எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Shankar-Jiwal 2023 06 24](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2023/12/03/Shankar-Jiwal_2023_06_24.jpg?itok=Uf_3Am5c)
Source: provided
சென்னை : சோதனையின்போது அத்துமீறி நடந்து கொண்டதாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மீது டி.ஜி.பி.யிடம் அமலாக்கத்துறையினர் புகார் அளித்துள்ளனர்.
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ரெய்டு நடத்திய விவகாரம் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறையினர் மீது அமலாக்கத்துறை புகார் அளித்திருக்கிறது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபு என்பவரை, வழக்கு ஒன்றில் இருந்து விடுவிக்க ரூ.51 லட்சம் லஞ்சம் கேட்ட புகாரில், மதுரையில் பணியாற்றும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
சுரேஷ் பாபு மீதான வழக்கு ஏற்கெனவே முடிந்து விட்ட நிலையில், இதே வழக்கை பிரதமர் அலுவலகம் மீண்டும் விசாரிக்க இருப்பதாகவும் கூறி இதிலிருந்து தப்பிக்க ரூ.2 கோடி வரை அங்கித் திவாரி லஞ்சம் கேட்டிருக்கிறார்.
இதனையடுத்து மருத்துவர் தமிழ்நாடு லஞ்ச ஒழப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில், லஞ்சம் பெற்றதாக அங்கித் திவாரி கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அவரை திண்டுக்கல் செட்டி நாயக்கன்பட்டியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. எனவே இது தொடர்பாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் உள்ள அங்கித் திவாரியின் அறையை சோதனையிட லஞ்ச ஒழிப்புத்துறை முயன்றனர்.
ஆனால் இதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த விவரங்களை காண்பித்து ரெய்டு நடத்தியே ஆக வேண்டும் என்று உறுதியாக கூறினர். இதனையடுத்து ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. சுமார் 13 மணி நேரம் நடைபெற்ற ரெய்டில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து அங்கித் திவாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய வரலாற்றில் மத்திய விசாரணை அமைப்பின் அலுவலகத்தில் மாநில விசாரணை அமைப்பு ரெய்டு மேற்கொள்வது இதுவே முதல்முறை என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், சோதனையின்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அத்துமீறி நடந்து கொண்டதாக அமலாக்கத்துறை புகார் அளித்துள்ளது. தமிழக டி.ஜி.பி.யிடம் மதுரை அமலாக்கத்துறை தரப்பில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் எடுத்து சென்றதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 1 week ago |
-
2-வது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி: 14 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி
09 Feb 2025காலே, இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
-
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது
09 Feb 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது கூட்டத்தில் விரைவில் தாக்கலாகும் தமிழக பட்ஜெட் குறித்து விவாதிக்கப்படுகிறது.
-
வரும் 21, 22-ம் தேதிகளில் கடலூருக்கு செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Feb 2025சென்னை, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் வெற்றி பெற முடியாது என்பதால் அமைதியை கெடுக்கும் வேலைகளை தூண்டுகின்றனர் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், வஞ்சிப்பது பா.ஜ.க.
