எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை நேற்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. அறிக்கையை முதல்வரும், துணை முதல்வரும் இணைந்து வெளியிட்டனர். தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை முன்னாள் அமைச்சர் பொன்னையன் வாசித்தார். அதில் ரேசன் பொருட்கள் வீடு தேடிவரும் திட்டம், அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும் வாஷிங்மெஷின் வழங்கும் திட்டம், அனைவருக்கும் வீடு, கல்விக்கடன் தள்ளுபடி போன்ற சிறப்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை முழுவிபரம்-
அனைவருக்கும் வீடு என்ற அம்மா இல்ல திட்டம் அமுல்படுத்தப்படும், மகளிர் நலன் (குல விளக்கு திட்டம்), மகளிருக்கு பேருந்து பயணச்சலுகை அளிக்கப்படும், ரேஷன் பொருட்கள் வீடுதேடி வரும் திட்டம் செயல்படுத்தப்படும், வாழ்வாதார உதவியாக வீட்டிற்கு ஆண்டிற்கு விலையில்லா 6 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும், உழவு மானியம் தரப்படும், அனைவருக்கும் சூரியசக்தி சமையல் அடுப்பு தரப்படும், அம்மா வாஷிங்மிஷின் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும், கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும், கல்லூரி மாணாக்கர்களுக்கு ஆண்டு முழுவதும் 2 ஜி.பி.டேட்டா வழங்கப்படும். உயர்கல்வி மற்றும் இளைஞர் நலனுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும், UPSC, NEET, IIT-JEE, TNPSC ஆகிய தேர்வுகளுக்கு பயிற்சி மையம் அமைக்கப்படும்,
ஓய்வூதியம் உயர்வு
வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும், முதியோர் உள்ளிட்ட ஓய்வூதியங்கள் ரூ.1000/-லிருந்து ரூ.2000/- ஆக உயர்த்தப்படும். திருமண தம்பதிகளுக்கு அம்மா சீர்வரிசை திட்டம் அமல்படுத்தப்படும், திருமண உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். விலையில்லா அரசு கேபிள் இணைப்பு, நோய் தடுப்புக்கு கொசுவலைகள், மத்திய அரசுப் பணிக்கு மாநில அளவிலான தேர்வில் தமிழ் நாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு, வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக தனித்துறை, உயர்நீதி மன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் ஆக்கப்படும், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்யப்படும், ஈழத் தமிழர் உட்பட எழுவர் விடுதலை, ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை, ஈழத் தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் நிரந்தர நீதி கிடைக்க வழிகாணுதல், இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை / குடியிருப்பு அனுமதி, காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் மின் இணைப்பு வழங்கப்படும். முக்கிய விவசாய விளைபொருள்களுக்கு தமிழ்நாடு அரசின் குறைந்தபட்ச ஆதார விலை அளிக்கப்படும், வேளாண் விளைபொருள் இலாபகரமான விற்பனைக்கு வழிகாட்டும் அமைப்பு, வாழை நூலில் இருந்து ஆடை செய்யும் தொழிற்கூடங்கள், ஒருங்கிணைந்த குளிர்சாதனக் கிடங்கு, சூரிய சக்தி மின் மோட்டார் மானியம் தொடரும், மாநில வேளாண்மை ஆணையம் உருவாக்கப்படும், நெல் மற்றும் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை, திரு.நம்மாழ்வார் அவர்கள் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம்,
வேளாண் இயந்திரங்களுக்கான தொழிற்கூடங்கள், முதல்வர் - விவசாயி வங்கித்திட்டம், நீலகிரி மாவட்டத்தில் காய்கறி, பழங்கள் பதப்படுத்தும் நிலையம் உருவாக்கப்படும், வறண்ட நில விவசாயி ஆராய்ச்சிக்கூடம், கரிசல் மண் - களிமண் - தூர்வை மண் எடுக்க தடையில்லா அனுமதி, புதிய கால்நடை மருத்துவக்கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள், தென் தமிழ்நாட்டில் உலகத் தரத்திலான கால்நடைப் பூங்கா அமைக்கப்படும், பெட்ரோல் – டீசல் விலை குறைப்பு , மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500-லிருந்து ரூ.2500/- உதவித்தொகை உயர்வு.
