எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Image Unavailable](/sites/all/themes/thinaboomi/images/photos/image-30.jpg)
பெகாசஸ் விவகாரம்: வல்லுநர்கள் விசாரணைக் குழு அமைப்பது குறித்து அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பிக்கிறது.
இஸ்ரேல் நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட விசாரணைக் குழு அமைப்பது தொடர்பாக தொடரப்பட்ட மனுக்கள் மீது அடுத்தவாரம் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற கூட்டத் தொடர் முடங்கியது.
இதனிடையே, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினர் சார்பில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கடந்த 13-ம் தேதி ஒரு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்.
அதில், பெகாசஸ் விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் என்பது உயர்ந்த தொழில்நுட்பம் சார்ந்த விஷயம். ஆதலால், வல்லுநர்கள் குழுவின் மூலம் ஆய்வு செய்வது அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெகாசஸ் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி உபாத்யாயா ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளார்.
மனுதாரர்கள் கோரியபடி, பிரமாண பத்திரத்தில் தகவல்களை வெளியிடுவது நாட்டின் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வெளியிட முடியாது. பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விரிவான பதில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு விரும்பவில்லை. மத்தியஅரசு சார்பில் எதையும் மறைக்க விரும்பவில்லை. அதனால்தான் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட குழுவை அமைத்து, குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடுகிறோம்.
குறிப்பிட்ட மென்பொருள் பயன்படுத்தி மத்திய அரசு கண்காணிப்பில் ஈடுபட்டதா, இல்லையா என்று வெளிப்படையாக விவாதிக்க அரசு விரும்பவில்லை. இந்தத் தகவல்கள் நாட்டின் நலனுக்கும் உகந்ததாக இருக்காது. ஆனால், வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்யும் எந்த தகவலையும் மத்திய அரசு வெளியிடத் தேவையில்லை என்றுகூறி விசாரணையை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த மனு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களில் ஒருவரின் வழக்கறிஞர் சி.யு.சிங் ஆஜராகினார்.
இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா, வழக்கறிஞர் சி.யு.சிங்கிடம் கூறுகையில், பெகாசஸ் விவகாரத்தில் வல்லுநர்கள் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு மீது அடுத்தவாரம் உத்தரவைப் பிறப்பிக்கிறோம். இந்த வாரமே உத்தரவுகளை பிறப்பிக்க நினைத்தோம். ஆனால், குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் தனிப்பட்ட காரணங்களால் வர இயலவில்லை. அடுத்தவாரம் இந்த வழக்கில் உத்தரவுகளைப் பிறப்பிக்கிறோம். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற வழக்கறிஞர்களிடம் இந்தத் தகவலைத் தெரிவித்து விடுங்கள் எனத் தெரிவித்தார்.
கடந்த 13-ம் தேதி இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்தபோது, அடுத்த சில நாட்களில் உத்தரவுகளைப் பிறப்பிக்கிறோம் எனத் தெரிவி்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு தொடர்பாக விரிவான பிரமாணப் பத்திரத்தை அமைச்சரவைச் செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது சுப்ரீம் கோர்ட் சார்பில் வல்லுநர்கள்குழு அமைத்து விசாரணைநடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி மனுதாதர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசோ, பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்படும் சில தகவல்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கும். என்ன மாதிரியான ஒட்டுக்கேட்பு செயலிகள் பயன்படுத்துகிறோம் எனத் தெரிந்தால் தீவிரவாதிகள் விழிப்படைந்துவிடுவார்கள் அது தேசத்தின் பாதுகாப்புக்கு சிக்கலாகும் எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பாஸ்தா ஸ்நாக்ஸ்![]() 12 hours 30 min ago |
ஜூசி சிக்கன்![]() 4 days 16 hours ago |
சிக்கன் ரோல்![]() 1 week 17 hours ago |
-
தமிழகத்தில் ஜூலை 1-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
26 Jun 2024சென்னை : தமிழகத்தில் ஜூலை 1-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
4 மாதங்களில் செந்தில் பாலாஜி வழக்கை முடிக்க ஐகோர்ட் உத்தரவு
26 Jun 2024சென்னை : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை 4 மாதங்களில் முடிக்க சென்னை முதன்மை அமர்வுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
த.வெ.க. சார்பில் நாளை மாணவர்களுக்கு பரிசுகள் : விழா ஏற்பாடுகள் தீவிரம்
26 Jun 2024சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாளை மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெறுவதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
-
ராகுல் காந்திக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து
26 Jun 2024சென்னை : மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக தோ்வாகியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்த
-
சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசே நடத்தக்கோரி முதல்வரின் தனித் தீர்மானம்: சட்டசபையில் நிறைவேற்றம்
26 Jun 2024சென்னை, சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசை நடத்தக் கோரிய தீர்மானம் நேற்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது.
