எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : 4 ஆண்டுகளில் 400 ஆண்டு கால சாதனை புரிந்த முதல்வரின் திட்டங்களை எல்லாம் மறைக்கும் வண்ணம் எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரங்களை செய்து வருவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருமங்கலம் அம்மா கோவிலில் கழக அம்மா பேரவை சார்பில்1,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கம்ப்யூட்டர் வழங்கினார்
கழக அம்மா பேரவை சார்பில் அம்மா சேரிடபில் டிரஸ்டை சேர்ந்த 1,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு கணினி வழங்கும் நிகழ்ச்சி திருமங்கலம் தொகுதியில் உள்ள டி.குன்னத்தூரில் அம்மா திருக்கோயில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கழக அம்மா பேரவைை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கணினியை வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் கழக செய்தித்தொடர்பாளர் மருது அழகுராஜ், மதுரை மாவட்ட கல்வி அதிகாரி சாமிநாதன், மாவட்ட கழக அவைத்தலைவர் ஐயப்பன், மாவட்ட கழக பொருளாளர் திருப்பதி, கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், திருமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், கல்லுப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி, கள்ளிக்குடி ஒன்றிய கழக செயலாளர் மகாலிங்கம், பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்பிரமணி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் தமிழ்செல்வன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழரசன், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜஹாங்கீர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கராஜ பாண்டியன், மற்றும் உரப்பனூர் சாமிநாதன், டாக்டர் பாவடியான், பேராசிரியர்கள் மணிகண்டன், ராஜசேகர், கண்ணன், வேம்புலு ,ஜெனட் சங்கர், புலவர் சங்கரலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்
அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசியதாவது:
கடந்த 2 வருடத்துக்கு முன்பு இந்த சென்டரை ஹைடெக்காக உருவாக்குவேன் என்று நான் கூறினேன் தற்போது அது நடந்தேறியுள்ளது முயற்சி என்பது எளிதான காரியமல்ல விடா முயற்சியால் தான் மாபெரும் வெற்றி பெற்றோம் கடந்த 30 ஆம் தேதி இங்கு அம்மா திருக்கோவில் திறப்பு விழா நடைபெற்றது அதில் ஏ.சி.டி குழும்பத்தைச் சேர்ந்த பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பு சேர்த்தீர்கள் இது வழிபாட்டுத் தலமாக மட்டு மல்லாது சேவை மையமாக நாம் உருவாக்கி வருகிறோம்
இந்த திருக்கோவில் ஆன்மீகம், நலவாழ்வு, நலத்திட்ட உதவி, வழி காட்டும் பயிற்சி மையம், அறிவுசார் மையம் என மாபெரும் கேந்திரமாக திகழ்ந்து இங்கு வரும் அனைவருக்கும் ஒளியேற்றும் மையமாக விளங்கும் இது தென் தமிழகத்தின் மிக வரப்பிரசாதமாக நிச்சயம் இது உருவாகும்
புரட்சித்தலைவி அம்மா எப்படி செயல்பட்டு மக்களை காத்தாரோ அதே போல தான் தற்போது முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் உரையுடன் சட்டமன்றம் தொடங்கியது அரசின் செயல்திட்டத்தின் வடிவமாக கவர்னர் உரை இருந்தது இந்த 4 ஆண்டுகளில் 400 ஆண்டு கால சாதனை படைத்தவர் நமது முதலமைச்சர் ஆனால் இதையெல்லாம் மறைக்கும் வண்ணம் எதிர்க்கட்சிகள் பல்வேறு பொய் பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர் மக்கள் நலத்திட்டங்கள் எண்ணிப் பாராமல் ஆணவத்தின் உச்சமாக எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றனர்
புரட்சித்தலைவி அம்மா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் திட்டங்களை அறிவிப்பார் அதன் மூலம் மக்களின் விதியை மாற்றிக் காட்டுவார் அதுபோலத்தான் இன்றைக்கு நமது முதலமைச்சரும் செய்திட்டு வரலாறு படைத்து வருகிறார்