100 நாள் வேலை 150 நாட்களாக உயர்வு, அம்மா பசுமை வீடு திட்ட மானியம் ரூ.3.40 இலட்சமாக உயர்வு, பொங்கல் பண்டிகைக்கு உதவித்தொகை தொடரும், மாதந்தோறும் மின் பயனீட்டு கணக்கீடு, 9-10-11-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் சத்துணவு, தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு தனியார் பங்களிப்புடன் காலை சிற்றுண்டி விரிவாக்கம், அரசு பள்ளி சுயநிதி வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி, அங்கன்வாடி குழந்தைகளுக்கும், அனைத்து நிலை பள்ளி மாணாக்கர்களுக்கும் தினந்தோறும் 200 மி.லி. பால் / பால் பவுடர், அம்மா மினி கிளினிக்குகளுக்கு நவீன மருத்துவ வசதியுடன் கூடிய புதிய கட்டிடங்கள், புற்றுநோய் சிகிச்சைக்கு முக்கியத்துவம். 45
மகப்பேறு விடுப்பு உயர்வு
மகப்பேறு விடுப்பு, ஒரு வருடமாக உயர்வு, மகப்பேறு உதவித்தொகை அதிகரிப்பு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட நிதியுதவி உயர்வு , பெண்களின் பாதுகாப்புக்கு அனைத்து நகரங்களிலும் காவலன் செயலி, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தேவையான கடனுதவி மற்றும் மகளிர் வங்கி, சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருளை விற்க மின்னணு வணிக முறை, அம்மா பேங்கிங் கார்டு திட்டம், அனைத்து நகரங்களிலும் அம்மா ரோந்து வாகனங்கள்,
ஓட்டுநர் உரிமம் இனி இலவசம்
கட்டணமில்லா வாகன பயிற்சி- ஓட்டுநர் உரிமம், ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.25,000/- மானியத்தில் எம்.ஜி.ஆர் பசுமை ஆட்டோ, மதுபானக் கடைகள் படிப்படியாக மூடுதல் , கூட்டுறவு வீட்டு வசதி சங்க கடனை திருப்பி செலுத்துபவர்களுக்கு வட்டி, அபராத வட்டி தள்ளுபடி, மதுரை விமான நிலையத்திற்கு தேசியத்தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டுதல், மைய அரசு புதியதாக அறிமுகப்படுத்தியிருக்கும் குடியுரிமைத் திருத்த தடைச்சட்டத்தை கைவிட வலியுறுத்தல், கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவருதல், அவசியமான இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்குதல், கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் பெயரில் இஸ்லாமியப் பல்கலைக்கழகம், திருக்குர்ஆனை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்த “அல்லாமா ஆ. கா. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் பெயரில் இஸ்லாமிய இலக்கிய கருவூலம்” உருவாக்கப்படும், தமிழ் அறிஞர் சீகன் பால்கு அவர்கள் வாழ்ந்த இல்லம் அரசுடமை , இந்து ஆன்மீகப் பயணச்சலுகைக் கட்டணம் உயர்த்தி வழங்கப்படும், ஹஜ் பயணத்திற்கு செல்ல வழங்கப்படும், தொகை உயர்த்துதல், ஜெருசலேம் புனித பயணத்திற்கு சலுகை, கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பணிபுரியும் அடிப்படைப் பணியாளர்களுக்கு நலவாரியம், சிறுபான்மையினருக்கு மயான இடம் விலையில்லாமல் வழங்குதல், அனைத்து மத பழுதடைந்த ஆலயங்கள் புனரமைப்பு, கிராமஊர்க்கோயில் பூசாரிகளுக்கு ஊக்க ஊதியம், திருக்கோயில்களில் அன்னதானத் திட்டம் விரிவாக்கம்,
தூய்மைப் பணியாளர் ஊதியம் உயர்வு
தூய்மைப் பணியாளர் ஊதியம் ரூ.6000/- ஆக உயர்வு, மதிப்புமிகு முதியோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கப்படும், ஆதிதிராவிடர் தாட்கோ-கடன் தள்ளுபடி, ஆதிதிராவிடருக்கு புதிய தொகுப்பு வீடுகள், மதம் மாறிய ஆதிதிராவிடருக்கு பழைய சலுகையே தொடரும், பழங்குடியினர் பட்டியலில் விடுப்பட்ட இனத்தவரை சேர்த்தல், தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர் ஆணையம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சிறப்புக்கூறுகள் திட்ட நிதி தனிச்சட்டம் , புதிய நிலமெடுப்பு சட்டத்தின்படி உடனடி உரிய இழப்பீடு, கச்சத்தீவை மீட்க நடவடிக்கை, கடல் அரிப்பை தடுக்க தடுப்புச்சுவர், நெசவாளர்களுக்கு ரூபாய் ஒரு இலட்சம் வரை கடன் தள்ளுபடி, விசைத்தறிகளுக்கு மின்சாரம் 750 யூனிட்டிலிருந்து 1000 யூனிட்டாக உயர்த்தப்படும், நெசவாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.5,000/-, கைத்தறிக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு, நெசவாளர்களுக்கு நியாய விலையில் நூல், நெசவாளர் நல வாரியம், நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ. 10,000/- வட்டியில்லா சுழல் நிதிக் கடன், அமைப்புச்சாரா கூலித்தொழிலாளர்களுக்கு ரூ. 10,000/- வட்டியில்லா நுண் கடன், வேலையில்லாத இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை இரட்டிப்பு, அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களுக்கு கல்வித்தகுதிக்கேற்ப அரசுப்பணிகளில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை, இளைஞர்களுக்கு குறைந்த வட்டியில் மானியத்துடன் மென்கடன் ஒற்றை சாளர முறையில் குறுகிய காலத்தில் அனுமதி, உள்ளூர் மக்களுக்கு தனியார் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, விடுபட்ட ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள நிர்ணயம், மாவட்டங்கள் தோறும் சிறு தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், அமைப்புச்சாரா ஓட்டுநர்களுக்கு விபத்து காப்பீடு, மோட்டார் வாகன வணிக வளாகம், அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்பேட்டை நிறுவுதல், சிறுதொழில் நிறுவனங்களுக்கு மின் சலுகை, தொழில்துறைக்கு முன்னுரிமை, உப்பளத்தொழிலுக்கு மழைக்கால நிவாரணம், அ. வெள்ளி ஆபரண தொழில் நல வாரியம் , ஆ.வெள்ளி நகை தொழிலுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு, மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம், சென்னை, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து மீண்டும் கப்பல் போக்குவரத்து, கோதாவரி-காவிரி இணைப்புதுரித நடவடிக்கைகள், ஆணைமலையாறு-நல்லாறு, பாண்டியாறு-புன்னம்புழா அணைக்கட்டுத் திட்டங்கள் நிறைவேற்றம், முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி, தண்ணீர் தேக்கிவைக்கும் பணி துவக்கம், சென்னையில் உச்சநீதி மன்ற கிளை அமைக்க நடவடிக்கை, வழக்கறிஞர் சேம நல நிதி உயர்வு, போயர் சமுதாய மக்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும், திருவுருவச் சிலைகள்-மணிமண்டபங்கள் அமைத்தல் , சூரிய ஒளி மின்சார மானியம், பத்திரிக்கையாளர் நலன்காக்கப்படும். இவ்வாறு அந்த தேர்தல் அறிக்கையில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.
இந்த அறிக்கையில் உள்ள அம்சங்களை இல்லத்தரசிகள் வரவேற்று பாராட்டியுள்ளனர். காரணம் 6 சிலிண்டர் இலவசம், ரூ.1,500 உதவித்தொகை, வீடுதேடிவரும் ரேசன் பொருட்கள் திட்டம், அம்மா வாஷிங்மெசின் திட்டம், இவை அனைத்தும் இல்லத்தரசிகளை கவர்ந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 days 12 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 weeks 2 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்3 weeks 5 days ago |
-
தமிழகத்தில் 7 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2024சென்னை, தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்க அதிபர் பைடனுக்கு வெள்ளி ரயிலை பரிசாக அளித்தார் பிரதமர் மோடி
23 Sep 2024நியூயார்க், அமெரிக்காவில் அதிபர் பைடனுக்கு வெள்ளி ரயிலை பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.
-
அமெரிக்கா சென்றார் கமல்
23 Sep 2024சென்னை, மக்கள் நீதி மய்யத்தின் 2-வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவராக கமல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
-
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 ரியா சிங்காவுக்கு மகுடம்
23 Sep 2024ஜெய்ப்பூர், மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்றுள்ளார் 18 வயதான ரியா சிங்கா.
-
ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன் ? சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் விளக்கம்
23 Sep 2024சென்னை, ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர் செய்யப்பட்டது ஏன்? என்று சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கமளித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2024.
23 Sep 2024 -
லப்பர் பந்து விமர்சனம்
23 Sep 2024குடும்பம் வேலை என அனைத்து பணிகளையும் விட்டு விட்டு கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அட்ட கத்தி’ தினேஷ் ஒரு புறம்.
