எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கோவில்பட்டி : விவசாயத்தை பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? வெயிலில் ஏர் பிடித்து உழுபவர்களுக்கு தான் கஷ்டம் தெரியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதிகளில் நேற்று பிரசாரம் செய்தார். இதற்காக ராமநாதபுரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டி வந்து அங்குள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் தங்கினார். நேற்று காலை 8.30 மணிக்கு வில்லிசேரி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு பருத்தி விவசாயிகளிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
யாரையும் எதிர்பார்க்காமல் சொந்த காலில் நிற்பவர்கள் விவசாயிகள். விவசாயத்திற்கு முதன்மையாக தேவைப்படுவது தண்ணீர். அதனை சரியான முறையில் கொடுக்க வேண்டும் என்பதற்காக குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தோம். இந்த பிரமாதமான திட்டத்திற்கு ஒட்டு மொத்த பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் ஏரி, குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டு மழைநீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்ததிட்டத்தின் மூலம் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாத ஏரி, குளங்களும், விவசாயிகள் பங்களிப்போடு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு தூர்வாரப்பட்டு வருகிறது.
குடிமராமத்து திட்டத்தின் மூலம் விவாயிகளுக்கு தேவையான குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கிறது. அமெரிக்கன் படை புழு தாக்குதலில் இருந்து மக்காசோளம் பயிர்களை காக்க ரூ.45 கோடியில் அரசே பூச்சி கொல்லி மருந்தை தெளித்தது. புயல், வெள்ளம், வறட்சி என விவசாயிகள் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ, அப்போது எல்லாம் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து அ.தி.மு.க. அரசு நிவாரணம் வழங்கி வருகிறது.
பயிர் காப்பீடு திட்டம் மூலம் இந்தியாவிலேயே அதிக இழப்பீடு வழங்கியது தமிழக அரசுதான். கடந்த 4 ஆண்டுகளில் 9 ஆயிரத்து 400 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கி உள்ளது. இவ்வாறாக குழந்தைகளை போல கவனித்து விவசாயிகளுக்கு தேவையானதை அரசு பார்த்து பார்த்து செய்து வருகிறது. நான் வெளிநாடு சென்று ஆய்வு செய்ததில் 65 லிட்டர் பால் கறக்கும் பசுக்களை பார்த்தேன். அது போல கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகளுக்கு கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. வாய் பேசுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பது போல வாய் பேச முடியாத ஜீவன்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கால்நடை ஆராய்சி மையம் உளுந்தூர்பேட்டையில் அமைக்கப்பட்டு உள்ளது.
கால்நடைகளை பாதுகாக்க அதிக அளவில் கால்நடை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. கோவில்பட்டியில் ரூ. 4 கோடியில் காளை ஆராய்ச்சி மையம் அமைய உள்ளது. விவசாயிகளுக்கு பயிர்களுக்கான இழப்பீடு தொகையை அதிகரித்து வழங்கிய அரசு அ.தி.மு.க. அரசு. கோவில்பட்டியில் 5 இடங்களில் அம்மா மினி கிளினிக் ஆரம்பிக்கப்பட்டது. அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு காரணமாக ஏழை மாணவர்களும் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். அடுத்தாண்டு 443 ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவார்கள். அவர்களுக்கான அனைத்து படிப்பு செலவையும் அரசே செலுத்தும்.
ஸ்டாலின் பேசும் போது நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான் என்று படத்தில் கூறுவது போல எடப்பாடி பழனிசாமி நானும் விவசாயிதான், நானும் விவசாயிதான் என கூறுவதாக பேசி உள்ளார். மு.க.ஸ்டாலின் விவசாயிகளை ரவுடிகளுடன் ஒப்பிட்டு பேசுகிறார். விவசாயிகளின் மனம் புண்படும்படியாக ஸ்டாலின் பேசுவதை தவிர்க்க வேண்டும். அவர் சிந்தித்து பேச வேண்டும். இதனை விவசாயி என்ற முறையில் நான் தெரிவிக்கின்றேன்.
உழைக்கும் வர்க்கத்தை மதிக்கும் அரசு அ.தி.மு.க. விவசாயிகள் விளைவிக்கும் அனைத்து பொருட்களையும் அரசே கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தவற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளுக்கு முழுபணமும் சென்றடையும். விவசாயத்தை பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? வெயிலில் ஏர் பிடித்து உழுபவர்களுக்கு தான் கஷ்டம் தெரியும். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தி அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்க மக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சண்முகநாதன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் பிரதமர் திடீர் மறுப்பு : அமைதிப் பேச்சுவார்த்தை கேள்விக்குறி
23 Feb 2025இஸ்ரேல் : பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் திடீர் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகியுள்ளது
-
தருமபுரி கிழக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் நீக்கம்: துரைமுருகன்
23 Feb 2025தருமபுரி : தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து தடங்கம் சுப்ரமணி நீக்கம் செய்யப்பட்டார்.
-
கோவை ஈஷா மகா சிவராத்திரி விழா வெற்றியடைய பிரதமர் மோடி வாழ்த்து
23 Feb 2025டெல்லி : கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற இருக்கும் மகாசிவராத்திரி விழா மகத்தான வெற்றியடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் இன்று முதல்வர் மருந்தகங்களை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
23 Feb 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் இன்று முதல்வர் மருந்தகங்களை திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
-
கொளத்தூர் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலின்
23 Feb 2025சென்னை : கொளத்தூர் பெரியார் நகரில் புதிதாய் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக்கு பெரியார் அரசு மருத்துவமனை என்று பெயரிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
-
சட்டத்துறை சுயாட்சியின் மீதான தாக்குதல்: வழக்கறிஞர் திருத்த மசோதாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
23 Feb 2025சென்னை : வழக்கறிஞர் திருத்த மசோதா சட்டத்துறை சுயாட்சியின் மீதான தாக்குதல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
32 பேர் கைதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் ஸ்டிரைக்
23 Feb 2025ராமேசுவரம்: இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் 4 விசைப்படகுகளை கைப்பற்றி, 32 மீனவர்களை கைது செய்துள்ளனர்.
