எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 23.2.2021 அன்று தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன் துணிநூல் மற்றும் கதர்துறையின் கீழ் இயங்கும் பட்டு வளர்ச்சித் துறை சார்பில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள பல்நிலை குளிர்பதன அலகு மற்றும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில் ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விற்பனை நிலையம், தொழிற்கூடம் மற்றும் சுற்றுசுவருடன் கூடிய தேன்பொத்தை மற்றும் இலஞ்சி மண்பாண்ட உற்பத்தியாளர்கள் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்க தொழிற்கூடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர், கடந்த 14.6.2018 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு, தேசிய அளவில் வெண்பட்டு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் தலா 20 லட்சம் பட்டு முட்டைகளை பதனம் செய்யும் திறன் கொண்ட இரண்டு பல்நிலை குளிர் பதன அலகுகள் கிருஷ்ணகிரி மாவட்டம் - ஓசூரிலும், கிருஷ்ணகிரியிலும் செயல்பட்டு வருகின்றன. வெண்பட்டு முட்டை உற்பத்தியினை அதிகரித்து அதனை பதனப்படுத்திட, மேலும் 20 லட்சம் பட்டு முட்டைகளைப் பதனம் செய்யும் திறன் கொண்ட ஒரு பல்நிலை குளிர்பதன அலகு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும் என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு வட்டம், சின்னவேடம்பட்டியில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 20 லட்சம் வெண்பட்டு முட்டைகளை பதனம் செய்யும் திறன் கொண்ட பல்நிலை குளிர்பதன அலகினை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். இந்த அலகில், கூடுதலாக 20 லட்சம் வெண்பட்டு முட்டை தொகுதிகள் பதனம் செய்து ஆண்டுதோறும் விநியோகிப்பதன் மூலம் கூடுதலாக 3000 முதல் 5000 பட்டு விவசாயிகள் பயன்பெற இயலும். மேலும், அரசு வித்தகங்களில் உற்பத்தி செய்யப்படும் வெண்பட்டு முட்டைகளை தமிழ்நாட்டிலேயே பதனம் செய்து பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதன் மூலம் வெளி மாநிலங்களிலிருந்து வெண்பட்டு முட்டைகள் பெறப்படுவதை குறைக்க இயலும்.
தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய கட்டுப்பாட்டில் செயல்படும் தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள தேன்பொத்தை மண்பாண்ட உற்பத்தியாளர்கள் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்கத்தின் பழைய தொழிற்கூடங்களை இடித்து, அவ்விடத்தில் 5,500 சதுர அடியில் 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள விற்பனை நிலையம், தொழிற்கூடம் மற்றும் சுற்றுசுவருடன் கூடிய தேன்பொத்தை மண்பாண்ட உற்பத்தியாளர்கள் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்க தொழிற்கூடம் மற்றும் தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் அமைந்துள்ள இலஞ்சி மண்பாண்ட உற்பத்தியாளர்கள் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்கத்தின் பழைய தொழிற்கூடங்களை இடித்து, அவ்விடத்தில் 2,725 சதுர அடியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொழிற்கூடம் மற்றும் விற்பனை நிலையத்துடன் கூடிய இலஞ்சி மண்பாண்ட உற்பத்தியாளர்கள் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்க தொழிற்கூடம் ஆகியவற்றை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
இப்புதிய தொழிற்கூடங்களில், மண்பானைகள், பூந்தொட்டிகள், சமையல் பாத்திரங்கள், பொம்மைகள் போன்றவற்றை தொழிலாளர்கள் மழைக்காலங்களில் சிரமமின்றி உற்பத்தி செய்யவும், முடிவுற்ற பொருட்களை இருப்பு வைத்து ஆண்டுதோறும் விற்பனை செய்யவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பா.பென்ஜமின், ஜி. பாஸ்கரன், தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், பட்டுவளர்ச்சித் துறை இயக்குநர் டாக்டர் டி.ஜி. வினய், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் சாந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 days 12 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 week 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 weeks 1 day ago |
-
ஐ.நா. சபையில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக ரஷ்யா ஆதரவு
29 Sep 2024நியூயார்க் : ஐ.நா. சபையில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது.
-
சுனிதா வில்லியம்ஸை மீட்க புறப்பட்டது டிராகன் விண்கலம்
29 Sep 2024வாஷிங்டன் : இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ம் தேதி ஸ்டார் லைனர் விண்
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்க நாணயம் கண்டெடுப்பு
29 Sep 2024விருதுநகர் : வெம்பக்கோட்டை அகழாய்வில் 17-ம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த தென்னிந்திய தங்க காசு என சொல்லப்படும் தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-09-2024
29 Sep 2024 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-09-2024
29 Sep 2024 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-09-2024
29 Sep 2024 -
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
29 Sep 2024சென்னை : தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஹிஸ்புல்லா தலைவர் மரணம்: இஸ்ரேலுக்கு எதிராக காஷ்மீரில் போராட்டம்
29 Sep 2024ஸ்ரீநகர் : ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை கண்டித்து பட்காம் மற்றும் ஸ்ரீநகரில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.
