எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : என்னைப் பொறுத்தவரையில் மோடி வெற்றி பெறுவது இந்தியாவுக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கே நல்லதல்ல" என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், “மக்களவைத் தேர்தல் களத்தில் திமுக முதன்மையான இடத்தில் இருக்கிறது. அதிமுக வெகுதூரம் தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடிக்கப் போராடுகிறது. மற்ற கட்சிகள் கனவு உலகத்தில் மிதந்து கொண்டிருக்கலாம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆங்கில இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் தெரிவித்ததாவது., கடந்த சில நாட்களாக மக்களவைத் தேர்தலுக்காக களத்தில் பிரசாரம் செய்து வருகிறீர்கள். மக்கள் என்ன நினைக்கிறார்கள்? உங்களின் கணிப்பு என்ன?
17 தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரையை இதுவரை முடித்துவிட்டேன். திமுக கூட்டணியே வெல்லும், சாதாரணமான வெற்றியாக அல்ல, மகத்தான வெற்றியாக அமையும் என்பது மக்களின் முகங்களில் தெரிகிறது. கடந்த மூன்றாண்டு காலமாக திராவிட மாடல் ஆட்சியானது மக்களுக்குச் செய்து கொடுத்த மகத்தான சாதனைகள் அனைத்தையும் மக்கள் அறிந்திருக்கிறார்கள். எந்தத் திட்டத்தின் பெயரைச் சொன்னாலும் மக்கள் கைதட்டுகிறார்கள். எனவே, 2021 சட்டமன்றத் தேர்தலின்போது எங்களுக்கு இருந்த ஆதரவைவிட இப்போது ஆதரவு இன்னும் அதிகமாகி இருக்கிறது.
அதேபோல், மோடி மீதான கோபமும் அதிகமாகி இருக்கிறது. மோடி என்பது போலியாகக் கட்டமைக்கப்பட்ட பிம்பம் ஆகும். அந்தப் பிம்பம் உடைந்து வருகிறது. கடந்த இரண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் தமிழகத்தில் மோடி வெற்றி பெறவில்லை. அதைப் போலவே இந்தத் தேர்தலில் அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற உறுதி மக்களிடம் இருப்பதைப் பார்க்கிறேன்.
தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழகத்துக்கும் தொடர்ந்து துரோகம் இழைப்பதையே தொழிலாகச் செய்து வரும் பாஜகவை வீழ்த்தும் உறுதி மக்களிடம் இருக்கிறது. அந்த பாஜகவின் பாதம்தாங்கியாக இருந்து துரோகம் இழைத்தவர் பழனிசாமி. இன்றைய தினம் பாஜக போட்டுத்தந்த திட்டத்தின்படியே தனி அணியை உருவாக்கி சதிநாடகம் போட்டு வருகிறார் பழனிசாமி. இதையும் மக்கள் உணர்ந்துவிட்டார்கள். இந்த இரண்டு அணியையும் மக்கள் ஒருசேர வீழ்த்தத் தயாராகி விட்டார்கள்.”
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, இந்தத் தேர்தல் நெருக்கத்தில் கைது செய்ததன் நோக்கம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
“மோடியின் தோல்வி பயம்தான் அவரைத் தவறுக்கு மேல் தவறு செய்ய வைக்கிறது. 370 இடம் பிடிப்போம், 400 இடம் பிடிப்போம் என்பவர் எதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களை, அதிலும் குறிப்பாக மாநில முதலமைச்சர்களைத் தேர்தல் நேரத்தில் கைது செய்ய வேண்டும்? இந்தியா கூட்டணிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வரமாட்டார் என்று பாஜக நினைத்தது. கடைசி வரைக்கும் இருக்க மாட்டார் என்று நினைத்தார்கள்.
கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை சுமுகமாக முடித்து விட்டார் கெஜ்ரிவால். வடக்கில் உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி அணியானது வலுவாக அமைந்துவிட்டது. இங்கெல்லாம் போய் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்தால் பாஜக ஒரு சில தொகுதிகளைக் கூட கைப்பற்ற முடியாது என்பதே கள நிலவரம். அவரை பிரசாரம் செய்ய விடாமல் தடுக்கவும், அவரது இமேஜை உடைக்கவும் இதனைச் செய்துள்ளார்கள்.
