எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Image Unavailable](/sites/all/themes/thinaboomi/images/photos/image-30.jpg)
Source: provided
கோவில்பட்டி : விவசாயத்தை பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? வெயிலில் ஏர் பிடித்து உழுபவர்களுக்கு தான் கஷ்டம் தெரியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதிகளில் நேற்று பிரசாரம் செய்தார். இதற்காக ராமநாதபுரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டி வந்து அங்குள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் தங்கினார். நேற்று காலை 8.30 மணிக்கு வில்லிசேரி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு பருத்தி விவசாயிகளிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
யாரையும் எதிர்பார்க்காமல் சொந்த காலில் நிற்பவர்கள் விவசாயிகள். விவசாயத்திற்கு முதன்மையாக தேவைப்படுவது தண்ணீர். அதனை சரியான முறையில் கொடுக்க வேண்டும் என்பதற்காக குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தோம். இந்த பிரமாதமான திட்டத்திற்கு ஒட்டு மொத்த பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் ஏரி, குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டு மழைநீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்ததிட்டத்தின் மூலம் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாத ஏரி, குளங்களும், விவசாயிகள் பங்களிப்போடு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு தூர்வாரப்பட்டு வருகிறது.
குடிமராமத்து திட்டத்தின் மூலம் விவாயிகளுக்கு தேவையான குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கிறது. அமெரிக்கன் படை புழு தாக்குதலில் இருந்து மக்காசோளம் பயிர்களை காக்க ரூ.45 கோடியில் அரசே பூச்சி கொல்லி மருந்தை தெளித்தது. புயல், வெள்ளம், வறட்சி என விவசாயிகள் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ, அப்போது எல்லாம் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து அ.தி.மு.க. அரசு நிவாரணம் வழங்கி வருகிறது.
பயிர் காப்பீடு திட்டம் மூலம் இந்தியாவிலேயே அதிக இழப்பீடு வழங்கியது தமிழக அரசுதான். கடந்த 4 ஆண்டுகளில் 9 ஆயிரத்து 400 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கி உள்ளது. இவ்வாறாக குழந்தைகளை போல கவனித்து விவசாயிகளுக்கு தேவையானதை அரசு பார்த்து பார்த்து செய்து வருகிறது. நான் வெளிநாடு சென்று ஆய்வு செய்ததில் 65 லிட்டர் பால் கறக்கும் பசுக்களை பார்த்தேன். அது போல கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகளுக்கு கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. வாய் பேசுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பது போல வாய் பேச முடியாத ஜீவன்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கால்நடை ஆராய்சி மையம் உளுந்தூர்பேட்டையில் அமைக்கப்பட்டு உள்ளது.
கால்நடைகளை பாதுகாக்க அதிக அளவில் கால்நடை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. கோவில்பட்டியில் ரூ. 4 கோடியில் காளை ஆராய்ச்சி மையம் அமைய உள்ளது. விவசாயிகளுக்கு பயிர்களுக்கான இழப்பீடு தொகையை அதிகரித்து வழங்கிய அரசு அ.தி.மு.க. அரசு. கோவில்பட்டியில் 5 இடங்களில் அம்மா மினி கிளினிக் ஆரம்பிக்கப்பட்டது. அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு காரணமாக ஏழை மாணவர்களும் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். அடுத்தாண்டு 443 ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவார்கள். அவர்களுக்கான அனைத்து படிப்பு செலவையும் அரசே செலுத்தும்.
ஸ்டாலின் பேசும் போது நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான் என்று படத்தில் கூறுவது போல எடப்பாடி பழனிசாமி நானும் விவசாயிதான், நானும் விவசாயிதான் என கூறுவதாக பேசி உள்ளார். மு.க.ஸ்டாலின் விவசாயிகளை ரவுடிகளுடன் ஒப்பிட்டு பேசுகிறார். விவசாயிகளின் மனம் புண்படும்படியாக ஸ்டாலின் பேசுவதை தவிர்க்க வேண்டும். அவர் சிந்தித்து பேச வேண்டும். இதனை விவசாயி என்ற முறையில் நான் தெரிவிக்கின்றேன்.
உழைக்கும் வர்க்கத்தை மதிக்கும் அரசு அ.தி.மு.க. விவசாயிகள் விளைவிக்கும் அனைத்து பொருட்களையும் அரசே கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தவற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளுக்கு முழுபணமும் சென்றடையும். விவசாயத்தை பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? வெயிலில் ஏர் பிடித்து உழுபவர்களுக்கு தான் கஷ்டம் தெரியும். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தி அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்க மக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சண்முகநாதன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
புரோட்டீன் லட்டு![]() 2 days 18 hours ago |
காலிபிளவர் ரோஸ்ட்![]() 6 days 21 hours ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்![]() 1 week 2 days ago |
-
ரேசன் பொருட்கள் தட்டுப்பாடு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
05 Jul 2024சென்னை : ரேசன் பொருள் தட்டுப்பாடு குறித்து சுட்டிக்காட்டியும், தி.மு.க. அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1281 கனஅடியாக அதிகரிப்பு
05 Jul 2024சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1281 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு எப்படி வழங்க முடியும்? - சென்னை ஐகோர்ட் கேள்வி
05 Jul 2024சென்னை : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
15-ம் தேதி அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
05 Jul 2024சென்னை : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் வரும் 15-ம் தேதி காலை உணவு திட்டத
-
என்ஜினியரிங் தரவரிசை பட்டியல் 10-ம் தேதி வெளியாகிறது
05 Jul 2024சென்னை : என்ஜினியரிங் தரவரிசை பட்டியல் 10-ம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 11-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
05 Jul 2024சென்னை : தமிழகத்தில் 11-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நேர்மையான விண்ணப்பதாரர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்: நீட் தேர்வு முழுவதையும் ரத்து செய்வது நியாயமாக இருக்காது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
05 Jul 2024புதுடெல்லி, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, கடந்த மே 5-ம் தேதி நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் கடந்த மாதம் 4-ம் தேதி வெளியிடப்பட்டது.
