எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி மாநிலம் வாரியாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக தனது கருத்துக்களை பிரதமர் மோடி வெளிப்படுத்தி உள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இதுவரை நான் நாடு முழுவதும் 70 நகரங்களில் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்கள் நடத்தி பிரசாரம் செய்து உள்ளேன். நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் என் மீது அளவு கடந்த அன்பையும் ஆதரவையும், பாசத்தையும் காட்டியதை காண முடிந்தது. மக்களின் இந்த அபரிமிதமான அன்பை பார்க்கும் போது 400 இடங்களுக்கு மேல் பாரதிய ஜனதா வெற்றி பெறும் என்ற எங்களது இலக்கு நிச்சயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.
பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்தால் அது நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு அளிக்கும் வாக்கு என்பதை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்து புரிந்து இருக்கிறார்கள். தற்போது 2 கட்ட தேர்தல் முடிந்து இருக்கிறது. இந்த 2 கட்டங்களிலும் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையான தோல்வியை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாரதிய ஜனதா 400 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும் என்று நாங்கள் இலக்கு நிர்ணயித்து இருப்பதற்கு முக்கிய காரணம் தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் இன மக்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதுதான். பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சட்டங்களை திருத்தி விடுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்கள்.
தென் இந்தியாவில் இந்த தடவை பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. தென் இந்தியாவில் நான் எங்கு சென்றாலும் மக்கள் அபரிமிதமான ஆதரவை கொடுத்தனர். அன்பு மழையை பொழிந்தனர். தென் இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளின் ஆட்சியைதான் மக்கள் பார்த்து வருகிறார்கள். அந்த கட்சிகளின் ஆட்சிகள் அரசை தவறாக வழிநடத்துவதையும், பிரிவினைவாத செயல்களை செய்வதையும் வாக்கு வங்கி அரசியல் நடத்துவதையும் தான் பார்த்து வருகிறார்கள். மொ
த்தத்தில் தென் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள மாநில கட்சிகள் ஊழல் செய்வதையே முதன்மையாக கொண்டு இருப்பதையும் மக்கள் பார்த்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி கலாச்சாரம், பண்பாடு மீது நடத்தப்படும் வெறுப்பு தாக்குதலையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் காரணமாக காங்கிரஸ் மீதும், மாநில கட்சிகள் மீதும் மக்களுக்கு மிகப்பெரிய வெறுப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில் தென் மாநில மக்கள் மத்தியில் பா.ஜ.க. தலைமையில் நடைபெறும் சிறப்பான ஆட்சியையும் பார்க்கிறார்கள்.
எனவே தென் மாநிலங்களில் பாரதிய ஜனதாவை மக்கள் நம்ப தகுந்த மாற்று சக்தியாக ஏற்க தொடங்கி இருக்கிறார்கள். தென் இந்தியாவில் பாரதிய ஜனதாதான் மிகப்பெரிய தனிப்பெரும் கட்சியாக கடந்த தேர்தலில் திகழ்ந்தது. இந்த தடவை தென் இந்தியாவில் அதிக வெற்றி பெறும் கட்சியாக பாரதிய ஜனதா திகழும். தமிழகம் உள்பட தென் இந்தியாவில் பாரதிய ஜனதா குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெறும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 days ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்2 days 12 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்5 days 8 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 2 days ago |
-
சிறுமி காணாமல் போன புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
20 May 2024மதுரை : 15 வயது சிறுமி காணாமல்போன புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்
20 May 2024டெஹ்ரான், ஈரான் அதிபர் இப்ராஹிம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
-
தொடர் கனமழையால் டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி கடும் பாதிப்பு
20 May 2024நாகை : நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை சிறப்பு ரயில் 8 மணி நேரம் தாமதம் : பயணிகள் பெரும் தவிப்பு
20 May 2024நாகர்கோவில் : சென்னை சிறப்பு ரயில் 8 மணி நேரம் தாமதத்தால் பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.