-
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தொடர் அமளி: கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க.வினர் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு
26 Jun 2024சென்னை, சட்டப்பேரவை தொடங்கியதுமே இன்றும் (ஜூன் 26) அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
-
மக்களவை சபாநாயகராக ஓம்பிர்லா மீண்டும் தேர்வு: பிரதமர் நரேந்திர மோடி - ராகுல் காந்தி வாழ்த்து
26 Jun 2024புது டெல்லி, பாராளுமன்ற மக்களவை சபாநாயகராக குரல் வாக்கெடுப்பு மூலம் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.
-
அமெரிக்காவில் கடும் வெப்பம்: உருகிய ஆப்ரகாம் லிங்கன் சிலை
26 Jun 2024வாஷிங்டன் : அமெரிக்காவில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக, அமெரிக்காவின் 16-வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகியுள்ளது.
-
கள்ளக்குறிச்சி சம்பவம்: கருணாபுரத்தில் குஷ்பு தலைமையிலான குழு நேரில் விசாரணை
26 Jun 2024கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கருணாபுரம் கிராமத்தில் தேசிய மகளிர் ஆணையக்குழு உறுப்பினர் குஷ்பு மற்றும் 3 பேர் கொண்ட விசாரணை குழு நேரில் சென்று விசாரணை நடத்தியது. 
-
அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப் - பைடன் இன்று நேருக்கு நேர் விவாதம்
26 Jun 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி இன்று நடக்கிறது.
-
கென்யாவில் தொடரும் வன்முறை: எச்சரிக்கையாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்
26 Jun 2024நைரோபி, கென்யாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
-
குற்றாலம் அருவிகளில் குளிக்க 3-வது நாளாக தொடரும் தடை
26 Jun 2024தென்காசி : மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-06-2024.
26 Jun 2024 -
வடகொரியாவின் குப்பை பலூன்களால் தென் கொரியாவின் விமான நிலையம் முடங்கும் சூழல்
26 Jun 2024சியோல் : வடகொரியா அனுப்பி வரும் குப்பைகள் நிரம்பிய பலூன்களால் தென்கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையம் முடங்கும் சூழல் உருவாகி உள்ளது.
-
அமெரிக்காவின் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழப்பு
26 Jun 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
-
அவசரநிலைக்கு எதிரான தீர்மானம் எதிர்க்கட்சியினர் அமளியால் பாராளுமன்றம் ஒத்திவைப்பு
26 Jun 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவையில் அவசரநிலைக்கு எதிரான தீர்மானம் வாசிக்கப்பட்டதை தொடர்ந்து, நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
-
மக்களவையில் திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் அணைப்பு : எதிர்க்கட்சிகள் அதிருப்தி
26 Jun 2024புதுடெல்லி : பாராளுமன்ற வளாகத்தில் இருந்த அம்பேத்கர், காந்தி உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் இடமாற்றம் செய்தது குறித்து மக்களவையில் வி.சி.க.
-
காசியில் சாலையோர உணவகத்தில் சிற்றுண்டி சாப்பிட்ட நீடா அம்பானி
26 Jun 2024வாரணாசி : காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்த, ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா, பிறகு அங்குள்ள சாலையோர உணவகத்தில் சாப்பிட்ட வீடியோ வல
-
பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
26 Jun 2024சென்னை : அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கொள்கை முடிவு பரிசீலனையில் உள்ளதாக நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு தெ
-
ஆதார விலையுடன் நெல்லுக்கு கூடுதல் ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
26 Jun 2024சென்னை, நெல்லுக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், காரீப் கொள்முதல் பருவத்திற்கு ஆதார விலையுடன் ஊக்கத்தொகையும் சேர்த்து வழங்க உத்தரவிட்ட
-
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி: மக்களவை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
26 Jun 2024புதுடெல்லி : எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை அங்கீகரித்து மக்களவை தலைவர் ஓம் பிர்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
-
ரஷ்ய ராணுவ தளபதிக்கு சர்வதேச கோர்ட்டு பிடிவாரண்ட்
26 Jun 2024மாஸ்கோ : உக்ரைன் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில் முன்னாள் ராணுவ அமைச்சர் செர்ஜி சோய்கு மற்றும் ராணுவ தளபதி வலேரி ஜெராசிமோவ் ஆகியோருக்கு
-
நேட்டோ அமைப்பின் பொது செயலாளராக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே நியமனம்
26 Jun 2024வாஷிங்டன், நேட்டோ அமைப்பின் பொது செயலாளராக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
-
கள்ளச்சாராய பலி மேலும் உயர்வு
26 Jun 2024கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
26 Jun 2024ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.