-
பிரிட்டன் பொதுத்தேர்தல்: 26 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் வெற்றி
05 Jul 2024லண்டன், பிரிட்டனில் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அரசு வழங்கியது எப்படி? தொகையை மறுபரிசீலிக்க முடியுமா என ஐகோர்ட் கேள்வி
05 Jul 2024சென்னை, கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
05 Jul 2024சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.6,760-க்கும் சவரன் ரூ.54,080-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை சற்று உயர்ந்தது.
-
2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 11-ல் முதுநிலை ‘நீட்’ தேர்வு நடைபெறும்: தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு
05 Jul 2024புதுடெல்லி, முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
-
மர்மநபர்கள் வெறிச்செயல்: சென்னையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் படுகொலை
05 Jul 2024சென்னை : சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
-
பிரிட்டன் பார்லி. உறுப்பினரான உமா குமரனுக்கு முதல்வர் வாழ்த்து
05 Jul 2024சென்னை : தமிழர்களுக்கு தாங்கள் மிகப்பெரும் பெருமையைத் தேடித்தந்துள்ளீர்கள்” என்று பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினரான முதல் தமிழ்ப் பெண்ணான உமா குமரனுக்கு தமிழக முதல்வர் ம
-
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.16 கோடி மதிப்பிலான தங்கத்துடன் பயணி கைது
05 Jul 2024திருச்சி : சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.16 கோடி மதிப்பிலான தங்கத்தை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து: தொகுதி வாரியாக ஆய்வு செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டம்
05 Jul 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் முடிவுள் குறித்து தொகுதி வாரியாக ஆய்வு செய்ய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
-
வழக்கறிஞர் டு பிரிட்டன் பிரதமர்: கீர் ஸ்டார்மர் கடந்து வந்த பாதை
05 Jul 2024லண்டன் : பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் லேபர் கட்சி வேட்பாளர் கீர் ஸ்டார்மர் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், பிரிட்டனின் அடுத்த பிரதமராக அவர் விரைவில்
-
ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் விஜயகாந்தை பயன்படுத்த அனுமதி பெற வேண்டும்: தே.மு.தி.க. சார்பில் அறிவிப்பு
05 Jul 2024சென்னை, மறைந்த நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தை ஏ.ஐ.
-
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: சென்னையில் தி.மு.க.வழக்கறிஞர்கள் இன்று உண்ணாவிரத போராட்டம்
05 Jul 2024சென்னை : புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தி.மு.க.
-
டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் : தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதம் அமல்
05 Jul 2024சென்னை : டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதத்திற்குள் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித
-
ஆகஸ்ட்டில் மத்திய அரசு கவிழலாம்: லல்லு பிரசாத்
05 Jul 2024பாட்னா : ஆகஸ்ட்டில் மோடி அரசு கவிழலாம் என பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
-
ஈரான் அதிபர் தேர்தல்: 2-ம் சுற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பு: இன்று அதிகாரபூர்வ முடிவு வெளியீடு
05 Jul 2024டெக்ரான், ஈரான் அதிபரை தேர்ந்தெடுக்க நேற்று 2-ம் சுற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இன்று அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகும்.
-
பிரிட்டனின் புதிய பிரதமராக கீர் ஸ்டார்மர் பொறுப்பேற்கிறார்
05 Jul 2024லண்டன், பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு மேற்பட்ட இடங்களில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றிருக்கும் நிலையில் கீர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பே
-
மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு என்ன திட்டத்தை வாங்கி கொடுத்தார்? அண்ணாமலைக்கு இ.பி.எஸ். கேள்வி
05 Jul 2024கோவை, அண்ணாமலை பொறுப்புக்கு வந்த பிறகு தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்திருப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என குற்றஞ்சாட்டிய அ.தி.மு.க.
-
துரோகம் இழைப்பவர்களுக்கு பாடம் புகட்டுங்கள்: விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
05 Jul 2024சென்னை, சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு பாடம் புகட்ட இன்டியா கூட்டணி வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு வாக்களியுங்கள்” என்று விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு மு
-
வரலாற்றில் முதல் முறையாக கனடா ராணுவ தளபதியாக மூத்த பெண் அதிகாரி நியமனம்
05 Jul 2024ஒட்டவா, கனடாவின் புதிய ராணுவ தளபதியாக மூத்த பெண் ராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.