எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கொழும்பு: இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 2-ம் தர அணி என இலங்கை மூத்த வீரர் அர்ஜூன ரனதுங்கா விமர்சித்திருந்த நிலையில் இந்திய கத்துக்குட்டி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அவர்களுக்கு பாடம் எடுத்துள்ளது.
2-ம் தர அணி...
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. அதே சமயம் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் ஆடுவதற்காக ஷிகர் தவான் தலைமையில், ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட 2ம் தர இந்திய அணி இலங்கைக்கு பயணித்துள்ளது.
இலங்கை பேட்டிங்...
இதன்படி இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா பேட்டிங் தேர்வு செய்தார்.
இலங்கை திணறல்...
இலங்கை தொடக்க ஆட்டக்காரர்களான அவிஷ்கா (32) மற்றும் மினோத் (27) ஓரளவு அடித்து ஆடி ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பின்பு ஆடிய பனுகா 24 ரன்களுக்கும், தனஞ்ஜெயா 14 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால், இலங்கை அணி 25 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து திணறியது. எனினும், அடுத்து விளையாடிய சரித் 38, தசுன் சனகா 39 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். வனின்டு 8 ரன்களில் வெளியேறினார்.
262 ரன்கள்...
சமிகா கருணாரத்னே அதிரடியாக விளையாடி 2 பவுண்டரிகள், 1 சிக்சர் அடித்து 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இசுரு 8 ரன்களில் ஆட்டமிழந்து உள்ளார். சமிகாவுடன் இணைந்து ஆடிய துஷ்மந்தா சமீரா 13 ரன்களில் ரன்அவுட் ஆனார். 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து இலங்கை 262 ரன்களை எடுத்திருந்தது.
தலா 2 விக்கெட்....
இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ், தீபக் சஹர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் தலா 2 விக்கெட்டுகள், குருணல் பாண்ட்யா மற்றும் ஹர்தீக் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இந்திய அணி வெற்றி பெற 263 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பிருத்வி - தவான்...
இதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான பிருத்வி ஷா 43 ரன்களில் பெர்னாண்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஷிகர் தவான் அதிரடி ஆட்டம் வெளிப்படுத்தினார்.
தவான் 86 ரன்கள்...
இஷான் கிஷன் (59), மணீஷ் பாண்டே (26) ரன்களில் ஆட்டமிழந்தனர். தவானுடன் இணைந்து விளையாடிய சூர்ய குமார் யாதவ் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தவான் 86 (95 பந்துகள் 6 பவுண்டரி, 1 சிக்சர்) ரன்களுடன் களத்தில் இருந்தார். இலங்கையின் தனஞ்ஜெயா 2 விக்கெட்டுகளும், லக்ஷன் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இந்தியா வெற்றி...
இந்திய அணி 36.4 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ரன்களை எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணியை விமர்சித்திருந்த இலங்கை முன்னாள் வீரர் அர்ஜூன ரனதுங்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். மேலும், இந்த கத்துக்குட்டி அணி, அபார வெற்றி மூலம் இலங்கை வீரர்களுக்கு பாடம் எடுத்துள்ளது.
BOX -1
ஷிகர் தவான் பெருமிதம்
வெற்றிக்கு பிறகு பேசிய கேப்டன் ஷிகர் தவான், "அனைத்து வீரர்களும் விரைவாகப் போட்டியை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் விளையாடினார்கள். இளம் வீரர்கள் அனைவரும் போட்டியின் சூழலுக்கு ஏற்ப விளையாடியது அற்புதமாக இருந்தது. மைதானம் சுழற்பந்துவீச்சாளருக்கு சாதகமாக இருந்தது.
இந்திய அணியின் மூன்று ஸ்பின்னர்களும் சிறப்பாக பந்துவீசினர். அணியில் பலவீனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஐபிஎல் மூலம் பல திறமையான இளம் வீரர்கள் கிடைத்துள்ளனர். அவர்களுக்கு மனஉறுதி அதிகமாக இருக்கிறது" என்றார் தவான்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 week ago |
-
தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை
09 Mar 2025சென்னை : தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி எம்.பி.க்களை ஒருங்கிணையுங்கள் : தி.மு.க. எம்.பி.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
09 Mar 2025சென்னை : தொகுதி மறுவரையறை பல மாநிலங்களின் பிரச்சினை என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களையும் ஒருங்கிணையுங்கள் என்று தி
