எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : எதிர்க்கட்சிகள் தெரிந்து கொள்ளவே அரசின் திட்டங்கள் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்படுகிறது என்றும் பொய் பிரச்சாரம் செய்வதற்கு ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். மேலும் இன்னும் 10- 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடி ரசீது வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அ.தி.மு.க. அரசு மக்களுக்கு கொடுத்துத்தான் பழக்கம், ஆனால் தி.மு.க.வுக்கு மக்களிடமிருந்து எடுத்து தான் பழக்கம் என்றும் அவர் கூறினார்.
5-வது கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 2 வது நாளாக நேற்று ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அரக்கோணம் தொகுதி கணபதி நகர், கைனூர் பகுதியில் தனது பிரச்சாரத்தை துவக்கிய அவர், அரக்கோணத்தில் நடைபெற்ற மகளிர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசியதாவது:–
அ.தி.மு.க. தொண்டர்கள் நிறைந்த கட்சி, அது மட்டுமல்ல தொண்டர்களால் ஆளப்படும் ஒரே ஆட்சி அ.தி.மு.க. ஆட்சியாகும். கொடுத்து, கொடுத்து சிவந்த கரத்திற்கு சொந்தக்காரர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. அதன் பிறகு இந்த இயக்கத்தை கண்ணை இமை காப்பது போல, காத்தவர் அம்மா. அ.தி.மு.க ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறி வருகின்றோம்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி தினந்தோறும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார். எவ்வளவு ரூபாய் செலவு செய்கின்றார்கள் என்று ஸ்டாலின் கூறி இருக்கிறார். என்னென்ன திட்டங்கள் செய்திருக்கின்றோம் என்று உங்களைப் போல் உள்ளவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றோம்.
ஸ்டாலின் தெரிந்து கொள்ளவே விளம்பரம்
மேடை பேச்சு பேசும் போது ஒரு எதிர்கட்சித் தலைவர், தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி கிழிச்சது என்ன என்று கேட்கிறார். நாங்கள் கிழித்ததை தான் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். நீ சட்டமன்றத்திற்கு வருவதில்லை, அரசாங்கம் போடும் திட்டங்களையும் பார்ப்பதில்லை, நாட்டில் என்ன நடக்கிறது என்பதையும் பார்ப்பதில்லை. அப்புறம் நீ என்ன தெரிந்து கொள்ள முடியும்.
ஆகவே, எதிர்கட்சி தலைவர் தெரிந்து கொள்வதற்காக, தி.மு.க. தலைவர் தெரிந்து கொள்வதற்காக, எதிர்கட்சிகள் எல்லாம் இந்த அரசாங்கம் என்னென்ன திட்டங்களை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தி வருகிறது என்பதை எல்லாம் தெள்ளத் தெளிவாக தெரிந்து கொள்வதற்காக நாங்கள் பத்திரிகை வாயிலாக செய்திகளை வெளியிட்டு கொண்டிருக்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது.
நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால், வேண்டுமென்றே இட்டுகட்டி பொய் பிரச்சாரம் செய்து பரப்பி வருவதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த செய்திகள். ஆகவே, உண்மை நிலையை தெரிந்து கொண்டு பேசுங்கள். நான் தெளிவாக சொன்னேன், நான் எந்த இடத்திற்கும் வேண்டுமானாலும் வருகிறேன், உங்கள் ஆட்சியில் என்ன நடந்தது என்று சொல், எங்கள் ஆட்சியில் என்ன நடந்தது என்று நான் சொல்கிறேன். ஆனால் வர மாட்டேன் என்கிறார். ஏன் என்றால் செய்திருந்தால் தானே வர முடியும். நான் இவ்வளவு தூரம் சொல்கிறேன். என்னென்ன திட்டங்களை எல்லாம் செய்தோம் என்று சொல்லி கொண்டு இருக்கிறேன். அவரால் ஒன்று சொல்ல முடியுமா?.
ஏழை எளிய மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்பை நாங்கள் கொடுத்து, அவர்களை கல்வி கற்க வைத்து, உயர செய்கிறோம். உங்கள் ஆட்சியிலே இதெல்லாம் கிடையாது. அரக்கோணத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொடுத்து ஏழை எளிய குடும்பத்திலே பிறந்த மாணவர்கள் கூட உயர்கல்வி படிக்கிறார்கள். இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் அதிக அளவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கொண்டு வந்து கல்வி தரத்தை உயர்த்திய அரசு எங்கள் அரசு.