உண்மையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் செல்வாக்கு, அவரது கைதுக்குப் பிறகு மிக மிக அதிகமாகி விட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது, பாஜக ஆதரவாளர்களையே மனமாற்றம் செய்துள்ளது. 'இது அடக்குமுறை ஆகும்' என்று அவர்களே சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். நடுநிலை வாக்காளர்களையும் இது யோசிக்க வைத்துள்ளது. அவரைக் கைது செய்தது தவறு என்று பாஜக மேலிடத் தலைவர்களே தங்களுக்குள் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்.
இந்தக் கைதுக்கு பிறகு வடமாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு வெகுவாக சரிந்துவிட்டது. சிறையில் இருந்தபடி ஆட்சி நடத்தும் அவரின் நெஞ்சுரத்தை நான் பாராட்டுகிறேன். ஆம் ஆத்மி கட்சிக்கு திமுக என்றும் துணை நிற்கும்.”
இந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சி குறித்த உங்கள் கருத்து என்ன?
“குஜராத் மாநிலத்தை வளப்படுத்தி விட்டதாகப் பொய்யான பிம்பத்தைக் காட்டி மோடியை 2014 தேர்தலில் வளர்ச்சியின் நாயகனாக அறிமுகம் செய்தது பாஜக. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசினார் மோடி. அந்த வாக்குறுதிகள் எதையும் அவர் நிறைவேற்றவில்லை. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்டு ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் தரப்போவதாக வட மாநிலங்களில் பிரசாரம் செய்தார்கள். அதுதான் அவர்களை வெற்றி பெற வைத்தது.
ஆட்சிக்கு வந்ததும் அனைவரும் வங்கிக் கணக்கை தொடங்குங்கள் என்று சொல்லி ஏமாற்றினார்கள். அதை அந்த மக்கள் நம்பினார்கள். 'இது ஜூம்லா' என்று இப்போது கூச்சமே இல்லாமல் சொல்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. வளர்ச்சியின் நாயகனாகத் தன்னைக் கட்டமைத்துக் கொண்ட மோடி, இந்தப் பத்தாண்டு காலத்தில் எதையும் வளர்க்கவில்லை. தன்னுடைய தனிமனித பிம்பத்தை வளர்த்திருக்கிறார். சொல்லிக் கொள்ள அவரிடம் எந்த சாதனையும் இல்லை.
மோடியால் சிதைக்கப்பட்ட பட்டியல்தான் அதிகம். மாநிலங்களைச் சிதைத்தார், இந்தியப் பொருளாதாரத்தைச் சிதைத்தார், இந்திய அமைதியைக் குலைத்தார். இப்படி சமூக அரசியல் பொருளாதாரத்தின் அனைத்துப் பக்கத்தையும் சிதைத்துவிட்டார். இனி அவர் சிதைக்க ஏதுமில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் சிதைக்க நேரம் பார்த்துக் கொண்டு இருக்கிறார். இந்தத் தேர்தலில் வென்றால் அவர் செய்வதற்கு இது ஒன்றுதான் பாக்கி இருக்கிறது. என்னைப் பொருத்தவரையில் மோடி வெற்றி பெறுவது இந்தியாவுக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கே நல்லதல்ல. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-03-2025.
13 Mar 2025 -
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என எதிர்பார்ப்பு
13 Mar 2025சென்னை, தமிழக சட்டபேரவை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் 2025-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
-
தனியார் பால், தயிர் விலை உயர்வு: விலை உயர்வை உடனே திரும்பப்பெற பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல்
13 Mar 2025சென்னை, விலை உயர்வை திரும்பப் பெற பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
-
வரும் 22-ம் தேதி சென்னையில் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்கிறார் டி.கே. சிவகுமார்
13 Mar 2025பெங்களூரு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் கர்நாடகா சார்பில் டி.கே. சிவகுமார் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு
13 Mar 2025சென்னை, தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நாமக்கல், மதுரை, புதுக்கோட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை நடைபெறவுள்ளது.
-
ஸ்பேடெக்ஸ் செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விடுவித்து இஸ்ரோ சாதனை
13 Mar 2025புதுடெல்லி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது ஸ்பேடெக்ஸ் பரிசோதனையின் ஒரு பகுதியாக இரண்டு செயற்கைக் கோள்களை விடுவிக்கும் சோதனையை வெற்றிகரமாக நிறைவே
-
த.வெ.க. வில் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை 140ஆக உயர்த்த விஜய் முடிவு?