-
இந்திய அணி மோசமான சாதனை
09 Mar 2025துபாய் : நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பீல்டிங்கில் மோசமான சாதனை படைத்துள்ளது.
-
பாராளுமன்றம் இன்று கூடுகிறது
09 Mar 2025புதுடெல்லி : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வுக்காக பாராளுமன்றம் இன்று கூடுகிறது.
-
சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு: விமலாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
09 Mar 2025சென்னை : சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வான விமலாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
2 நாட்கள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று செங்கை வருகை
09 Mar 2025சென்னை : இன்றும், நாளையும் (மார்ச் 10, 11 தேதிகளில்) முதல்வர் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு வருகை தந்து 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-03-2025
09 Mar 2025 -
மயிலாடுதுறை போலீசார் கூண்டோடு இடமாற்றம்
09 Mar 2025மயிலாடுதுறை : மயிலாடுதுறை பெரம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய 19 போலீசாரை கூண்டோடு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-03-2025
09 Mar 2025 -
உ.பி.யில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை
09 Mar 2025லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் உள்ளூர் பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
-
வார விடுமுறையையொட்டி குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
09 Mar 2025கன்னியாகுமரி : வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்..
-
பான் மசாலா விளம்பர விவகாரம்: ஷாருக்கான் உள்பட 3 நடிகர்களுக்கு சிக்கல்
09 Mar 2025ஜெய்ப்பூர் : பான் மசாலா விளம்பரத்தில் நடித்த நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷராப் ஆகியோர் ஆஜராக ஜெய்ப்பூர் நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
-
ஜக்தீப் தன்கரை நலம் விசாரித்த பிரதமர் மோடி: விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக ட்வீட்
09 Mar 2025புதுடெல்லி : குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரின் உடல்நலன் குறித்து மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்த பிரதமர் மோடி, அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகத் தெ
-
ம.பி. யில் வருகிறது புதிய சட்டம்: பெண் குழந்தைகளை மதமாற்றம் செய்தால் மரண தண்டனை
09 Mar 2025போபால் : பெண் குழந்தைகளை மதமாற்றம் செய்வபவருக்கு மரணத் தண்டனை வழங்குவதற்காக மாநிலத்தின் மதமாற்ற தடைச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கான பணிகளை பா.ஜ.க.&nbs
-
நெஞ்சுவலி காரணமாக துணை ஜனாதிபதி டெல்லி மருத்துவமனையில் அனுமதி
09 Mar 2025புதுடெல்லி : குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் நெஞ்சுவலி மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்க
-
அமெரிக்காவில் இந்து கோயில் சேதம்: மத்திய அரசு கடும் கண்டனம்
09 Mar 2025புதுடெல்லி : அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு இந்து கோயிலில் நடந்த நாசவேலைக்கு இந்தியா தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. விகிதங்கள் மேலும் குறையும்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் தகவல்
09 Mar 2025மும்பை : சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி. ) விகிதங்கள் மேலும் குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
-
இந்தி படிப்பதால் வேலை கிடைக்குமா? - பா.ஜ.க.வினருக்கு திருமாவளவன் கேள்வி
09 Mar 2025சென்னை : இந்தி படிப்பதால் எங்கே வேலை கிடைக்கும் என்பதை பா.ஜ.க.வினர் சொல்ல வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் எதிலும் அரசியல்தான்: மகாராஷ்டிர மாநில கவர்னர் வேதனை
09 Mar 2025கோவை : இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி அரசியல் செய்வது என்பது தமிழகத்தில் வாடிக்கையாக இருக்கிறது என்று மகாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
-
தமிழகம் முழுவதும் மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 74,922 வழக்குகளுக்கு தீர்வு; 659 கோடி ரூபாய் இழப்பீடு
09 Mar 2025சென்னை : தமிழகம் முழுவதும் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 74 ஆயிரத்து 922 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.659 கோடி இழப்பீடு வழ
-
விலங்குகளை பாதுகாப்பதில் நாம் முன்னணியில் இருப்போம் : பிரதமர் நரேந்திரமோடி பதிவு
09 Mar 2025புதுடெல்லி : விலங்குகளை பாதுகாப்பதிலும், பூமியின் நிலைத்தன்மைக்கு பங்களிப்பதிலும் நாம் எப்போதும் முன்னணியில் இருப்போம்" என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
இந்தி தெரியாததால் எந்த கஷ்டமும் இல்லை: கனிமொழி எம்.பி. பேட்டி
09 Mar 2025சென்னை : இந்தி தெரியாததால் தனக்கு எந்த கஷ்டமும் ஏற்படவில்லை என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
சிரியா உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கானோர் பலி
09 Mar 2025டமாஸ்கஸ் : சிரியாவில் உள்நாட்டுப் போரில் 2 நாள்களில் ஆயிரக்கணக்கானோர் பலியானதாக போர் கண்காணிப்புக் குழு தெரிவித்தது.
-
ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன 3 பேர் சடலமாக மீட்கப்பட்டதால் பதற்றம்
09 Mar 2025ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன 3 பேர் சடலமாக மீட்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
-
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: தி.மு.க. எம்பிக்கள் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் தீர்மானம்
09 Mar 2025சென்னை : தொகுதி மறு சீரமைப்பில் மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து செயல்பட திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு