எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துபாயில் இன்று மீண்டும் தொடங்கவுள்ள ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல்.லின் 2-ம் பகுதி ஆட்டத்தின் 30-வது லீக்கில் எம்.எஸ். டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி இந்தியாவில் தொடங்கியது. மே 2-ம் தேதி 29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்கள் கொரோனா தொற்றால் இந்தியாவில் நடத்தப்படவில்லை. ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இந்தப் போட்டிகள் மாற்றப்பட்டது.
14-வது ஐ.பி.எல். சீசனின் 2-வது கட்ட ஆட்டங்கள் இன்று (19-ம் தேதி) தொடங்கி அக்டோபர் 15-ம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. எஞ்சிய 27 லீக் ஆட்டங்கள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் ஆக மொத்தம் 31 ஆட்டங்கள் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
இறுதிப்போட்டி...
துபாயில் 13 , சார்ஜா 10, அபுதாபியில் 8 ஆட்டங்களும் நடக்கிறது. அக்டோபர் 8-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. முதல் குவாலிபையர் அக்டோபர் 10-ம் தேதியும், எலிமினேட்டர் 11-ம் தேதியும், 2-வது குவாலிபையர் 13-ம் தேதியும், இறுதிப்போட்டி அக்டோபர் 15-ம் தேதி துபாயிலும் நடக்கிறது.
29 ஆட்டங்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகியவை 5 வெற்றி, 2 தோல்வியுடன் தலா 10 புள்ளிகள் பெற்று முறையே 2-வதுமற்றும் 3-வது இடங்களில் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் 8 புள்ளியுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் (6 புள்ளி), பஞ்சாப் கிங்ஸ் (6 புள்ளி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (4 புள்ளி), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (2 புள்ளி ) ஆகிய அணிகள் முறையே 5 முதல் 8-வது இடங்களில் உள்ளன. லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் “பிளே ஆப்” சுற்றுக்கு முன்னேறும்.
முதல் ஆட்டத்தில்...
துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை அணி, மும்பையை வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அதே நேரத்தில் மும்பை அணி 5-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
கடந்த 2020 சீசன் சென்னை சூப்பா் கிங்ஸ் அணிக்கு சோகமானதாக அமைந்தது. முதன்முறையாக பிளே ஆ‘ஃ‘ப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை. எனினும் அதில் இருந்து மீண்ட சென்னை அணி நடப்பு 2021 தொடரின் முதல் சிறப்பாக ஆடி 5 வெற்றிகளுடன் அணிகள் பட்டியலில் 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
சென்னை அணியில் முக்கிய வீரரான டுபிளெஸிஸ் காயத்தால் பங்கேற்பது சந்தேகமே. கொரோனா குவாரன்டைன் விதிகளால் இங்கிலாந்து ஆல்ரவுண்டா் சாம் கர்ரனும் தொடரில் பங்கேற்கவில்லை. பேட்டிங்கில் சுரேஷ் ரெய்னா, ருத்துராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, உத்தப்பா, டோனி ஆகியோர் வலு சோ்க்கின்றனா். சாம் கர்ரன் இல்லாதது சென்னைக்கு பலவீனமாக அமையும். மிடில் ஆா்டரில் ராயுடு, டோனி, ஜடேஜா களமிறங்கலாம்.
4-ம் இடத்தில்...
அதே வேளை மும்பை இந்தியன்ஸ் அணி 4 வெற்றி, 3 தோல்விகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. மேலும் மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சா்மா பேட்டிங்கில் சிறப்பான ஃபார்முடன் உள்ளார். ஆல் ரவுண்டா் பொல்லார்ட் , குயிண்டன் டி காக், சூரியகுமார் யாதவும் பேட்டிங் வரிசையில் நம்பிக்கை தருகின்றனா். ரோஹித்-டி காக் தொடக்க வரிசையில் களம் இறங்குவா். மூன்றாவது வரிசையில் இஷான் கிஷான், 4-வது வீரராக சூரியகுமார் யாதவும் களமிறங்கலாம் எனத் தெரிகிறது. ஹர்த்திக் பாண்டியா, பொல்லார்ட், க்ருணால் பாண்டியா என 3 ஆல்ரவுண்டா்கள் மும்பை தரப்பில் உள்ளனா்.
அணிகள் விவரம்:
ருத்துராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்.எஸ். டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஹேசல்வுட், சா்துல் தாகுா், லுங்கிநிகிடி, தீபக் சஹார்.
ரோஹித் சா்மா (கேப்டன்), குயிண்டன் டி காக், சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான், பொல்லார்ட், ஹர்த்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, நாதன் கூல்டா் நைல், ஜெயந்த் யாதவ், ராகுல் சஹார், ஜஸ்ப்ரீத் பும்ரா, டிரென்ட் பௌல்ட்.
அதிக சிக்ஸர்கள்...
கடந்த வருடம் அதிக சிக்ஸர்கள் அடித்த அணிகளில் 137 சிக்ஸர்களுடன் முதலிடம் பிடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. 105 சிக்ஸர்களுடன் ராஜஸ்தானுக்கு 2-ம் இடம். இந்த வருடம் பந்தை சிக்ஸருக்குப் பறக்க விடுவதில் சிஎஸ்கே முன்னணி வகிக்கிறது. சிக்ஸர்கள் பட்டியலில் 43 சிக்ஸர்களுடன் மும்பை அணி 7-வது இடத்தை ஹைதராபாத் அணியுடன் இணைந்து வகிக்கிறது. டெல்லி அணி சிக்ஸர்கள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 32 சிக்ஸர்கள் மட்டுமே. ஏழு ஆட்டங்களில் 62 சிக்ஸர்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது.
முதலிடத்தில் ராகுல்...
இந்த வருடம், அதிக சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் பஞ்சாப் அணியின் கே.எல். ராகுல் 16 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஐ.பி.எல் அதிக சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேன்கள்.
1) கே.எல். ராகுல் - 16, 2) பேர்ஸ்டோ - 15, 3) ராயுடு - 13, 4) பட்லர் - 13, 5) ரஸ்ஸல் - 13, 6) டு பிளெஸ்சிஸ் - 13, 7) பொலார்ட் - 13.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 days ago |
-
நடிகை விஜயலட்சுமி விவகராம்: சீமானின் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
02 Mar 2025புதுடில்லி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) விசாரிக்கிறது.
-
3,000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் எகிப்தில் கண்டுபிடிப்பு
02 Mar 2025கெய்ரோ : எகிப்து நாட்டில் 3000 ஆண்டுகள் பழைமையான தங்கச் சுரங்கப்பகுதி கண்டறியப்பட்டுள்ளது.
-
பயோ டெக்னாலாஜி நுழைவுத்தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
02 Mar 2025சென்னை : முதுநிலை பயோ டெக்னாலாஜி படிப்புகளுக்கான கேட்-பி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் (மார்ச் 3) நிறைவு பெறுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 03 -03-20235
02 Mar 2025 -
சிம்பொனி அரங்கேற்ற லண்டன் செல்லும் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்தினார் முதல்வர் ஸ்டாலின
02 Mar 2025சென்னை : இசைஞானி இளையராஜா மார்ச் 8-ம் தேதி லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்ற உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இளையராஜா இல்லத்திற்கு சென்று அவருக்கு நேரில் வ
-
புதிதாக பாஸ் போர்ட் பெற பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் : மத்திய அரசு புதிய அறிவிப்பு
02 Mar 2025புதுடெல்லி : புதிதாக பாஸ் போர்ட் பெற பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
உ.பி. அலிகர் முஸ்லிம் பல்கலை.யில் பிளஸ் 1 மாணவர் சுட்டுக்கொலை : சக மாணவர் வெறிச்செயல்
02 Mar 2025புதுடெல்லி : உத்தரப் பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் பிளஸ் 1 மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
-
அமெரிக்காவின் அலுவல் மொழியாக ஆங்கிலம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
02 Mar 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக ஆங்கிலம் இருக்குமென அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 11,12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து : தன்னம்பிக்கையுடன் எழுதுமாறு அறிவுறுத்தல்
02 Mar 2025சென்னை : 2024-25-ஆம் கல்வியாண்டுக்கான 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது : தயார்நிலையில் தேர்வு மையங்கள்
02 Mar 2025சென்னை : தமிழகத்தில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
-
த.வெ.க. பெயரில் விஷமக் கருத்துகள்: பொதுச்செயலாளர் ஆனந்த் எச்சரிக்கை
02 Mar 2025சென்னை : த.வெ.க. பெயரில் விஷமக் கருத்துகளைத் திணிக்கும் முயற்சி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
-
சீமான் வழக்கில் தி.மு.க.வின் தலையீடா? - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்
02 Mar 2025புதுக்கோட்டை : சீமான் விவகாரத்தில் தி.மு.க. பின்புலத்தில் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
மீனவர்கள் பிரச்சினையில் ஆக்கபூர்வமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் : தமிழ்நாடு அரசுக்கு கவர்னர் வலியுறுத்தல்
02 Mar 2025ராமேசுவரம் : மீனவர் பிரச்சினையை அரசியலாக்குவதற்குப் பதிலாக ஆக்கபூர்வமான அணுகுமுறையை மாநில அரசு மேற்கொண்டால் அது பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு பெரி
-
இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே தென் மாவட்ட பஸ்கள் இயக்கப்படும் : போக்குவரத்து கழகம் அறிவிப்பு
02 Mar 2025சென்னை : தென்மாவட்டங்களிலிருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த பஸ்கள் இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளத
-
நன்றியுணர்வு மற்றும் பக்தியின் அடையாளம் ரம்ஜான் நோன்பு : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
02 Mar 2025புதுடெல்லி : ரம்ஜான் நோன்பு நேற்று (மார்ச் 2) தொடங்கியுள்ள நிலையில் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மூன்றாண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தில் 41.3 லட்சம் பேர் பயன் தமிழக அரசு தகவல்
02 Mar 2025சென்னை: நான் முதல்வன் திட்டத்தின்கீழ், இதுவரையில் 41.3 லட்சம் பேர் பயன்பெற்றிருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது.
-
தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு இன்று தொடக்கம்
02 Mar 2025புதுச்சேரி : புதுச்சேரி, காரைக்காலில் தமிழக அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் 102 தனியார் பள்ளிகளில் படிக்கும் மற்றும் தனி தேர்வர்கள் 8,105 ஆயிரம் பேருக்கும் பிளஸ் 2 பொத
-
உணவக மேலாண்மை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு
02 Mar 2025சென்னை : இளநிலை உணவக மேலாண்மை படிப்புகளுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
இனி நிம்மதியாக இருக்க முடியாது: சீமான் மீது நடிகை சாபம்
02 Mar 2025சென்னை: சீமான் இனி நிம்மதியாக இருக்கமுடியாது என்று வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் நடிகை வெளியிட்டுள்ளார்.
-
கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது திருச்செந்தூர் முருகன் கோவில் மாசித்திருவிழா
02 Mar 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
-
பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து மருமகனை நீக்கினார் மாயாவதி
02 Mar 2025புதுடில்லி: பகுஜன் சமாஜில் அதிரடி மாற்றமாக, பகுஜன் சமாஜின் தலைவரும் உ.பி., முன்னாள் முதல்வருமான மாயாவதி,கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் மருமகன் ஆகாஷ் ஆனந்தை நீக்கி
-
இன்று நாகை புதிய பஸ் நிலையத்தில் 105 பஸ்களின் சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
02 Mar 2025நாகப்பட்டினம் : இன்று நாகை புதிய பஸ் நிலையத்தில் 105 பஸ்களின் சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
-
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு
02 Mar 2025சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
-
உக்ரைனுக்கு 2.8 பில்லியன் டாலர் பிரிட்டன் நிதியுதவி
02 Mar 2025லண்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனான சந்திப்புக்கு பிறகு பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் ஐரோப்பிய தலைவர்களை உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி சந்திக்கவுள்
-
உத்தரகண்ட் பனிச்சரிவு பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
02 Mar 2025டெஹ்ராடூன்: உத்தரகண்டில் பணிச்சரிவில் காணாமல் போன மேலும் ஒருவரின் உடல் ராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.