-
த.வெ.க.வின் 2-ம் ஆண்டு தொடக்க விழா: நிர்வாகிகளுக்கு நுழைவு சீட்டு வினியோகிக்கும் பணி துவக்கம்
23 Feb 2025சென்னை : த.வெ.க.வின் ஆண்டு விழாவில் பங்கேற்பவர்களுக்கான நுழைவு சீட்டு வினியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.
-
4 மாதங்களுக்கு பிறகு ஹிஸ்புல்லா அமைப்பு தலைவர் இறுதிச்சடங்கு நடைபெற்றது
23 Feb 2025பெய்ரூட் : லெபனானின் கிளர்ச்சி அமைப்பான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் இறுதிச் சடங்குகள் அவர் உயிரிழந்த 4 மாதங்களுக்குப் பிறகு நேற்று நடைபெற்றது.
-
32 பேர் கைதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் ஸ்டிரைக்
23 Feb 2025ராமேசுவரம்: இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் 4 விசைப்படகுகளை கைப்பற்றி, 32 மீனவர்களை கைது செய்துள்ளனர்.
-
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது
23 Feb 2025ராமேசுவரம்: ராமேசுவரம் துறைமுக கடலோரப் பகுதியில் இருந்து சனிக்கிழமை காலையில் மீன் பிடிக்க சென்ற ஐந்து படகையும் இலங்கையை கடற் படையினர் சிறை பிடித்து படகிலிருந்த 32 மீனவர
-
சென்னை, தனியார் பள்ளி ஒன்றில் இந்தி மொழியில் கவிதை சொல்ல திணறிய மாணவரை அடித்த ஆசிரியை சஸ்பெண்ட்
23 Feb 2025சென்னை : சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இந்தியில் கவிதை சொல்ல முடியாமல் திணறிய மாணவரை இந்தி ஆசிரியை கடுமையாக அடித்து தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
-
தெலங்கானா சுரங்க விபத்து: தெலங்கானா முதல்வருடன் ராகுல் பேச்சு
23 Feb 2025ஐதராபாத் : தெலங்கானா சுரங்க விபத்து தொடா்பாக முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் கேட்டறிந்தாா்.
-
சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நேரடி வர்த்தகம்
23 Feb 2025டாக்கா : பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான அரசு அனுமதிப் பெற்ற நேரடி வர்த்தகம் முதல் முறையாகத் துவங்கப்பட்டுள்ளது.
-
தொடர் சிகிச்சையில் இருக்கும் போப் பிரான்சிஸ் உடல் நிலை கவலைக்கிடம்
23 Feb 2025வாடிகன் : 87 வயதான கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப்பின் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதாகவும், அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப
-
த.வெ.க. கட்சியுடன் கூட்டணியா? - புதுவை முதல்வர் ரங்கசாமி பதில்
23 Feb 2025புதுவை : த.வெ .க.வுடன்கூட்டணி குறித்த கேள்விக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி பதில் அளித்துள்ளார்.
-
தனது ரசிகர்கள் மீண்டும் கிடைத்துவிட்டனர்: ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி
23 Feb 2025துபாய்: தனது ரசிகர்கள் மீண்டும் கிடைத்துவிட்டதாக உணர்வதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
-
பிரான்சில் கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் பலி
23 Feb 2025பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 3 பேர் காயமடைந்தனர்.
-
வணிக வளாக மேற்கூரை இடிந்து 6 பேர் பலி
23 Feb 2025லிமா : பெரு நாட்டில் வணிக வளாகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
-
நாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை: அமைச்சர்
23 Feb 2025ஈரோடு: தெருநாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
-
5 நாட்கள் சுற்றுப்பயணம்: இந்திய ராணுவ தலைமை தளபதி பிரான்ஸ் தளபதியுடன் சந்திப்பு
23 Feb 2025புதுடெல்லி: இந்திய ராணுவ தலைமை தளபதி 5 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். அவர் பிரான்ஸ் தளபதியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
-
அமெரிக்காவில் இருந்து பனாமாவுக்கு நாடு கடத்தப்பட்ட 12 இந்தியர்கள் டெல்லி வருகை
23 Feb 2025புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து பனாமாவுக்கு நாடு கடத்தப்பட்ட 12 இந்தியர்கள் டெல்லி வந்தனர்.
-
பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம் : எலான் மஸ்க் எச்சரிக்கை
23 Feb 2025வாஷிங்டன் : பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தொழிலதிபர் எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
‘டிரோன் மகளிரை’ விவசாயிகள் நேரடியாக தொடர்பு கொள்ள ‘உழவர் கைபேசி செயலி’ : கோவை கலெக்டர் அறிவிப்பு
23 Feb 2025கோவை : விளைநிலங்களில் டிரோன் மூலம் மருந்து தெளிக்க, ‘உழவர் கைபேசி செயலி’ மூலமாக ‘டிரோன் மகளிரை’ விவசாயிகள் நேரடியாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கோவை மாவட்ட கலெக
-
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக 14 ஆயிரம் ரன்கள்: விராட் கோலி புதிய சாதனை
23 Feb 2025துபாய்: இந்திய அணியின் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.