முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2024      உலகம்
Pak 2024-04-30

Source: provided

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம் எனக்கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் செயல்படும் ஜாமியாத் உலேமா இ இஸ்லாம் பஜ்ல் என்ற அமைப்பின் தலைவர் மவுலானா பஜ்லூர் ரெஹ்மான், அந்நாட்டு பார்லிமென்டில் பேசியதாவது: 

1947 ஆகஸ்ட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நேரத்தில் சுதந்திரம் பெற்றன. இன்று இந்தியா சர்வதேச அளவில் சூப்பர் பவர் ஆக கனவு காண்கிறது. ஆனால், நாம் திவால் நிலையில் இருந்து தப்பிக்க பிச்சை எடுக்கிறோம். இதற்கு யார் காரணம்.

யாரோ எடுத்த முடிவினால் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அமைப்புகளுக்கும், அதிகாரிகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. வெற்றியாளர்கள் வருத்தம் அடையும் வகையிலும், தோற்றவர்கள் மகிழும் வகையிலும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து