எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. இதன்படி நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் உள்ள ஸ்கை ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திராவின் அரை சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 215 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்படும் நிலையில், அந்த ஓவரை டிம் சவுதி வீசினார். அதில் முதல் 5 பந்துகளில் 12 ரன்கள் வந்த நிலையில், கடைசி பந்தில் வெற்றிக்கு 4 ரன் தேவைப்பட்டது. அதனை எதிர்கொண்ட டிம் டேவிட் பவுண்டரி அடித்து அணியை கடைசி பந்தில் திரில் வெற்றி பெற வைத்தார். மிட்செல் மார்ஷ் 72 (44 பந்துகள்) ரன்களுடனும், டிம் டேவிட் 31 (10 பந்துகள்) ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சான்ட்னர் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
டோனியை பார்க்க வேண்டும்: துருவ்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியில் அறிமுகம் ஆன விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரேல் தனது முதல் போட்டியிலேயே சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அசத்தினார். இதன் காரணமாக அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் வேளையில் எதிர்வரும் 23-ம் தேதி ராஞ்சி நகரில் நடைபெற இருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பிடித்து விளையாடுவார் என்பது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் டோனியின் சொந்த ஊரான ராஞ்சி நகரில் விளையாட இருப்பது குறித்து பேசியுள்ள துருவ் ஜூரேல் கூறுகையில்;- 'நான் டோனியை முதல்முறையாக பார்த்தபோது அப்படியே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என் முன்னால் அவர் நிற்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நான் ஏற்கனவே டோனியை பார்த்திருந்தாலும் இம்முறை இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிவிட்டு அவரை பார்க்கப் போகிறேன். என்னுடைய கனவே நான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பின்னர் அவரை பார்க்க வேண்டும் என்பதுதான் என்று கூறினார்.
சர்பராஸ்கான் குறித்து கங்குலி
இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. அந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சர்பராஸ் கான் முதல் இன்னிங்சில் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 50 ரன்கள் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 2-வது அதிவேகமான அரை சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற பாண்ட்யாவின் சாதனையை சமன் செய்தார்.
இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து போராடினால் இந்தியாவுக்காக விளையாடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக சர்பராஸ் கான் அறிமுகமாகி அசத்தியுள்ளதாக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார். இருப்பினும் சர்பராஸ் கானுக்கு உண்மையான சவால் வெளிநாட்டு மண்ணில் ரன்கள் குவிப்பதில்தான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் கங்குலி. சர்பராஸ் கான் தன்னுடைய கெரியரை நேர்மறையாக துவங்கியுள்ளார். ஆனால் வெளிநாட்டு சூழ்நிலைகளில்தான் அவருக்கு மிகப்பெரிய சோதனை காத்திருக்கும். எனவே அவர் இந்திய துணை கண்டத்திற்கு வெளியே தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என்று கூறினார்.
கோலி - அனுஷ்கா தம்பதிக்கு குழந்தை
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரராக இருப்பவர், விராட் கோலி. இவருக்கும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவிற்கும் 2017ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் திருமணம் நடைப்பெற்றது. அனுஷ்கா ஷர்மாவிற்கும், விராட் கோலிக்கும் 2021ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு இவர்கள் வாமிகா என பெயரிட்டனர். பிறந்து சில வருடங்கள் வரை தங்களின் குழந்தையின் புகைப்படத்தை எங்குமே பதிவிடாமல் இருந்தனர். சில மாதங்களுக்கு முன்பு வரைதான் இவர்கள் தங்களின் குழந்தையின் புகைப்படத்தை காண்பித்தனர்.
தற்போது இந்த நட்சத்திர தம்பதிக்கு மேலும் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அனுஷ்கா ஷர்மா, தனது கணவர் பங்கேற்கும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் தவறாமல் கலந்து கொள்வார். இருவரும் ஒன்றாக பத்திரிக்கையாளர்களையும் அடிக்கடி சந்திப்பர். ஆனால் கடந்த சில மாதங்களாக அனுஷ்கா கேம்ராவின் கண்களில் படாமல் இருந்தார்.
