Idhayam Matrimony

தங்கம் விலை ரூ. 584 உயர்ந்து: சவரன் ரூ. 31,616-க்கு விற்பனை

வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2020      வர்த்தகம்
Image Unavailable

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ.31,616-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.73 உயர்ந்து ரூ.3,952க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.90 உயர்ந்து ரூ.40.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.40,200 ஆக இருந்தது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக பொருளாதாரமே பெரும் சரிவை சந்தித்துள்ளன. இதனால், தங்கம் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது பொதுமக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. இதனிடையே, கடந்த சில தினங்களாக எப்படி ஏறுமுகமாக இருந்து வந்ததோ, அதேபோல இறங்கு முகமாகவும் காணப்பட்டது. தொடர்ந்து உச்சத்திலேயே இருந்த தங்கத்தின் விலை கடந்த 11-ம் தேதி சற்று குறைய தொடங்கியது. ஆனால் 13-ம் தேதி அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,096 குறைந்து ரூ.32,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதற்கு அடுத்தநாள் சவரனுக்கு ரூ.688 குறைந்து ரூ.31,472-க்கு விற்கப்பட்டது. இந்த வாரத் தொடக்கத்தில் கடந்த திங்களன்று மட்டும் சற்று உயர்ந்த தங்கம் விலை, சவரன் ரூ.31,544-க்கு விற்பனையானது. இந்நிலையில் காலையில் குறைந்த தங்கத்தின் விலை மாலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து 30,032-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ.31,616-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து