பாலிடெக்னிக் கல்லூரி, ஐ.டி கல்லூரி, வேளாண்மை கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, எம்.பி.பி.எஸ். படிக்கக்கூடிய அந்த மருத்துவக் கல்லூரிகளையும் நாங்கள் தான் அதிகமாக கொண்டு வந்திருக்கின்றோம். ஒரே ஆண்டில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்திருக்கின்றோம்.
ஏற்கனவே நான் சட்டமன்றத்தில், சட்டசபை விதி எண் 110-ன் கீழ், முதலமைச்சர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் அமைத்து 9 லட்சத்து 77 ஆயிரம் மனுக்கள் தமிழ்நாடு முழுவதும் வாங்கி இருக்கிறோம். என்னுடைய மாவட்டத்தில் எல்லா இடங்களிலும் நானே போய் வாங்கினேன். அதேபோல் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களிடத்திலே மனுக்களை வாங்கினோம். அதில் 5 லட்சத்து 27 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இது சாதனை.
அதுமட்டுமல்ல, அம்மா திட்டம். அம்மா இருக்கின்ற போது ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் வருவாய் துறை அதிகாரிகளை அனுப்பி அந்தப் பகுதியிலே மக்களுக்கு என்ன குறைகள் இருக்கிறது என்று கேட்கப்படுகிறது, வருவாய் துறை சம்பந்தமான குறையாக இருந்தால் அங்கேயே அந்த குறை தீர்க்கப்படுகிறது. மற்ற துறைகளின் குறையாக இருந்தால் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்த அரசு அம்மாவின் அரசு. இரவு பகல் பாராமல் உழைக்கும் விவசாயிகள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக விவசாயிகளின் பயிர்கடன்களை ரத்து செய்த அரசு அம்மாவின் அரசு. அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இன்னும் 10–15 நாட்களில் விவசாயிகளின் பயிர்கடன் ரத்திற்கான ரசீதுகளும் வழங்கப்படும். எதை சொன்னாலும் அதை செய்கின்ற ஒரே அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம். இது உங்களுடைய அரசு, மக்களுடைய அரசு, மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற அரசு என்பதை மீண்டும் மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் உங்களது பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்திற்கு அளித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து அம்மாவின் ஆட்சி தொடர துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 4 days ago |
-
சென்னை விமான நிலையம் அருகே தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
03 Mar 2025xநாகை, சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அகத்தியா விமர்சனம்
03 Mar 2025கலை இயக்குநராக இருக்கும் ஜீவா, புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு பங்களா ஒன்றை எடுத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து ’ஸ்கேரி ஹவுஸ்ஆக உருவாக்கி, அதன் மூலம் பணம் சம்பாதிக்கி
-
சுழல் 2 விமர்சனம்
03 Mar 2025சமூக ஆர்வலர் லால் தனது கடற்கரை வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடக்கிறார்.
-
எதிரியாக அல்ல உதிரியாகத்தான் பார்க்கிறோம்: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்
03 Mar 2025சென்னை : நாங்கள் எடப்பாடி பழனிசாமியை எதிரியாக பார்க்கவில்லை உதிரியாகத்தான் பார்க்கிறோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க நேரடியாக தலையிட பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் : அனைத்துக்கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. பங்கேற்க வேண்டுகோள்
03 Mar 2025சென்னை : தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நீங்கள் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