நேற்று வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்தார் அதில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார் இதன்மூலம் ஏறத்தாழ 16 லட்சத்தி 43 ஆயிரம் விவசாயிகள் குடும்பத்தில் ஒளி விளக்கு ஏற்றி உள்ளார் முதலமைச்சர்
தேர்தல் அறிக்கையில் கூட காலதாமதம் ஆகலாம் ஆனால் விவசாயிகள் கோரிக்கை வைக்காமல் கோரிக்கையை நிறைவேற்றி தந்து இதன் மூலம் விவசாயிகளின் காவலனாக முதலமைச்சர் திகழ்கிறார் இந்தியாவிலேயே கருணை, துணிச்சல், அறிவு, நிர்வாகத்திறமை உள்ளிட்ட அத்தனை திறமைகளும் பெற்ற ஒரே முதலமைச்சர் நமது முதலமைச்சர் ஆவார் அதுமட்டுமல்லாது தைத்திருநாளில் அனைவரும் இல்லங்களில் பொங்கல் பொங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு 2 கோடியே 6 லட்சம் குடும்பங்களுக்கு 2,500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கிய நமது முதலமைச்சர் நிச்சயம் அடுத்த பொங்கல் திருநாளில் பொங்கல் பரிசு வழங்க நீங்கள் நல் வாய்ப்பினை உருவாக்கித் தர வேண்டும்
அது மட்டுமல்லாது இளைய சமுதாயம் வைத்த கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு உரிமையை நிலைநாட்ட போராடி அதன்மீது வழக்கு தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார் இதுபோன்று மக்களின் எண்ணங்களின் நனவாக்கி வரும் முதலமைச்சரை பற்றி நாடும் ஏடும் பாராட்டி வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள் அம்மா சேரிடபில் டிரஸ்ட் குழுமத்தில் இருக்கும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு தற்போது கணினி வழங்கப்பட்டு வருகிறது நீங்கள் அதன் மூலம் உலக விஷயங்களை உள்ளங்கையில் வைத்துக்கொள்ள முடியும் அதுமட்டுமல்லாது திருமங்கலம் தொகுதியில் 324 கிராமங்களும், 27 நகராட்சி வார்டுகள், 30 பேரூராட்சி வார்டுகள் உள்ளன இதில் 2 லட்சத்து 70 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்
நீங்களெல்லாம் அம்மா அரசின் சாதனை திட்டங்களான எய்ம்ஸ் மருத்துவமனை, சாலைகள் மேம்படுத்தப்பட்ட பணிகள், 2000 மினி கிளினிக்குகள், மற்றும் கொரோனா காலத்திலும் அனைத்து வீடுகளுக்கும் காய்கறி தொகுப்புகள், அரிசி கோதுமை மேலும் மதுரை மாவட்டத்தில் 15 லட்சம் கபசுரக் குடிநீர் டப்பாக்கள் நாம் வழங்கியுள்ளோம் இதுபோன்ற சாதனைத் திட்டங்களை 250 நபர்களுக்கு ஒருவர் வீதம் என பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் வரும் தேர்தலில் திருமங்கலத்தில் மீண்டும் இரட்டை இலையை மலரச் செய்ய நீங்கள் பணியை மேற்கொண்டால் அடுத்த 5 ஆண்டுகளில் உங்கள் எண்ணம் எல்லாம் நனவாகும் என்று அவர் பேசினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 min ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
இன்று கரையை கடக்கும் டானா புயல்: ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
24 Oct 2024புதுடெல்லி: டானா புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரைகளுக்கு இடையில் இன்று கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இரு மாநிலங்களிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு முன
-
செய்தி மக்கள் தொடர்புத்துறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்
24 Oct 2024சென்னை: செய்தி மக்கள் தொடர்புத்துறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.
-
விளையாட்டு தலைநகராக தமிழகம் உருவாகி வருகிறது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
24 Oct 2024சென்னை: விளையாட்டில் சாதிக்க நினைப்பவர்களுக்கு வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று தெரிவித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக த
-
சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டி: சிக்கந்தர் ராசா புதிய சாதனை
24 Oct 2024நைரோபி: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, டேவிட் மில்லர் ஆகியோரின் மாபெரும் சாதனையை ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா முறியடித்துள்ளார்.
