எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
9 பேரூராட்சிகளை நகராட்சிகளாக மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, ஆகஸ்டு 24-ம் தேதி நடைபெற்ற நகராட்சி நிர்வாகத்துறை மானிய கோரிக்கையின் போது, நகராட்சி சார்பில் கொள்கை விளக்க கையேடு வெளியிடப்பட்டது. அப்போது உரையாற்றிய அமைச்சர் கே.என் நேரு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நகர்ப்புற மக்கள்தொகை 48.45 சதவீதம் ஆகும். 2021-ம் ஆண்டு தற்போதைய சூழலில் மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புற மக்கள்தொகை சுமார் 53 சதவீதமாக உயர்ந்துள்ளதெனக் கருதப்படுகிறது. எனவே, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளை ஒட்டியுள்ள நகர்ப்புறத் தன்மையோடு உள்ள பகுதிகளை நகர்ப்புறங்களோடு இணைத்து, தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.
தற்போது நகராட்சியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியாகவும், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளை நகராட்சியாகவும் அதுபோன்றே மாநகராட்சிகள், நகராட்சிகளில் சிலவற்றை விரிவாக்கம் செய்திடவும், தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.
தற்போதுள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில், நகர்ப்புறத்தன்மை, மக்கள்தொகை அடர்த்தி, ஆண்டு வருமானம், பொருளாதார முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையிலும் நகர்ப்புறமாக மாறி வருகின்ற இந்தப் பகுதிகளிலும் நகரத்துக்கு இணையான அடிப்படை வசதிகளை அளித்திடும் நோக்கிலும் பின்வருமாறு உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயர்த்தப்படுகின்றன.
தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு மாநகராட்சியாக அமைக்கப்படும். மேலும், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய நகராட்சிகள் அதனைச் சுற்றி வளர்ச்சி அடைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும்.
திருச்சி, நாகர்கோவில், தஞ்சாவூர், ஓசூர் ஆகிய மாநகராட்சிகளும், செங்கல்பட்டு, பூவிருந்தவல்லி, மன்னார்குடி ஆகிய நகராட்சிகளும் அவற்றைச் சுற்றியுள்ள வளர்ச்சியடைந்துள்ள பேரூராட்சிகளையும், ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவித்தார். அதன்படி கடந்த 12-ம் தேதி தாம்பரம், கரூர், கும்பகோணம், காஞ்சிபுரம், கடலூர், சிவகாசி நகரங்கள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் தற்போது தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்துவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி தென்காசி மாவட்டம் சுரண்டை, நெல்லை மாவட்டம் களக்காடு, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், மாங்காடு, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் , இராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர் ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 week 5 days ago |
மூக்கில் நீர்வடிதலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்2 weeks 1 day ago |
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.2 weeks 5 days ago |
-
சீதாராம் யெச்சூரி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் - ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
12 Sep 2024புதுடெல்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல் நலக்குறைவால் நேற்று காலமான நிலையில் அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.கஸ்டா
-
உடல்நலக்குறைவால் மறைந்த சீதாராம் யெச்சூரியின் உடல் தானம்
12 Sep 2024புதுடெல்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியின் உடல், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-09-2024
12 Sep 2024 -
டிச. 14-க்குள் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம்: ஆதார் ஆணையம் அறிவிப்பு
12 Sep 2024புது டெல்லி, ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
-
மயிலாடுதுறை அருகே கார், லாரி மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு
12 Sep 2024சிதம்பரம், மயிலாடுதுறை அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்த முதல்வருக்கு விருப்பமில்லை: ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி
12 Sep 2024ஈரோடு, டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு எள்ளளவும் விருப்பமில்லை.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு
12 Sep 2024மேட்டூர், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,619 கன அடியாக குறைந்துள்ளது.
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நல குறைவால் காலமானார்
12 Sep 2024புது டெல்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 72.
-
ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக இந்தியருக்கு அமைச்சர் பதவி
12 Sep 2024சிட்னி, ஆஸ்திரேலிய அமைச்சரவையில் கேரளாவில் பிறந்த ஒருவருக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. இந்நாட்டில் அமைச்சராகும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: தமிழகத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்
12 Sep 2024திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவையொட்டி தமிழகத்தில் இருந்து 150 சிறப்பு விரைவு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
மிலாடி நபி, தொடர் விடுமுறை: 1,515 சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை ஏற்பாடு
12 Sep 2024சென்னை, மிலாடி நபி மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 1,515 சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற வழக்கு: வேலூர் கோர்ட்டில் தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் ஆஜர்
12 Sep 2024வேலூர், 2019-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற வழக்கின் விசாரணைக்காக வேலூர் நீதிமன்றத்தில் தி.மு.க.
