எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, 1,000 கோடி ரூபாயில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலன் காக்கும் அயோத்திதாசர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் உள்பட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு வித்திட்ட திமுக அரசின் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து அக்கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு: ஊரில் ஒதுக்குப்புறத்தில் வாழ்பவர்களை ஊரின் நடுவே வாழச் செய்வதற்கு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெரியார் நினைவு சமத்துவபுரக் குடியிருப்புகளை ஏற்படுத்தினார். 100 வீடுகள் கொண்ட ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் 40 வீடுகளை ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கீடு செய்து அங்கே ஒரு ஆதிதிராவிடர் வீட்டின் இரு புறங்களிலும் பிற சாதியினர் வீடுகளை அமைத்து அவர்களிடையிலே வேறுபாடுகள் இல்லாத சமத்துவ வாழ்க்கை மலரச் செய்தார். அங்கே சமத்துவச் சுடுகாடு, சமத்துவ சமூக நலக் கூடம் முதலிய அனைத்தையும் சமத்துவச் சிந்தனைகளோடு ஏற்படுத்தினார்.
முதலமைச்சரின் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின்கீழ் (CM-ARISE) 225 பயனாளிகளுக்கு 16 கோடியே 76 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 10 கோடியே 65 லட்சம் ரூபாய் வங்கிக் கடனுடன் 5 கோடியே 80 லட்சம் ரூபாய் மானியத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஊரகப்பகுதிகள் மட்டுமல்லாமல், நகர்ப்புறங்களிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய் வீதம் 2023-2024 முதல் 5 ஆண்டுகளுக்கு மொத்தம் 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு பட்டியல் இனத்தவர் / பழங்குடியினர் புத்தொழில் நிதியத்தின்கீழ் தொழில் முனைவோருக்கான சமூக நீதியை உறுதிப்படுத்திடும் நோக்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரால் நடத்தப்பட்டுவரும் நிறுவனங்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு முதலீடு வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின்கீழ் 21 புத்தொழில் நிறுவனங்கள் 28 கோடியே 10 லட்சம் ரூபாய் அளவுக்குப் பயன்பெற்ற நிலையில்; இத்திட்டத்தின் சிறப்பான வெற்றியைக் கருத்தில் கொண்டு 2023-24-ஆம் நிதியாண்டிற்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட 26 நிறுவனங்களில் 13 நிறுவனங்கள் பெண்களே நிர்வகிக்கும் நிறுவனங்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும்.
தூய்மைப்பணியாளர் நல வாரியத்தின் மூலம் 87 ஆயிரத்து 327 உறுப்பினர்களுக்கு 10 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ‘மிக்ஜாம்’ புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் மழைநீர் வெளியேற்றுதல் மற்றும் தூய்மைப்பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக தலா 4000 ரூபாய் வழங்கிப் பாராட்டப்பட்டுள்ளனர்.
நரிக்குறவர் இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 மாணவர் விடுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. சென்னை அண்ணா சாலையிலுள்ள எம்.சி.ராஜா விடுதி வளாகத்திற்குள்ளேயே 1 லட்சம் சதுரஅடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய ஆதிதிராவிடர் மாணவர் விடுதி 45 கோடி ரூபாய்ச் செலவில் கட்டப்படுகிறது.
முனைவர் பட்டப் படிப்பிற்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான உதவித் தொகை 50 ஆயிரம் ரூபாய் என்பது 1 லட்சம் ரூபாய் என உயர்த்தப்பட்டு; 2,974 மாணவர்கள் பயனடைந்து உள்ளனர். வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயில விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான வருமான உச்சவரம்பு 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு 31 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி விடுதிகள் மற்றும் அரசுப் பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு மாதாந்திர உணவுக் கட்டணம் 1,000 ரூபாய் என்பது 1,400 ரூபாய் எனவும், கல்லூரி மாணாக்கர்களுக்கு 1,100 ரூபாய் என்பது 1,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது
கடந்த மூன்று ஆண்டுகளில் 166 கோடி ரூபாய்ச் செலவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் என அமைக்கப்பட்டுள்ளன.
வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் எவ்வித வேறுபாடுமின்றி, பிறர் போற்ற வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், கடந்த ஓராண்டில் மட்டும் 102 பேர் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தாட்கோவால் செயல்படுத்தப்படும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களின் மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் 10 ஆயிரத்து 466 பயனாளிகளுக்கு 152 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
2000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் (Tatkal Scheme) அவர்கள் மின் இணைப்புப் பெற 90 சதவீதம் மானியமாக. 46 கோடியே 65 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு திமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-03-2025.
11 Mar 2025 -
தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம் : இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது
11 Mar 2025சென்னை : தாம்பரம்-திருச்சி சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
-
தங்கம் விலை குறைந்தது
11 Mar 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 11) சவரனுக்கு ரூ. 240 குறைந்து விற்பனையானது.
-
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் 14-ந்தேதி திறப்பு
11 Mar 2025திருவனந்தபுரம் : பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந்தேதி மாலை திறக்கப்படுகிறது.
-
அ.தி.மு.க. வழக்கறிஞர் மீதான தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
11 Mar 2025சென்னை, வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க. -வினர் மீது நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
கூகுளைவிட 10 லட்சம் மடங்கு வேகம்: புதிய கணினியை அறிமுகம் செய்த சீனா
11 Mar 2025சீனா : கூகுளைவிட 10 லட்சம் மடங்கு அதிவேக கணினியை அறிமுகம் செய்த சீனா.
-
போப் பிரான்சிஸ் நலம்பெற்று வருகிறார்: வாடிகன் தகவல்
11 Mar 2025ரோம் : போப் பிரான்சிஸ் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து படிப்படியாக நலம்பெற்று வருவதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
-
என்னுடைய பேச்சு யாரையும் புண்படுத்தி இருந்தால் 100 முறை மன்னிப்பு கேட்கத் தயார்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
11 Mar 2025புதுடில்லி : என்னுடைய பேச்சு யாரையும் புண்படுத்தி இருந்தால் 100 முறை மன்னிப்பு கேட்கத் தயார் என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். 