-
யூடியூபர் இர்பான் விவகாரத்தில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
24 Oct 2024சென்னை: குழந்தையின் தொப்புள் கொடி வெட்டிய விவகாரத்தில் இர்பான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, விளக்கம் கேட்டு இர்பானுக்கு நோட்
-
சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமித்து ஜனாதிபதி முர்மு உத்தரவு
24 Oct 2024புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமித்து ஜனாதிபதி முர்மு உத்தரவிட்டதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டின் 51-வது தலைமை நீதிபதியாக நவம்பர் 11
-
2024-முதலமைச்சர் கோப்பை: சென்னை அணி சாம்பியன்
24 Oct 2024சென்னை: முதலமைச்சர் கோப்பை 2024 போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
-
திருச்சியில் ரூ.81.72 கோடியில் புறவழிச்சாலை திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி
24 Oct 2024சென்னை: திருச்சியில் ரூ.81.72 கோடியில் புறவழிச்சாலை திட்டப்பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
-
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 128 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
24 Oct 2024சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 128 மீனவர்கள் மற்றும் 199 படகுகளையும் உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
-
தொடரை சமன் செய்த இந்தியா
24 Oct 2024இந்தியா - ஜெர்மனி அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட சர்வதேச ஹாக்கி தொடர் டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
-
புனேவில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பலி
24 Oct 2024புனே: புனேவில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.
-
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை
24 Oct 2024சென்னை, ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரித்துள்ளார்.
-
திராவிட மாடல் கல்விக்கு சாதனை மாணவ, மாணவிகளே சாட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
24 Oct 2024சென்னை: திராவிட மாடல் கல்வி சாதனைக்கு மாணவ, மாணவிகளே சாட்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஹேமந்த் சோரன்
24 Oct 2024ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஹேமந்த் சோரன் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
உ.பி. இடைத்தேர்தல்: காங்கிரஸ் கட்சி விலகல்
24 Oct 2024லக்னோ: இன்டியா கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் தீவிர பிரசாரம் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 27-ம் தேதி நடைபெறும் தமிழக வெற்றிக் கழக மாநாடு: இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்
24 Oct 2024சென்னை: வரும் 27-ம் தேதி நடைபெறும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமா நடைபெற்று வருகின்றன.
-
டெல்லியில் தொடர்ந்து மோசமாகும் காற்றின் தரம்
24 Oct 2024புதுடெல்லி: டெல்லியில் தொடர்ந்து காற்றின் தரம் மோசமாகி வருகிறது.
-
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்
24 Oct 2024மிர்புர்: வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து ம
-
சற்று குறைந்த தங்கம் விலை
24 Oct 2024சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 நேற்று முன்தினம் அதிகரித்த நிலையில் நேற்று சற்று குறைந்தது.
-
மழை வெள்ளம், நிலச்சரிவு:பிலிப்பைன்சில் 23 பேர் பலி
24 Oct 2024மணிலா: பிலிப்பைன்சில் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர்.
-
டக் அவுட்டில் மோசமான சச்சின் சாதனையை சமன் செய்த ரோகித்
24 Oct 2024புனே: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சினின் மோசமான சாதனையை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.
7 விக்கெட்டுகள்...
-
மும்பை விமான நிலையத்தில் ரூ.7.6 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
24 Oct 2024மும்பை: மும்பை விமான நிலையத்தில் ரூ.7.6 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
போதையின் பாதையில் செல்லக்கூடாது: இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
24 Oct 2024சென்னை: போதையின் பாதையில் இளைஞர்கள் செல்லக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக, ஒரு தந்தையாக உருக்கமான வேண்டுக
-
மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: ஒரே நாளில் 85 விமானங்களுக்கு விடுக்கப்பட்டதால் பரபரப்பு
24 Oct 2024புதுடெல்லி, ஒரே நாளில் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐக்கிய நாடுகள் சபை தினம் கடைபிடிப்பு
24 Oct 2024ஜெனீவா: ஐக்கிய நாடுகள் சபை தினம் (ஐ.நா. தினம்) நேற்று கொண்டாடப்பட்டது.