-
பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது: முக்கிய ரயில்களில் 5 நிமிடங்களில் முடிந்தது
12 Sep 2024சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக, ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கியது.
-
துர்கா பூஜைக்கு கட்டுப்பாடு விதித்த வங்கதேச அரசு
12 Sep 2024டாக்கா, தொழுகை நேரத்தில், துர்கா பூஜை மேற்கொள்ளும் இந்துக்கள் பாட்டு போடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுத்தும்படி வங்கதேச இடைக்கால அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
-
அக்டோபர் 3-வது வாரத்தில் நடக்கிறது த.வெ.க. மாநாடு
12 Sep 2024சென்னை, தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டின் தேதி மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 3-வது வாரத்தில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பொறியியல் படிப்பில் 15 ஆயிரம் மாணவர்கள் கூடுதல் சேர்க்கை: அமைச்சர் பொன்முடி தகவல்
12 Sep 2024சென்னை, இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் 15 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தமிழக மாணவர்கள் இரு மொழி கொள
-
இளைஞர்களுக்கு வழி விட வேண்டும்: கட்சியினர் மத்தியில் துரைமுருகன் பேச்சு
12 Sep 2024வேலூர், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று வேலூரில் நடைபெற்ற தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினத்தில் டிரம்ப் 24 என எழுதப்பட்ட தொப்பியை அணிந்த பைடன்
12 Sep 2024வாஷிங்டன், இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தின நிகழ்ச்சியில் டிரம்ப் 24 என எழுதப்பட்டிருந்த தொப்பியை அதிபர் ஜோபைடன் அணிந்திருந்தார்.
-
உக்ரைனுக்கு மேலும் 700 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கும் அமெரிக்கா
12 Sep 2024கீவ், மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் மின்சாரம், கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு அமெரிக்கா 700 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க உள்ளதாக அமெரிக
-
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சட்டம்,ஒழுங்கு சரியில்லை: ராகுல் காந்தி கருத்து
12 Sep 2024புது டெல்லி, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சட்ட ஒழுங்கு இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.நா. ஊழியர்கள் உள்பட 34 பேர் பலி
12 Sep 2024காசா, காசாவின் மத்திய பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.நா. ஊழியர்கள் உட்பட 34 பேர் உயிரிழந்தனர்.
-
பிரதமர் மோடி பிறந்த நாள்: அஜ்மீர் தர்காவில் வரும் 17-ம் தேதி சைவ சமபந்தி விருந்துக்கு ஏற்பாடு
12 Sep 2024ஜெய்ப்பூர், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 17-ம் தேதி அஜ்மீர் ஷெரீப் தர்காவில் 4,000 கிலோ எடையுள்ள சைவ சமபந்தி விருந்து, பக்தர்களுக்கு வழங்கப்படு
-
கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் ஜனவரி முதல் பயன்பாட்டுக்கு வரும்: அதிகாரிகள் தகவல்
12 Sep 2024சென்னை, கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
செயற்கைகோள்கள் மூலம் இனி சுங்க கட்டணம் வசூல்: மத்திய அரசு புதிய அறிவிப்பு
12 Sep 2024புது டெல்லி, சுங்க சாவடிகளில் இனி பாஸ்டேக் முறையுடன், செயற்கைக்கோள் அடிப்படையிலான குளோபல் நேவிகேஷன் சாட்டலைட் சிஸ்டம் என்ற புதிய முறை மூலம் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக
-
தமிழகத்தில் 18-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
12 Sep 2024சென்னை, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வரும் 18-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.