13 Mar 2025சென்னை, த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை 120ல் இருந்து 140ஆக உயர்த்த விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால்... ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
13 Mar 2025வாஷிங்டன், சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்கா - உக்ரைன் பேச்சுவார்த்தையில் உக்ரைன் ஒப்புதல் அளித்துள்ள ஒருமாத போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் ரஷ்யா குறிப்பிடத்
-
புதுச்சேரி சட்டசபையில் இருந்து தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
13 Mar 2025புதுச்சேரி, அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி சட்டசபையில் இருந்து தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்க ரேவந்த் ரெட்டி முடிவு
13 Mar 2025புதுடில்லி, தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் பிரிட்டன் சுற்றுலா பயணி பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது
13 Mar 2025புதுடெல்லி, டெல்லியில் உள்ள தனியார் ஹோட்டலில் பிரிட்டன் சுற்றுலா பயணி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதையடுத்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
இ.பி.எஸ். உடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார்: அமைச்சர் ரகுபதி
13 Mar 2025சென்னை, இ.பி.எஸ். அழைத்தால் நானே ஒரே மேடையில் விவாதிக்க தயார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்..
-
கேரளாவில் துஷார் காந்திக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் போராட்டம்
13 Mar 2025திருவனந்தபுரம், கேரளத்தில் காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்திக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
-
1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு அட்டவணை வெளியீடு
13 Mar 2025சென்னை, தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
-
ரெயில்வே திட்டங்களுக்கு நில எடுப்பு பணிகள் முழுவீச்சில் நடக்கிறது: தமிழக அரசு விளக்கம்
13 Mar 2025சென்னை, ரெயில்வே திட்டங்களுக்கு நில எடுப்பு பணிகளை விரைந்து முடிக்க முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
-
வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
13 Mar 2025சென்னை, வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
சத்துணவு ஊழியா்களின் தணிக்கை தொகை ரூ.257 கோடி தள்ளுபடி: தமிழக அரசு உத்தரவு
13 Mar 2025சென்னை, சத்துணவு மைய ஊழியா்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட வேண்டிய ரூ.257.83 கோடிக்கான தணிக்கைகளை முழுமையாகத் தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  
-
கியூட் தேர்வுக்கான வழிகாட்டுதல்கள்: தேசிய தேர்வு முகமை வெளியிட்டது
13 Mar 2025புதுடில்லி, முதுகலை பட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு (கியூட்) க்கான முக்கிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது.
-
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மின்சார ஆட்டோக்களை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
13 Mar 2025சென்னை, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 50 மின் ஆட்டோக்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
-
தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் வானிலை மையம் எச்சரிக்கை
13 Mar 2025சென்னை: கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வெயிலுக்கு இதமாக தமிழ்நாட்டின் அனேக இடங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
-
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என எதிர்பார்ப்பு
13 Mar 2025சென்னை: தமிழக சட்டபேரவை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் 2025-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
-
தொழில்நுட்ப உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு: கோவை பாரதியார் பல்கலை. முன்னாள் துணை வேந்தர் உள்பட 16 பேர் வழக்கு
13 Mar 2025கோவை: கோவை பாரதியார் பல்கலையில் தொழில்நுட்ப உபகரணங்களில் முறைகேடு நடந்ததாக முன்னாள் துணை வேந்தர் உள்பட 16 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
பரவலான வளர்ச்சியை உறுதி செய்யும் பட்ஜெட் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
13 Mar 2025சென்னை: பட்ஜெட் பரவலான வளர்ச்சியை உறுதி செய்யும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
முதல்முறை தமிழகத்தில் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது ஏன்..?
13 Mar 2025சென்னை: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பொருளாதார ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
வட நாட்டவர்கள் குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசிய கருத்தால் சலசலப்பு
13 Mar 2025வேலூர், தமிழ்நாடு எம்.பி.க்களை நாகரிகமற்றவர்கள் என மத்திய அமைச்சர் பேசியதை கண்டித்து அமைச்சர் துரைமுருகன் பேசிய கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.