எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹாக்கி இந்தியா அமைப்பில் நீண்டகாலமாக பணியாற்றி வந்த தலைமை நிர்வாக அதிகாரி எலினா நார்மன் (வயது 49) இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். 13 ஆண்டுகளாக பதவி வகித்த எலினா நார்மனுக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. சம்பளம் நிறுத்தி வைப்பு மற்றும் நிர்வாகத்தில் ஏற்பட்ட பிளவு போன்ற காரணங்களால் தனது பணி மிகவும் கடினமாக இருந்ததாகவும் எலினா நார்மன் குற்றம்சாட்டினார். தனது முடிவு குறித்து எலினா நார்மன் மேலும் கூறியதாவது:-
சம்பளம் தொடர்பாக பல பிரச்சினைகள் இருந்தன. தொடர் வற்புறுத்தலுக்குப் பிறகு கடந்த வாரம் அதற்கு தீர்வு கிடைத்தது. ஹாக்கி இந்தியாவில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவில் தலைவர் திலீப் திர்கேவும் நானும் இருக்கிறோம். அங்கே செயலாளர் போலாநாத் சிங், செயல் இயக்குநர் சி.டி.ஆர். ஆர் கே ஸ்ரீவஸ்தவா மற்றும் பொருளாளர் சேகர் ஜே.மனோகரன் ஆகியோர் உள்ளனர். இரு பிரிவினருக்கு இடையே நடந்த சண்டையை சமாளித்து என் பணியை செய்வது கடினமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
_________________________________________________
டி20 போட்டிகளில் அதிவேக சதம்
முதல் போட்டியில் நமீபியா மற்றும் நேபாளம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நமீபியா 20 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது. நமீபிய வீரர் லாஃப்ட்டீ ஈட்டன் 33 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக நமீபியாவுக்கு எதிராக நேபாள வீரர் குசல் மல்லா 34 பந்துகளில் சதமடித்ததே அதிவேக சதமாக இருந்தது.
_________________________________________________
அரையிறுதிக்கு முன்னேறிய விதர்பா
விதர்பா மற்றும் கர்நாடக அணிகளுக்கு இடையேயான ரஞ்சிக் கோப்பையின் காலிறுதிப் போட்டி கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று போட்டி நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் விதர்பா அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கர்நாடகத்தை வெளியேற்றியது. 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய கர்நாடகம் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்து.
இதன் மூலம் கர்நாடகம் 128 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. விதர்பா தரப்பில் இரண்டாவது இன்னிங்ஸில் ஹார்ஷ் துபே மற்றும் ஆதித்யா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஏற்கனவே மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாடு அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், தற்போது விதர்பாவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
_________________________________________________
டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. மகளிர் பிரீமியர் லீக்கின் 2வது தொடர் பெங்களூரில் பிப்-23 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த தொடரிலும் டெல்லி, குஜராத், மும்பை, பெங்களூர், உ.பி. ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் 2 முறை மோதும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். தொடர்ந்து 2, 3வது இடங்களை பிடிக்கும் அணிகள், எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றில் களமிறங்கும்.
இந்த நிலையில் நடைபெற்ற 4வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மற்றும் உபி வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய உபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து டெல்லி அணிக்கு 120 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. தனது எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே வந்த டெல்லி அணி 14.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது. உபி வாரியர்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்வேதா ஷெராவத் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 45 ரன்கள் விளாசினார். டெல்லி அணியின் பந்துவீச்சில் ராதா யாதவ் 4, மாரிஸேன் காப் 3, அருந்ததி ரெட்டி, அனபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
_________________________________________________
நியூசிலாந்து முன்னணி வீரர் ஓய்வு
நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னெர் (வயது 37). இவர் நியூசிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 874 ரன்னும், 260 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார். வரும் 29ம் தேதி வெல்லிங்டனில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் லெவன் அணியில் நீல் வாக்னெர் இடம் பெற மாட்டார் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓய்வு முடிவை அடுத்து வாக்னெர் கூறும்போது, இந்த முடிவு எளிதானது அல்ல. அது உணர்ச்சிமிக்கது. ஆனால் முன்னேற இதுவே சரியான நேரம். பிளாக் கேப்ஸிற்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசித்துள்ளேன். மேலும் ஒரு அணியாக எங்களால் சாதிக்க முடிந்த அனைத்திலும் பெருமைப்படுகிறேன். எனது வாழ்க்கையில் கட்டமைக்கப்பட்ட நட்பு மற்றும் பிணைப்புகளை நான் மிகவும் மதிக்கிறேன். இன்று நான் இருக்கும் இடத்தில் பங்கு வகித்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 weeks 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 weeks 11 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 2 weeks ago |
-
நியூசிலாந்து அணி அபார பந்துவீச்சு:46 ரன்களுக்கு ஆல்அவுடாகி இந்தியா மோசமான சாதனை
17 Oct 2024பெங்களூரு: நியூசிலாந்து எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு இந்திய அமி ஆல்அவுடாகி மோசமான சாதனை படைத்துள்ளது.