-
ஹிஸ்புல்லா தலைவர் கொலை: இஸ்ரேலுக்கு ஜோபைடன் ஆதரவு
29 Sep 2024வாஷிங்டன் : ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் குண்டு வீசி கொன்றது பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நடவடிக்கை என அமெரிக்க அதிபர் பைடன் கருத்
-
உதயநிதி துணை முதல்வராவதால் முன்னேற்றம் ஏதும் வரப்போவதில்லை : மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்
29 Sep 2024சென்னை : சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் தூய்மை சேவை எனும் இயக்கத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
-
மான் கீ பாத் நிகழ்ச்சி: மூலிகை செடி வளர்ப்பில் ஈடுபடும் மதுரையை சேர்ந்த ஆசிரியைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
29 Sep 2024புதுடெல்லி : பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில், மூலிகை செடி வளர்ப்பில் ஈடுபடும் மதுரையை சேர்ந்த ஆசிரியை சுபஸ்ரீக்கு பாராட்டு தெரிவித்தார்.
-
பாகிஸ்தானின் நிலைக்கு அதன் கர்மா தான் காரணம் : ஐ.நா. சபையில் ஜெய்சங்கர் தாக்கு
29 Sep 2024நியூயார்க் : பாகிஸ்தானின் பொருளாதார நிலையின்மையினால் ஏற்பட்ட வறுமை நிலைக்கு அதன் கர்மாதான் காரணம் என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
-
விடுமுறை தினம்: குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்த குளியல்
29 Sep 2024தென்காசி, : நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
-
ஹிஸ்புல்லா இயக்கத்தின் அடுத்த தலைவராகிறார் ஹஷேம் சபிதீன்
29 Sep 2024பெய்ரூட் : லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து அந்த இயக்கத்தின் அடுத்த தலைவர
-
உக்ரைன் போரில் பாதிக்கப்பட்டோருக்கு செயற்கை உடல் உறுப்புகளை வடிவமைத்த இந்தியர்கள்
29 Sep 2024கீவ் : ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரில் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகளை இழந்த உக்ரைன் வாசிகளுக்கு செயற்கை உடல் உறுப்புக்களை வடிவமைத்துக் கொடுத்ததில் 2 இந்தியர்கள் முக்கிய
-
தமிழக மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிப்பு
29 Sep 2024ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
-
காஷ்மீரில் பிரச்சார கூட்டத்தில் திடீரென மயக்கமடைந்த கார்கே : தாங்கி பிடித்த நிர்வாகிகள்
29 Sep 2024ஜம்மு : காஷ்மீரில் பிரச்சாரத்தின்போது மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போதே காங்கிரஸ் தலைவர் கார்கே திடீரென மயக்கம் அடைந்தார்.
-
கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு தமிழகத்தில் விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
29 Sep 2024சென்னை : தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பயணிகள் எண்ணிக்கை அ
-
150 ஆண்டுகளாக இயங்கி வந்த டிராம் சேவையை நிறுத்த மே.வங்க அரசு முடிவு
29 Sep 2024கொல்கத்தா : சுமார் 150 ஆண்டுகளாக இயங்கி வந்த டிராம் சேவையை நிறுத்த மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.
-
என் மீதான விமர்சனங்களுக்கு எனது பணிகள் மூலம் பதில் அளிப்பேன் : உதயநிதி ஸ்டாலின் பேட்டி
29 Sep 2024சென்னை : என் மீது வைக்கப்படும் விமர்சனங்களை வரவேற்கிறேன். அதை உள்வாங்கிக் கொண்டு, எனது பணிகள் மூலம் பதில் அளிப்பேன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
முடங்கிய திட்டப்பணிகள்: டெல்லி முதல்வர் அதிஷி அமைச்சர்களுடன் ஆலோசனை
29 Sep 2024புதுடெல்லி : டெல்லியில் முடங்கிய திட்டப்பணிகள் குறித்து மாநில அமைச்சர்களுடன் முதல்வர் அதிஷி நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
-
மழைக்காலத்தில் தண்ணீரை சேமியுங்கள்: மான் கீ பாத் நிகழ்வில் பிரதமர் மோடி பேச்சு
29 Sep 2024புதுடெல்லி : மழைக் காலத்தில் தண்ணீரை சேமிப்பதன் மூலம் பஞ்சம் வரும் சமயத்தில் சமாளிக்க உதவும் என்று நேற்று நடந்த மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்க
-
பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: ஹிஸ்புல்லா அமைப்பின் மற்றொரு முக்கிய தலைவர் கொல்லப்பட்டார்
29 Sep 2024பெய்ரூட் : ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா நேற்று முன்தினம் (செப்.
-
விடுமுறை தினம் : திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
29 Sep 2024திருச்செந்தூர் : விடுமுறை தினமான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2718 கனஅடியாக அதிகரிப்பு
29 Sep 2024சேலம் : மேட்டூர் அணை நீர்வரத்து 2718 கன அடியாக அதிகரித்துள்ளது.