எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்த சீசனில் 10 போட்டிகளில் 509 ரன்கள் குவித்தார். இந்த போட்டிக்கு முன்னதாக ஆர்சிபி அணியின் விராட் கோலி 10 போட்டிகளில் 500 ரன்கள் அடித்து ஆரஞ்ச் தொப்பியை கைவசப்படுத்தியிருந்தார்.
இந்த போட்டியில் 62 ரன் அடித்ததன் மூலம் 509 ரன்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்ச் தொப்பியை விராட் கோலியுடன் இருந்து பெற்றுள்ளார். சாய் சுதர்சன் 418 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். கே.எல். ராகுல் 406 ரன்களுடன் 4-வது இடத்தில் உள்ளார். ரிஷப் பண்ட் 398 ரன்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
கனடாவின் அணி அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் மே.இந்திய தீவுகள் நாடுகளில் வருகின்ற ஜூன் 1 முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இதுதான் கனடாவின் முதல் டி20 உலகக் கோப்பை ஆகும். குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா உடன் கனடாவும் இருக்கின்றன.
ஆல்ரவுண்டர் சாத் பின் ஜாஃபர் கனடாவின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியின் பயிற்சியாளர் முன்னாள் இலங்கை வீரர் புபுடு தாஸ்சனநாயகே ஆவார். ஜுன் 1இல் கனடா தனது முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. 15 பேர் கொண்ட கனடா அணி:சாத் பின் ஜாஃபர் (கேப்டன்), ஆரோன் ஜான்சன், டிலோன் ஹெய்லிகர், தில்ப்ரீட் பஜ்வா, ஹார்ஷ் தாகேர், ஜெரிமி கார்டோன், ஜுனாய்த் சித்திக், கலீம் சனா, கன்வர்பால் டக்கூர், நவ்னீத் தலிவால், நிகோலஸ் கிர்டோன், பரகத் சிங், ரவீந்திரபால் சிங், ராயன்கான் பதான், ஸ்ரேயாஷ் மோவ்வா. ரிசர்வ் வீரர்கள்: ஆதித்யா வரதராஜன், அம்மர் காலித், ஜடிந்தர் மதரு, பர்வீன்குமார். டிராவலிங் ரிசர்வ்: தஜிந்தர் சிங்,
தீபக் சஹாருக்கு காயமா?
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சென்னை அணிக்காக முதல் ஓவரை வீச வந்த தீபக் சஹார் 2 பந்துகளை மட்டுமே வீசினார். மூன்றாவது பந்து வீசுவதற்கு முன்பு அவருக்கு அசௌகரியம் ஏற்பட அவர் பெவிலியன் திரும்பினார். இந்த நிலையில், தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது குறித்து அவர் பேசியிருப்பதாவது: வேகப் பந்துவீச்சாளர் தீபக் சஹாருக்கு பெரிதாக காயம் ஏற்பட்டுள்ளது போல தெரியவில்லை. சிஎஸ்கே அணியின் மருத்துவக் குழு அவரை பரிசோதித்த பிறகு அவருக்கு காயம் ஏற்படுள்ளதாக எனத் தெரிய வரும். தொடர்ச்சியாக அவரது கிரிக்கெட் பயணம் பிஸியாக இருக்கிறது. முதற்கட்டமாக அவரை பரிசோதித்ததில் அவர் நன்றாக உணரவில்லை. மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அவர் எந்த அளவுக்கு நலமுடன் இருக்கிறார் என்பது தெரிய வரும் என்றார்.
போபண்ணா ஜோடி தோல்வி
மாட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி தோல்வியடைந்தது. ஸ்பெயினில் ஏ.டி.பி., மாட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டன் ஜோடி, அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா, ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்ப்சன் ஜோடியை எதிர்கொண்டது.
'டை பிரேக்கர்' வரை நீடித்த முதல் செட்டை 6-7 என இழந்த இந்தியா-ஆஸ்திரேலிய ஜோடி, இரண்டாவது செட்டை 5-7 என போராடி கோட்டைவிட்டது. ஒரு மணி நேரம், 17 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய போபண்ணா, எப்டன் ஜோடி 6-7, 5-7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.