கம்பேக் கொடுக்கும் சேவாக்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக முதல் முறையாக இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது வரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. 17ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் போன்று எஸ்ஏ20 லீக், கரீபியன் டி20 லீக், அமெரிக்கன் பிரீமியர் லீக், மேஜர் லீக் கிரிக்கெட், அமெரிக்கன் டி20 சாம்பியன்ஷிப் என்று டி20 தொடர் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் தான் இந்திய மூத்த கிரிக்கெட் வாரியத்தின் மூலமாக முதல் முறையாக முன்னாள் வீரர்களுக்கு என்று டி20 தொடர் நடத்தப்படுகிறது. இந்திய வெட்டரன் பிரீமியர் லீக் எனப்படும் ஐவிபிஎல் டி20 தொடர் வரும் 23 ஆம் தேதி முதல் மார்ச் 3-ம் தேதி வரையில் இந்தியாவில் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் வீரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா, கிறிஸ் கெயில், ஹெர்செல் கிப்ஸ் ஆகியோர் உள்பட முன்னாள் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த தொடரில் விவிஐபி உத்தரபிரதேசம், ராஜஸ்தான் லெஜெண்ட்ஸ், ரெட் கார்பெட் டெல்லி, சட்டீஸ்கர் வாரியர்ஸ், தெலங்கானா டைகர்ஸ் மற்றும் மும்பை சாம்பியன்ஸ் என்று 6 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
ஜெய்ஸ்வால் குறித்து நாசர் உசேன்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதை இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொண்டதாக அந்த அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, "எதிர் அணி வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடுவதை பார்க்கும்போது நாம் கொஞ்சம் அதற்கான பெருமையை எடுத்துக் கொள்ளலாம். அதாவது மற்றவர்கள் டெஸ்டில் விளையாடும் விதத்துக்கும், நாம் ஆடும் விதத்திற்குமான வித்தியாசத்துக்கான பெருமை நம்முடையது என்ற உணர்வு ஏற்படுகிறது" என்றார். டக்கெட் 3-வது டெஸ்டில் சதம் (153 ரன்) அடித்து இருந்தார். அவர் இந்த தொடரில் 288 ரன்கள் எடுத்து ஜெய்ஸ்வாலுக்கு அடுத்தப்படியாக 2-வது இடத்தில் உள்ளார்.
இந்த நிலையில் டக்கெட் டின் இந்த வினோதமான கருத்துக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான நாசர் உசேன் பதிலடி கொடுத்துள்ளார். ஜெய்ஸ்வால் அதிரடியான, ஆக்ரோஷமான ஆட்டத்தை இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொள்ளவில்லை என்று கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது., அவர் (ஜெய்ஸ்வால்) உங்களிடம் இருந்து அதிரடியாக விளையாட கற்றுக் கொள்ளவில்லை. அவர் வளர்ப்பில் இருந்து கற்றுக் கொண்டவர். அவரது பாதையில் எதிர்கொண்ட கடினங்களால் வளர்ந்த ஆக்ரோஷம் இதுவாகும். அவரிடம் இருந்து மற்றவர்கள் எதையாவது கற்றுக்கொள்ள விரும்பினால் அது இதுவாகத்தான் இருக்கும். கொஞ்சம் சுய பரிசோதனை நடக்கிறது என்று நினைக்கிறேன். இல்லையென்றால் இந்த 'பாஸ்பால்' ஒரு வழிபாடாகவே மாறிவிடும் என்று நினைக்கிறேன். இவ்வாறு நாசர் உசேன் கூறியுள்ளார்.
குரோசிய வீராங்கனை சாம்பியன்
துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெலாரஸின் அரினா சபலெங்கா, 31-ம் நிலை வீராங்கனையான குரோஷியாவின் டோனா வெகிக்குடன் மோதினார். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் வெகிக் 6-7 (5-7), 6-3, 6-0 என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அரினா சபலென்கா ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 weeks 11 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 weeks ago |
-
நியூசிலாந்து அணி அபார பந்துவீச்சு:46 ரன்களுக்கு ஆல்அவுடாகி இந்தியா மோசமான சாதனை
17 Oct 2024பெங்களூரு: நியூசிலாந்து எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு இந்திய அமி ஆல்அவுடாகி மோசமான சாதனை படைத்துள்ளது.
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
17 Oct 2024சென்னை, தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மழைக்கால பணிகள் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் பற்றி கவலையில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
17 Oct 2024சென்னை, மழைக்கால பணிகள் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் பற்றி கவலையில்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
9 லட்சம் பட்டதாரிகள் எழுதிய யு.ஜி.சி. நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
17 Oct 2024சென்னை, உதவி பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி. நெட் தேர்வின் முடிவுகள் இன்று 18-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
-
வடிகால் பணிகளை அரசு முழுமையாக செய்திருந்தால் மழைநீர் தேங்கி இருக்காது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
17 Oct 2024சென்னை, மழைநீர் வடிகால் பணிகளை தி.மு.க. அரசு முழுமையாக செய்திருந்தால் சென்னையில் மழைநீர் தேங்கி இருக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பரிந்துரை
17 Oct 2024புது டெல்லி, சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளார்.
-
மது விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா ?சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
17 Oct 2024சென்னை: சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் மது விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க மு
-
சுடச்சுட பிரியாணி பரிமாறி தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உண்டு மகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்
17 Oct 2024சென்னை, கொளத்தூரில் தூய்மை பணியாளர்களுக்கு சுடச்சுட பிரியாணி பரிமாறிய முதல்வர் மு.க. ஸ்டாலின், தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து பிரியாணி உண்டு மகிழ்ந்தார்.