-
செல்போனில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது, பதிவிறக்கம் செய்வது குற்றம்: ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2024புதுடெல்லி, குழந்தைகள் ஆபாசப் படங்களைத் தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல, என்ற சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள சுப்ரீம் க
-
இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு அதிக அளவில் அபராதம் விதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
23 Sep 2024சென்னை, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் மீது அதிக அளவில் அபராதம் விதிப்பதைத் தடுத்திடவும், மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும், கைது செ
-
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுக்கு மேம்படுத்தப்பட்ட இணையதளம், மொபைல் செயலி தொடக்கம்
23 Sep 2024சென்னை : அரசு பேருந்துகளில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவிற்காக மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் மொபைல் செயலியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
-
கோழிப்பண்ணை செல்லதுரை விமர்சனம்
23 Sep 2024கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட பிரச்சனையால் சிறுவயதில் நாயகன் ஏகனும், அவரது தங்கையும் கைவிடப்படுகிறார்கள்.
-
இலங்கையின் 9-வது புதிய அதிபராக பதவியேற்றார் அனுரா குமார திசாநாயக்க: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
23 Sep 2024கொழும்பு, இலங்கையின் 9-வது அதிபராக தேசிய மக்கள் சக்தி (என்பிபி) சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசாநாயக்க நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
-
பும்ராவுக்கு ஸ்மித் புகழாரம்
23 Sep 2024அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா மிகச் சிறந்த பந்துவீச்சாளர் என ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் தெரிவித்துள்ளார்.
-
ரூ.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சேலம், தஞ்சை மினி டைடல் பூங்கா: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
23 Sep 2024சென்னை, ரூ.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சேலம், தஞ்சை மினி டைடல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
குரூப்-2, 2ஏ தேர்வு தற்காலிக விடை குறியீடு வெளியீடு
23 Sep 2024சென்னை : டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, 2ஏ தேர்வு கடந்த 14-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்ற நிலையில் அதற்கான தற்காலிக விடைக்குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.
-
கடைசி உலகப்போர் - விமர்சனம்
23 Sep 2024இவ்வுலகில் எதுவும் இல்லாத போது ஒற்றுமையாக இருக்க நினைக்கும் மக்கள் அனைத்து வசதிகளும் கிடைக்கும் போது ஒற்றுமையாக இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை கருவாகக் கொண்டு
-
பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு: இந்தியா ஆதரவு அளிக்கும் என உறுதி
23 Sep 2024அமெரிக்கா, பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்பொழுது பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தனது ஆதரவை தொடர்ந்து அளிக்கும் என உறுதியளித்தார்.
-
ஆவினின் ஹலால் நெய் வழங்கப்படுவதாக தகவல்: வதந்தி என அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கம்
23 Sep 2024சென்னை, கோவில்களுக்கு ஆவினின் ஹலால் நெய் வழங்கப்படுவதாக வெளியான தகவல் வதந்தி என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கமளித்துள்ளது.
-
லட்டு விவகாரம்: தலைமை அர்ச்சகர் தலைமையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாந்தி யாகம்
23 Sep 2024திருப்பதி, திருப்பதி ஏழமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்ட விவகாரத்தை அடுத்து கோவிலில் தலைமை அர்ச்சகர் தலைமையில் நேற்று சாந்த
-
புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகு பொதுவெளியில் தோன்றிய இளவரசி கேத் மிடில்டன்
23 Sep 2024லண்டன் : புற்றுநோய்க்கான ஹீமோதெரபி சிகிச்சையை நிறைவு செய்த இளவரசி கேத் மிடில்டன் சமீபத்தில் தனது அரச கடமைகளை மீண்டும் தொடங்கினார்.
-
பிரபுதேவாவின் பேட்ட ராப் இசை வெளியீடு
23 Sep 2024ப்ளூ ஹில் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜெ.
-
இயக்குனர் வெற்றிமாறன் வழங்கும் சார் திரைப்படம்
23 Sep 2024SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "சார்".
-
தமிழக மீனவர்களை விடுவிக்க முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
23 Sep 2024சென்னை : மீனவர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை தி.மு.க.
-
சென்னை-திருவள்ளூர் தடத்தில் மின்சார ரெயில் சேவை பாதிப்பு: பயணிகள் கடும் அவதி
23 Sep 2024சென்னை, சென்னை - திருவள்ளூர் தடத்தில், அண்ணனூர் - திருமுல்லைவாயில் இடையே ரயில் தண்டவாள பாதை சற்று இறங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
-
சென்னை காம்தார் நகரை ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்ற சரண் கோரிக்கை
23 Sep 2024சென்னை : சென்னை காம்தார் நகரை ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்ற முதல்வர் அலுவலகத்தில் சரண் கோரிக்கை விடுத்துள்ளார்.