-
தேஜஸ் போர் விமானத்தில் ஒன்றாக பறந்த ராணுவ, விமானப்படை தளபதிகள்
09 Feb 2025பெங்களூரு, கர்நாடகாவில் நடக்கும் ஏரோ இந்தியா விமான கண்காட்சியையொட்டி, ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி, விமானப்படை தலைமை தளபதி ஏ.பி.சிங் ஆகியோர் ஒன்றாக தேஜஸ் போர் விமா
-
அதிக வயதில் அறிமுகம்
09 Feb 2025இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
-
விவாகரத்து தொடர்பான ஜீவனாம்சம் வழக்கில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
09 Feb 2025புதுடில்லி, முதல் கணவரிடம் இருந்து சட்டபூா்வமாக விவாகரத்து பெறாவிட்டாலும் 2-ஆவது கணவரிடம் ஜீவனாம்சம் கோர பெண்ணுக்கு உரிமை உள்ளது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
தமிழக மாணவர்களுக்குரிய ரூ.2,152 கோடி நிதி பறிப்பு: மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
09 Feb 2025சென்னை, தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதி பறித்து மற்ற மாநிலங்களுக்கு வழங்கும் இரக்கமற்ற செயலில் மத்திய அரசு ஈடுபட
-
7.6 ரிக்டர் அளவில் கரீபியன் தீவில் நிலநடுக்கம்
09 Feb 2025மெக்சிகோ சிட்டி, கரீபியன் கடற்பகுதியில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் 31 நக்சல்கள் சுட்டுக்கொலை
09 Feb 2025பிஜாபூர், சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 31 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
ரூ.18.63 கோடி மதிப்பில் திருச்சி பறவைகள் பூங்கா: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
09 Feb 2025திருச்சி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், கம்பரசம்பேட்டை ஊராட்சி, அய்யாளம்மன் படித்துறை பகுதியில் ரூ.18.63 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருச்சி பறவைகள் பூங்கா
-
தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 38 பேர் திடீர் பணியிட மாற்றம்
09 Feb 2025சென்னை, தமிழ்நாட்டில் 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
-
35.12 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் அச்சடிக்கும் பணி தீவிரம்
09 Feb 2025சென்னை, வரும் கல்வியாண்டில் 35.12 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று பிரயாக்ராஜ் பயணம்
09 Feb 2025பிரயாக்ராஜ், உலகின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்
-
ஆஸ்திரேலியா வெற்றி எதிரொலி:ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மாற்றமில்லை
09 Feb 2025துபாய், இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ள நிலையில் ஐ.சி.சி டெஸ்ட்
-
உ.பி. மகா கும்பமேளாவில் இதுவரை 41 கோடி பக்தர்கள் புனித நீராடல்
09 Feb 2025பிரயாக்ராஜ், உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் இதுவரை 41 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஊழல் கட்சியாக மாற்றி விட்டார்: டில்லி தோல்விக்கு கெஜ்ரிவால் தான் முழு பொறுப்பு: பிரசாந்த் பூஷண் குற்றச்சாட்டு
09 Feb 2025புதுடில்லி, டில்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு கெஜ்ரிவால் தான் முழு பொறுப்பு என்று அந்த கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான பிரபல வக்கீல்
-
இலங்கை கடற்படையினரால் 14 தமிழ்நாடு மீனவர்கள் கைது
09 Feb 2025ராமேசுவரம், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 14 தமிழ்நாடு மீனவர்கள், 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.
-
தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டில் 18 வயதிற்கு கீழே உள்ளவர்கள் பணம் வைத்து விளையாட தடை
09 Feb 2025சென்னை, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாட தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
மணிப்பூரில் போதைச் செடிகள் அழிப்பு
09 Feb 2025இம்பால், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் சட்டவிரோதமாக 5 ஏக்கர் அளவில் வளர்க்கப்பட்ட போதைச் செடிகள் பாதுகாப்புப் படையினரால் அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டபோது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்
09 Feb 2025சென்னை, நடிகர் அஜித் குமார் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கியதாக தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் காங்கிரஸ் கட்சியை 4-ம் இடத்திற்கு தள்ளிய ஒவைசி
09 Feb 2025புதுடில்லி, டெல்லியில் ஒவைசியின் கட்சி தான் போட்டியிட்ட 2 தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தை பிடித்துள்ளது.
-
உ.பி. மகா கும்பமேளாவில் 4-வது முறையாக தீவிபத்து
09 Feb 2025பிரயாக்ராஜ், பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் 4வது முறையாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
-
மணிப்பூரில் 3 தீவிரவாதிகள் கைது
09 Feb 2025இம்பால், மணிப்பூர் மாநிலம், இம்பால் மேற்கு மாவட்டத்தில் இருந்து மூன்று தீவிரவாதிகளை மணிப்பூர் காவல்துறை கைது செய்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
டெல்லியில் வெற்றி பெற்ற பா.ஜ.க., ஆம் ஆத்மியின் முக்கிய வேட்பாளா்கள்
09 Feb 2025புதுடில்லி, டெல்லி சட்டப்பேரவை தோ்தலில் ஆட்சியமைக்கத் தகுதி பெற்றுள்ள பா.ஜ.க. 48 தொகுதிகளிலும், ஆட்சியைப் பறிகொடுத்த ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளிலும் வென்ற
-
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமா
09 Feb 2025இம்பால், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை நேற்று (பிப். 9) ராஜினாமா செய்தார்.