-
டெல்லி அணி கேப்டன் பதவியை நிராகரித்தார் கே.எல். ராகுல்?
11 Mar 2025புதுடில்லி : டெல்லி அணியின் கேப்டன் பதவியை கே.எல். ராகுல் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கே.எல். ராகுல்...
-
வரும் 14-ம் தேதி தொடங்கும் கச்சத்தீவில் அந்தோணியார் விழா: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
11 Mar 2025ராமேசுவரம் கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழானையோட்டி, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
-
சிறந்த ஒருநாள் இந்திய அணியை தேர்வு செய்த சுனில் கவாஸ்கர்
11 Mar 2025மும்பை : இந்தியாவின் சிறந்த 11 வீரர்கள் அடங்கிய ஒருநாள் கிரிக்கெட் அணியை சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார்.
-
ரவீந்திர ஜடேஜா 'கம்பேக்கை' புஷ்பா பட பாணியில் அறிவித்த சி.எஸ்.கே. நிர்வாகம்
11 Mar 2025சென்னை : ஜடேஜா அணியில் இணைந்ததை 'புஷ்பா' பட ஸ்டைலில் வீடியோ வெளியிட்டு சி.எஸ்.கே.நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐ.பி.எல். போட்டி...
-
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகள் முழுமையாக இல்லை : பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
11 Mar 2025புதுடில்லி : மதுரை மற்றும் கோயம்புத்தூா் மெட்ரா ரயில் திட்டங்களுக்காக தமிழக அரசு சமா்ப்பித்த திட்ட அறிக்கைகள் முழுமையாக இல்லை என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சா் 
-
சஸ்பெண்ட்டை ரத்து செய்த விளையாட்டு அமைச்சகம்: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு போட்டிகளை நடத்த அனுமதி
11 Mar 2025புதுடெல்லி : இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு மீதான இடைநீக்க நடவடிக்கையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் நேற்று (மார்ச் 11) ரத்து செய்துள்ளது.
-
ஜெயவேல் முருகன் இயக்கியுள்ள வருணன்
11 Mar 2025இயக்குனர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெயவேல் முருகன் டைரக்டு செய்துள்ள படம் 'வருணன்'.
-
கோவில் திருவிழாக்களை எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது: சென்னை ஐகோர்ட்டு திட்டவட்டம்
11 Mar 2025சென்னை, தங்கள் தலைமையில் தான் கோவில் திருவிழா நடத்த வேண்டும் என எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவு
11 Mar 2025புதுடெல்லி, மார்ச் முதல் மே மாதம் வரை தமிழ்நாட்டிற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
-
எக்ஸ் தளம் மீது சைபர் தாக்குதல்: உக்ரைன் மீது மஸ்க் குற்றச்சாட்டு
11 Mar 2025வாஷிங்டன் : எக்ஸ் சமூக வலைதளம் முடக்கத்திற்கு காரணம் உக்ரைன்னா என்று எலான் மஸ்க் குற்றச்சாட்டியுள்ளார்.
-
ஜென்டில்வுமன்’ விமர்சனம்
11 Mar 2025சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கணவர் ஹரி கிருஷ்ணனுடன் வசிக்கும் லிஜோமோல் ஜோஸ், தன் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை தெரிந்துக் கொள்கிறார்.
-
மர்மர் விமர்சனம்
11 Mar 2025அமானுஷ்ய சக்தி இருப்பதாக சொல்லப்படும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலைப் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றுக்கு
-
நீண்டகால அமைதி, பொருளாதார உறவுகள்: சவுதி அரேபிய இளவரசருடன் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை
11 Mar 2025கீவ் : நீண்டகால அமைதி, இருதரப்பு பொருளாதார உறவுகள் பற்றி சவுதி அரேபிய இளவரசருடன் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
-
கிரீன்லாந்தில் தேர்தல்: அமெரிக்காவுடன் இணைய வாக்காளர்கள் விருப்பம்..?
11 Mar 2025அமெரிக்கா : கிரீன்லாந்து வாக்காளர்கள் பலரும் அமெரிக்காவுடன் இணைந்து பயணிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக சமீபத்திய கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.
-
தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம்: சென்னை வருகிறார் நவீன் பட்நாயக்; தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் தகவல்
11 Mar 2025புவனேஸ்வர் : பாராளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடக்க உள்ள கூட்டத்தில் பிஜு ஜனதா தள கட்சித் தலைவரும் ஒடிசா முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் பங்கேற்க உறு
-
மொரீஷியஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
11 Mar 2025போர்ட் லூயிஸ், 2 நாள்கள் அரசுமுறை பயணமாக மோரீஷஸ் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
எமகாதகி விமர்சனம்
11 Mar 2025அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி என்று மகிழ்ச்சியான குடும்பத்தோடு வாழும் நாயகி ரூபா கொடவையூர், ஒருநாள் தனது அப்பா கோபத்தில் திட்டி அடித்ததை தாங்கிக் கொள்ளாமல் தூக்கிட்டு தற்