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
17 Oct 2024சென்னை, தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மழைக்கால பணிகள் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் பற்றி கவலையில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
17 Oct 2024சென்னை, மழைக்கால பணிகள் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் பற்றி கவலையில்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
9 லட்சம் பட்டதாரிகள் எழுதிய யு.ஜி.சி. நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
17 Oct 2024சென்னை, உதவி பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி. நெட் தேர்வின் முடிவுகள் இன்று 18-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
-
வடிகால் பணிகளை அரசு முழுமையாக செய்திருந்தால் மழைநீர் தேங்கி இருக்காது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
17 Oct 2024சென்னை, மழைநீர் வடிகால் பணிகளை தி.மு.க. அரசு முழுமையாக செய்திருந்தால் சென்னையில் மழைநீர் தேங்கி இருக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பரிந்துரை
17 Oct 2024புது டெல்லி, சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளார்.
-
மது விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா ?சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
17 Oct 2024சென்னை: சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் மது விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க மு
-
ரூ.1,500 கோடியில் நவீனமயமாகும் ஹூண்டாய் கார் தொழிற்சாலை: இளைஞர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு
17 Oct 2024சென்னை, சென்னையில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் கார் தொழிற்சாலை ரூ.1,500 கோடி முதலீட்டில் விரிவுபடுத்தப்பட இருக்கிறது.
-
சுடச்சுட பிரியாணி பரிமாறி தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உண்டு மகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்
17 Oct 2024சென்னை, கொளத்தூரில் தூய்மை பணியாளர்களுக்கு சுடச்சுட பிரியாணி பரிமாறிய முதல்வர் மு.க. ஸ்டாலின், தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து பிரியாணி உண்டு மகிழ்ந்தார்.
-
நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு: ஆதாரங்கள் இல்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புதல்
17 Oct 2024ஒட்டாவா, நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக் கொண்டுள்ளார்.
-
டிரம்புக்கு 70 மில்லியன் டாலர் நன்கொடை அளித்த எலான் மஸ்க்
17 Oct 2024வாஷிங்டன், டொனால்ட் டிரம்பின் பிரசாரக் குழுவுக்கு எலான் மஸ்க் 70 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கியுள்ளார்.
-
அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர் வழக்கு ஒன்றில் சென்னை ஐகோர்ட் கருத்து
17 Oct 2024சென்னை: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளை மேற்கோள்காட்டி அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர் என்று வழக்கு ஒன்றில் சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 5-ஏ தேர்வு அறிவிப்பு
17 Oct 2024சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 5ஏ தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,495 கன அடியாக அதிகரிப்பு
17 Oct 2024சேலம், காவிரி நீர்ப்பிடிப்பு பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 19,495 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
அசாமில் புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கும் சட்ட பிரிவு செல்லும்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
17 Oct 2024புது டெல்லி, அசாமில் ஜனவரி 1, 1966 முதல் மார்ச் 25, 1971 வரை புலம்பெயர்ந்து குடியேறியவர்களுக்கு அம்மாநில குடியுரிமையை உறுதி செய்யும் இந்திய குடியுரிமைச் சட்டப் பிரிவு 6
-
திருப்பதி கோவிலில் ஜனவரி மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஒதுக்கீடு நாளை வெளியீடு
17 Oct 2024திருமலை, திருப்பதி ஏழுமலையானை ஜனவரி மாதம் தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஒதுக்கீடு நாளை 19-ம் தேதி காலை 10 மணியளவில் வெளியிடப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ள
-
பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்
17 Oct 2024சென்னை, பருவ மழை காலங்களில் பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தி உள்ளார்.
-
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்: முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு
17 Oct 2024சென்னை; 2024- 2025ம் ஆண்டில் ஊரகப் பகுதிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 68,569 வீடுகள் கட்ட முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசா
-
புதிய பாம்பன் பாலத்தில் 90 கி.மீ வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்
17 Oct 2024ராமேஸ்வரம்: புதிய பாம்பன் பாலத்தில் ரெயில் 90 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து சென்றது.
-
அம்மா உணவகங்களில் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது: தமிழக அரசு தகவல்
17 Oct 2024சென்னை, மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சம் பேருக்கு அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது,
-
ஜஸ்டின் ட்ரூடோவின் செயலால் இந்தியா-கனடா உறவில் பாதிப்பு மத்திய வெளியுறவுத்துறை குற்றச்சாட்டு
17 Oct 2024புதுடெல்லி: இந்தியா-கனடா உறவில் ஏற்பட்ட பாதிப்பிற்கு ஜஸ்டின் ட்ரூடோவின் செயல்பாடுகளே காரணம் என மத்திய வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
-
2024 மிஸ் இந்தியாவாக நிகிதா போர்வால் தேர்வு
17 Oct 2024மும்பை: மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நிகிதா போர்வால் மிஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்றார்.
-
கருணை மற்றும் நல்லெண்ணத்தின் மூலமே உலகை மாற்ற முடியும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
17 Oct 2024புது டெல்லி, கருணை மற்றும் நல்லெண்ணத்தின் மூலமே உலகை ஒரு சிறந்த இடமாக மாற்ற முடியும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
தீபாவளி பண்டிகை: தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்: அமைச்சர் சிவசங்கர் நாளை ஆலோசனை
17 Oct 2024சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பஸ்களை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
-
ஜெர்மனியில் இருந்து மும்பை வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக தரையிறக்கம்
17 Oct 2024மும்பை, ஜெர்மனியில் இருந்து மும்பை வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.