நடிகையுடன் சமரசத்திற்கு வாய்ப்பும் இல்லை, தேவையும் இல்லை: சீமான் திட்டவட்டம்
03 Mar 2025மதுரை : நடிகையுடன் உடன்பாட்டுக்கு வாய்ப்பும் இல்லை, அதற்கான தேவையும் இல்லை என சீமான் தெரிவித்துள்ளார்.
-
வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளா் எண் கொண்ட அட்டைகள் போலியாே? - தலைமை தோ்தல் ஆணையம் விளக்கம்
03 Mar 2025புதுடில்லி : வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்ல என இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
ரூ 100 கோடியில் நாகையில் மீன்பிடித்துறைமுகம். புதிய பேருந்து நிலையம்: முதல்வர் புதிய அறிவிப்பு
03 Mar 2025நாகை : நாகப்பட்டினத்தில் 100 ரூபாய் மதிப்பீட்டில் புதிய மீன்பிடித்துறைமுகமும் பேருந்துநிலையமும் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
அனோரா திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை
03 Mar 2025லாஸ் ஏஞ்சல் : அனோரா திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.
-
தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கை அரசியலுக்காக எதிர்க்கப்படுகிறது : அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு
03 Mar 2025புதுடில்லி : தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கை அரசியலுக்காக எதிர்க்கப்படுவதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
-
மீனவர்கள் விவகாரத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கிறார் கவர்னர் ரவி மீது செல்வபெருந்தகை குற்றச்சாட்டு
03 Mar 2025சென்னை : தமிழக மீனவர்கள் பிரச்னையில் நீலிக்கண்ணீர் வடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார் இது குறித்து தமிழக காங
-
நடிகை விஜயலட்சுமி விவகாரம்: சீமான் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை
03 Mar 2025புது டெல்லி, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை விரைவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்
-
ராமஜெயம் கொலை வழக்கு: விசாரணை அதிகாரிகள் மாற்றம்
03 Mar 2025சென்னை : அமைச்சா் கே என். நேருவின் சகோதரர் கே என். ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட உக்ரைன் அதிபர்
03 Mar 2025கீவ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இது உக்ரைனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான நன்றியுணர்வு
-
கச்சத் தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க புதிய ஒப்பந்தம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
03 Mar 2025நாகப்பட்டினம், இதுவரை 3,656 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், மொத்தம் 734 முறை மீனவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது என்றும் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், த
-
அரையிறுதியில் 2 அணிகளுக்கும் அழுத்தம்: மனம் திறந்த ரோகித்
03 Mar 2025துபாய் : சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இரண்டு அணிகளுக்கும் அழுத்தம் இருக்குமென இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா தெரிவித்துள்ளார்.
-
பேரன் துஷ்யந் வாங்கிய கடனுக்காக சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Mar 2025சென்னை, திரைப்படத் தயாரிப்புக்காக பேரன் துஷ்யந்தின் நிறுவனம் வாங்கிய கடனுக்காக, நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத
-
மாநில பாடத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் +2 தோ்வு தொடக்கம்: 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் பங்கேற்பு
03 Mar 2025சென்னை, தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமைதொடங்கியது.
-
முல்லைப்பெரியாறு அணையில் புதிய கண்காணிப்பு குழு வரும் 7-ம் தேதி ஆய்வு
03 Mar 2025கூடலூர், முல்லைப்பெரியாறு அணையில் புதிய கண்காணிப்பு குழு வரும் 7-ம் தேதி ஆய்வு நடத்தவுள்ளது.
-
த.வெ.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி: விஜய் பங்கேற்பு
03 Mar 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மார்ச் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளார்.
-
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்: முதல் அரையிறுதியில் இன்று இந்தியா-ஆஸி. பலப்பரீட்சை
03 Mar 2025துபாய் : ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் முதல் அரையிறுதியில் இன்று இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
-
கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டால் புதிய சிக்கலில் அயோத்தி மாநகராட்சி
03 Mar 2025அயோத்தி : அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கி கோயில் நிர்வாகம் கொண்டுவந்த புதிய கட்டுப்பாட்டால் மாநகராட்சி புதிய பிரச்னையை சந்தித்து
-
ஆஸ்கர் விருது விழாவில் பாலஸ்தீன மக்களின் இன அழிப்புக்கு எதிராக குரல் கொடுத்த இயக்குநர்கள்
03 Mar 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : ஆஸ்கர் விருது விழாவில் ‘நோ அதர் லேண்ட்’ ஆவணப்படத்தின் இயக்குநர்கள் பாலஸ்தீன மக்களின் இன அழிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
-
கூரன் விமர்சனம்
03 Mar 2025கொடைக்கானலில் சாலை ஓரமாக தனது தாயுடன் செல்லும் நாய்க்குட்டி கார் மோதி இறந்து விடுகிறது.
-
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டன் அஜிங்க்யா ரஹானே
03 Mar 2025கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல். தொடர்...