முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உதயமானது மயிலாடுதுறை: முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 28 டிசம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதியதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். 

கடந்த 24.3.2020 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-இன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், நிர்வாக வசதிக்காகவும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும், நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தமிழ்நாட்டின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். 

அந்த அறிவிப்பிற்கிணங்க, மாநிலத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்கிட 7.4.2020 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், மயிலாடுதுறை மாவட்ட உருவாக்கத்திற்கான சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, புதிய மாவட்டம் தோற்றுவிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டதற்கான அரசாணை (நிலை) எண் 796, நாள் 28.12.2020 நேற்று வெளியிடப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதியதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். இப்புதிய மாவட்டமானது, மயிலாடுதுறை மற்றும் சீர்காழி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்கள், மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம்  மற்றும் தரங்கம்பாடி ஆகிய நான்கு வருவாய் வட்டங்கள், 15 வருவாய் குறு வட்டங்கள் மற்றும் 287 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், வருவாய் நிருவாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி, பேரிடர் மேலாண்மை ஆணையர் முனைவர் ஜகந்நாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து