்வேறு வகைப்பட்ட வேளாண் நடவடிக்கைகளானது விவசாயிகளுக்கும், பண்ணை தொழிலாளர்களுக்கும் நாகரீகமான வாழ்க்கை தரத்தை உறுதி செய்கிறது. சமீப ஆண்டுகளில் சில வேளாண்மை சாராத நடவடிக்கைகள் இம்மண்டலத்தில் வேளாண்மையை எதிர்விளைவாக பாதித்து மாநில உணவு பாதுகாப்பை அச்சுறுத்துகிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இம்மண்டலத்தில் வேளாண்மையை பாதுகாக்கும் பொருட்டு சில நடவடிக்கைகளை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக விவசாயிகளின் நலனுக்காக சேவை செய்வதற்கும், பண்ணை உற்பத்தி மற்றும் பண்ணை உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கும் பண்ணை நடவடிக்கைகளை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் உயர்மட்ட குழு ஒன்றினை இந்த சட்ட முன்வடிவு அமைக்க விழைகிறது. எந்த ஒரு நபரும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எந்தவொரு புதிய திட்டத்தையோ, புதிய செயல்பாட்டையோ மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. துத்தநாக உருக்கு ஆலை, இரும்பு தாது செயல்முறை ஆலை, ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இலகு இரும்பு ஆலை, செம்பு உருக்கு ஆலை, அலுமினியம் உருக்கு ஆலை, விலங்குகளின் எலும்பு, கொம்பு, குளம்பு மற்றும் பிற உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல், எண்ணை மற்றும் நிலக்கரி படுகை மீத்தேன், மென்களிக்கல் எரிவாயு மற்றும் பிற ஒத்த ஹைட்ரோ கார்பன்கள் உள்ளடங்களான இயற்கை வாயுக்களின் ஆய்வு, துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை போன்றவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம், திருவாரூர் மாவட்டம், நாகை மாவட்டம், கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோயில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் குமராட்சி வட்டாரங்கள், புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம், மற்றும் கறம்பக்குடி வட்டாரங்கள், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. இந்த சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பு என்ற பெயரில் ஒரு அதிகார அமைப்பு இருத்தல் வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வரை தலைவராகவும், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அரசு செயலாளர்கள் உள்ளிட்ட 24 பேர் கொண்ட அதிகார அமைப்பு ஒன்று உருவாக்கப்படுகிறது. அதே போல் இந்த அதிகார அமைப்புக்கு உதவுவதற்காக மாவட்ட அளவில் ஒரு குழு இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட கலெக்டர் தலைமையில் 13 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படுகிறது. இதில் மாவட்ட கலெக்டரால் பரிந்துரை செய்யப்பட்ட 2 விவசாயிகளின் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள். வேளாண்மையின் நிலையான வளர்ச்சிக்கு இருக்கிற வேளாண் நிலங்களை பயன்படுத்தவும், மற்றும் வேளாண் அற்ற பயன்பாடு அல்லது பிற வளர்ச்சி தேவையற்ற முறையில் வேளாண் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதில்லை என இந்த சட்ட முன்வடிவு தெரிவித்துள்ளது. மேலும் பயிர் மற்றும் பண்கைளின் உற்பத்தி, உற்பத்தி திறனை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி ஒருங்கிணைந்த வேளாண்மை மற்றும் மேம்பட்ட சாகுபடி முறைகள் மூலம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மேம்படுத்தவும், வேளாண் துறையில் வெள்ளநீர் மேலாண்மை, பிற இடுபொருட்கள் உள்ளடங்கலான நீரின் உகந்த பயன்பாட்டின் வளர்ச்சிக்காவும் நிலையான வேளாண் மேம்பாட்டிற்காக வேளாண் சார்ந்த மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்களை மேம்படுத்தவும், வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் திறன் மேம்பாடு உள்ளிட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளர்ச்சிக்காகவும் இந்த சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தை செயல்படுத்துவதற்காக வருவாய் கோட்டாட்சியர் பதவிக்கு குறையாத எந்தவொரு அலுவலரும், இதுதொடர்பாக அரசால் அதிகாரம் அளிக்கப்பட்ட எவரும் அல்லது துணை கண்காணிப்பாளர் பதவிக்கு குறையாத காவல் அலுவலர் எவரும் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்தில் சட்டத்தின் வரைமுறைகளுக்கு முரணான சட்டத்தின் வகை முறைகளில் இணக்கத்தை உறுதி செய்யும் நோக்கில் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது என நம்புவதற்கான காரணத்தை கொண்டிருந்தால் அவர் எந்தவொரு வளாகத்திலும் நுழைந்து தேடலாம். மற்றும் அத்தகைய செயலுக்காக பயன்படுத்தியதாக கருதப்படும் எந்த ஒரு பொருள், இயந்திரங்கள், உபகணரங்கள் போன்றவற்றையும் கைப்பற்றலாம். மற்றும் அத்தகைய கைப்பற்றுதல் தொடர்பான ஒரு அறிக்கையை நடவடிக்கை தொடங்கப்பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் அத்தகைய கைப்பற்றுகை செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அந்த பகுதியின் அதிகார வரம்பை கொண்டுள்ள மாவட்ட அளவிலான குழுவிற்கு அறிவிப்பு செய்ய வேண்டும். இந்த சட்டத்தின் கீழ் செய்யப்படும் அனைத்து தேடுதல்களும் 1972-ம் ஆண்டு குற்றவியல் நடைமுறை தொகுப்பு சட்டத்தின் வரைமுறைகளுக்கு இணைங்கிய வகையில் செயல்படுத்தப்பட வேண்டும். கைப்பற்றுகை தொடர்பான அறிக்கை பெறப்பட்ட பின் மாவட்ட அளவிலான குழுவானது பொருத்தம் என கருதினால் கைப்பற்றுதல் செய்த பொருட்களை பறிமுதல் செய்ய ஆணையிடலாம். இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், குறைந்த பட்சம் ரூ. 10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை அபராதமும், தொடர்ச்சியான அத்துமீறல் ஈடுபடுபவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ரூ. 50 ஆயிரம் கூடுதல் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த இந்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக தமிழக சட்டசபையில் நிறைவேறியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.