முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திகார் சிறையில் கெஜ்ரிவாலை சந்தித்தார் பஞ்சாப் முதல்வர்

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2024      இந்தியா
Bahavanth-maan 2023-06-01

Source: provided

புதுடெல்லி : டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார். அவரை நேற்று பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் சந்தித்து பேசினார். 

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த பஞ்சாப் முதல்வர் பகவத்மான் கூறியதாவது:-

கெஜ்ரிவால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். அவர் இன்சுலின் பெறுகிறார். பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை உற்பத்தி குறித்து என்னிடம் கேட்டார். அதே போல் மின்சார வினியோகம் குறித்தும் கேட்டறிந்தார். பஞ்சாப் மாநிலத்தின் அரசு பள்ளியில் படித்த 158 மாணவர்கள் ஜே.இ.இ. முதன்மை தேர்தலில் தேர்ச்சி பெற்றதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார்.

நான் சமீபத்தில் குஜராத் சென்றிருந்தேன். அது குறித்து கேட்டறிந்தார். ஆம் ஆத்மிக்கு குஜராத்தில் மனதை கவரும் வகையில் ஆதரவு இருப்பதாக தெரிவித்தேன். அரசியலமைப்பு பாதுகாப்பதற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற தகவலை என்னிடம் தெரிவித்தார். எங்களுடைய அனைத்து தலைவர்களும் ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார்கள். இவ்வாறு பகவத் மான் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து