-
ஆருத்ரா பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த இயக்குநர் ஒருவர் கைது
20 May 2024சென்னை : ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த நிறுவன இயக்குநர்களில் ஒருவரை தமிழக பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
-
அயோத்திதாசப் பண்டிதர் பிறந்த தினம் முற்போக்கு இந்தியாவைப் படைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
20 May 2024சென்னை, அயோத்திதாசப் பண்டிதர் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
-
தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்ட தி.மு.க. : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
20 May 2024சென்னை : அ.தி.மு.க. கொண்டு வந்த தடுப்பணை திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டதாக அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
திருவள்ளூர் அருகே சோகம்: மின்வேலியில் சிக்கி 2 இளைஞர்கள் பலி
20 May 2024திருவள்ளூர் : திருவள்ளூர், பள்ளிப்பட்டு அருகே மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தடைக்காலம் எதிரொலி: மீன்கள் விலை கடும் உயர்வு
20 May 2024கோவை : மீன்பிடி தடைக்காலம் என்பதால் கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்ந்துள்ளது. வஞ்சிரம் கிலோ ரூ.1,200க்கு விற்பனை செய்யப்பட்டது.
-
புதுக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
20 May 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உரிமையாளர் பலியானார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-05-2024.
20 May 2024 -
3 நாள் பயணமாக டெல்லி சென்றார் கவர்னர்
20 May 2024சென்னை : சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று காலை 11.25 மணியளவில் தனியார் விமானம் புதுடெல்லி செல்வதற்கு தயார்நிலையில் இருந்தது.
-
மிரட்டுவதை நிறுத்துங்கள்: சீனாவுக்கு தைவானின் புதிய அதிபர் எச்சரிக்கை
20 May 2024தைபெய், தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் இன்று பதவியேற்றார். தைபெய் நகரத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அவருக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது.
-
கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் : மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
20 May 2024மதுரை : கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
-
பட்டப்படிப்பில் சேர பழங்குடி மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்: முதல்வருக்கு மலைவாழ் மக்கள் சங்கம் கடிதம்
20 May 2024சென்னை, பட்டப்படிப்பில் சேர பழங்குடி மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மலைவாழ் மக்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
-
பா.ஜ.க. சிறுபான்மையினருக்கு எதிராக ஒருபோதும் இருக்காது : பிரதமர் நரேந்திரமோடி திட்டவட்டம்
20 May 2024புதுடெல்லி : சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க.
-
கனமழையால் படகு போக்குவரத்து நிறுத்தம்: கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
20 May 2024குமரி, கன்னியாகுமரி பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு வேளைகளில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது.
-
பகலறியான். இசை வெளியீடு
20 May 2024ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகனின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டுத்தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க சஸ்பென்ஸ் கலந்த
-
பெண் போலீஸ் அவமதிப்பு வழக்கு: பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்: திருச்சி கோர்ட்
20 May 2024திருச்சி : யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
புதிய உச்சம் தொட்டது: ஒரு பவுன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது : வெள்ளி விலையும் கடும் உயர்வு - பெண்கள், நகை பிரியர்கள் அதிர்ச்சி
20 May 2024சென்னை : தங்கம் விலை இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம் தொட்டுள்ளது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்ததால் பெண்கள் - நகைபிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
தமிழக கடலோர பாதுகாப்பை மேம்படுத்த ‘சாகர் கவாச்’ ஒத்திகை நிகழ்ச்சி: தலைமைச்செயலர் ஆலோசனை
20 May 2024சென்னை : தமிழக கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக, ‘சாகர் கவாச்’ எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தொடர்பாக, தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் தலைமைச் செய
-
தமிழ்நாடு மின்வாரியத்தின் அனைத்து சேவைகளையும் இனி ஒரே வலைதளத்தில் பெற முடியும்
20 May 2024சென்னை, தமிழ்நாடு மின்வாரியத்தின் அனைத்து சேவைகளையும் பெற புதிய வலைதள முகவரி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
-
ஹெலிகாப்டர் விபத்தில் அதிபர் மரணம்: துணை அதிபர் உடனடியாக ஈரான் புதிய அதிபராக தேர்வு
20 May 2024டெஹ்ரான், ஈரான் அதிபர் இப்ராஹிம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், துணை அதிபர் முகமது முக்பர் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
4-வது மாடியிலிருந்து குழந்தை தவறி விழுந்த சம்பவம்: ஐடி ஊழியரின் மனைவி தற்கொலை : கோவை அருகே பரிதாபம்
20 May 2024சென்னை : பெங்களூருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 37). இவர் சென்னை அருகே திருமுல்லைவாயல் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
-
வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு உள்ளுறை பயிற்சிக்கான அனுமதி: மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு
20 May 2024சென்னை, வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் தமிழகத்தின் 38 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ளுறை பயிற்சி வழங்குவதற்கான அனுமதியை மேலும் இரு ஆண்டு காலத்துக்கு