-
நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு: ஆதாரங்கள் இல்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புதல்
17 Oct 2024ஒட்டாவா, நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக் கொண்டுள்ளார்.
-
டிரம்புக்கு 70 மில்லியன் டாலர் நன்கொடை அளித்த எலான் மஸ்க்
17 Oct 2024வாஷிங்டன், டொனால்ட் டிரம்பின் பிரசாரக் குழுவுக்கு எலான் மஸ்க் 70 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கியுள்ளார்.
-
ரூ.1,500 கோடியில் நவீனமயமாகும் ஹூண்டாய் கார் தொழிற்சாலை: இளைஞர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு
17 Oct 2024சென்னை, சென்னையில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் கார் தொழிற்சாலை ரூ.1,500 கோடி முதலீட்டில் விரிவுபடுத்தப்பட இருக்கிறது.
-
அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர் வழக்கு ஒன்றில் சென்னை ஐகோர்ட் கருத்து
17 Oct 2024சென்னை: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளை மேற்கோள்காட்டி அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர் என்று வழக்கு ஒன்றில் சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
-
அசாமில் புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கும் சட்ட பிரிவு செல்லும்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
17 Oct 2024புது டெல்லி, அசாமில் ஜனவரி 1, 1966 முதல் மார்ச் 25, 1971 வரை புலம்பெயர்ந்து குடியேறியவர்களுக்கு அம்மாநில குடியுரிமையை உறுதி செய்யும் இந்திய குடியுரிமைச் சட்டப் பிரிவு 6
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 5-ஏ தேர்வு அறிவிப்பு
17 Oct 2024சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 5ஏ தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,495 கன அடியாக அதிகரிப்பு
17 Oct 2024சேலம், காவிரி நீர்ப்பிடிப்பு பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 19,495 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்
17 Oct 2024சென்னை, பருவ மழை காலங்களில் பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தி உள்ளார்.
-
அம்மா உணவகங்களில் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது: தமிழக அரசு தகவல்
17 Oct 2024சென்னை, மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சம் பேருக்கு அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது,
-
திருப்பதி கோவிலில் ஜனவரி மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஒதுக்கீடு நாளை வெளியீடு
17 Oct 2024திருமலை, திருப்பதி ஏழுமலையானை ஜனவரி மாதம் தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஒதுக்கீடு நாளை 19-ம் தேதி காலை 10 மணியளவில் வெளியிடப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ள
-
ஜஸ்டின் ட்ரூடோவின் செயலால் இந்தியா-கனடா உறவில் பாதிப்பு மத்திய வெளியுறவுத்துறை குற்றச்சாட்டு
17 Oct 2024புதுடெல்லி: இந்தியா-கனடா உறவில் ஏற்பட்ட பாதிப்பிற்கு ஜஸ்டின் ட்ரூடோவின் செயல்பாடுகளே காரணம் என மத்திய வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
-
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ய தடை விதித்த இத்தாலி பிரதமர்
17 Oct 2024ரோம், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது உடனடியாக நிறுத்தப்படும் என அந்த நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
-
புதிய பாம்பன் பாலத்தில் 90 கி.மீ வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்
17 Oct 2024ராமேஸ்வரம்: புதிய பாம்பன் பாலத்தில் ரெயில் 90 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து சென்றது.
-
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்: முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு
17 Oct 2024சென்னை; 2024- 2025ம் ஆண்டில் ஊரகப் பகுதிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 68,569 வீடுகள் கட்ட முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசா
-
கருணை மற்றும் நல்லெண்ணத்தின் மூலமே உலகை மாற்ற முடியும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
17 Oct 2024புது டெல்லி, கருணை மற்றும் நல்லெண்ணத்தின் மூலமே உலகை ஒரு சிறந்த இடமாக மாற்ற முடியும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
தீபாவளி பண்டிகை: தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்: அமைச்சர் சிவசங்கர் நாளை ஆலோசனை
17 Oct 2024சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பஸ்களை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
-
ஜெர்மனியில் இருந்து மும்பை வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக தரையிறக்கம்
17 Oct 2024மும்பை, ஜெர்மனியில் இருந்து மும்பை வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.