காலிறுதியில் ராமநாதன் ஜோடி
சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் காலிறுதிக்கு ராமநாதன் ஜோடி முன்னேறியது. சீனாவில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், தைவானின் ரே ஹோ ஜோடி, இத்தாலியின் பெலுச்சி, துனிஷியாவின் மோயஸ் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை ராமநாதன் ஜோடி 6-3 என எளிதாக கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் சிறப்பாக செயல்பட்ட இந்த ஜோடி, 6-2 என வசப்படுத்தியது. 55 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் ராமநாதன், ரே ஹோ ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
ஓமன் அணி அறிவிப்பு
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்த தொடருக்கான நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள ஓமன் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அந்த அணிக்கு அகிப் இலியாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓமன் அணி விவரம் பின்வருமாறு:- அகிப் இலியாஸ் (கேப்டன்), ஜீஷன் மக்சூத், காஷ்யப் பிரஜாபதி, பிரதிக் அதவலே, அயன் கான், ஷோயப் கான், முகமது நதீம், நசீம் குஷி, மெஹ்ரான் கான், பிலால் கான், ரபியுல்லா, கலீமுல்லா, பயாஸ் பட், ஷகீல் அகமது. ரிசர்வ் வீரர்கள்: ஜதீந்தர் சிங், சமய் ஸ்ரீவஸ்தவா, சுப்யான் மெஹ்மூத், ஜேய் ஒடெட்ரா
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 3 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்2 days 46 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை6 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 2 days ago |
-
26 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
16 May 2024சென்னை:26 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாவட்ட க
-
காவிரி நீர் தொடர்பான கூட்டங்களில் தமிழக அரசின் அதிகாரிகள் நேரில் பங்கேற்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
16 May 2024சென்னை:காவிரி நீர் தொடர்பான கூட்டங்களில் ஆன்லைன் வாயிலாக தமிழக அரசின் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்ற முடிவு தவறானது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகள் நே
-
கெஜ்ரிவால் பிரசாரத்தில் தலையிட மறுப்பு:அமலாக்கத்துறை கோரிக்கை சுப்ரீம் கோர்ட்டில் நிராகப்பு
16 May 2024புதுடெல்லி:கெஜ்ரிவால் இடைக்கால ஜாமின் விவகாரத்தில் சட்டப்படியாகதான் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட், அவரின் தேர்தல் பிரசாரத்தில் தலையிட
-
புள்ளிப்பட்டியலில் முதலிடம்: கொல்கத்தா அணி புதிய மைல்கல்
16 May 2024கவுகாத்தி:பஞ்சாப் அணிக்கு எதிராக ராஜஸ்தான் தோல்வி காரணமாக புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து கொல்கத்தா அணி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
-
கொடைக்கானலில் இன்று முதல் 61-வது மலர் கண்காட்சி துவக்கம்: ஒரு கோடி மலர்களால் பூத்துக்குலுங்கும் பிரையண்ட் பூங்கா
16 May 2024கொடைக்கானல், கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகின்றது. பிரையண்ட் பூங்காவில் ஒரு கோடி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
-
தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அபராதம்: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
16 May 2024சென்னை, தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அபராதம் விதித்துள்ளது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.
-
இரும்புக்கரம் கொண்டு அடக்கி, தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துங்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
16 May 2024சென்னை:தமிழகத்தில் போதைப்பொருள் விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தெரிவித்த முதல்வர் மு.க.
-
தங்கம் விலை 2வது நாளாக உயர்வு
16 May 2024சென்னை:தங்கம் விலை தொடர்ந்து நேற்று 2வது நாளாக உயர்ந்து விற்பனையானது.
-
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்ய கட்டுப்பாடு அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
16 May 2024புது டெல்லி:பண மோசடி தடுப்புச் சட்டப் பிரிவு 19ன் கீழ் குற்றவாளிகளை கைது செய்யும் அமலாக்கத்துறை கைது செய்வதற்கு புதிய நிபந்தனையை சுப்ரீம் கோர்ட் விதித்துள்ளது.
-
10, 12-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி: தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு
16 May 2024சென்னை, தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தமிழில் சென்டம் எடுத்த மாணவர்களுக்கு மாநில
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை
16 May 2024ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
பெங்களூரு மருத்துவமனையில் திருமாவளவனுக்கு கால்வீக்க சிகிச்சை
16 May 2024சென்னை, மக்களவைத் தேர்தலையொட்டி தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் கால் வீக்கத்துக்காக பெங்களூருவில் சிகிச்சை பெறுவதாக வி.சி.க.
-
விஜயகாந்திற்கு பத்ம பூஷண் விருது:வீடியோ மூலம் ரஜினிகாந்த் உருக்கம்
16 May 2024சென்னை:மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது வழங்கியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
16 May 2024சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை புக்கத்துறை கூட்டுச்சாலை அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்
-
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
16 May 2024சென்னை, சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் நரம்பியல்துறைக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ. 65 கோடி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
இன்னும் 2 ஐ.பி.எல். தொடர்களில் விளையாடுவார் எம்.எஸ்.டோனி பயிற்சியாளர் ஹஸ்ஸி நம்பிக்கை
16 May 2024சென்னை:மகேந்திர சிங் டோனி ஐபிஎல் தொடரில் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு விளையாடுவார் என நம்புவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவி
-
செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
16 May 2024சென்னை, செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு: வரும் 19-ம் தேதி தொடங்க திட்டம்
16 May 2024நாகை, நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
சைகை மொழியில் டி20 வர்ணனை
16 May 2024மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு நாளில் டிஸ்னி ஸ்டார் நிறுவனம் இந்தியா சைனிங் ஹேண்ட்ஸ் அமைப்புடன் இணைந்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
-
புதுச்சேரியில் கடல் சீற்றம்: கடற்கரையில் இருந்து மக்களை வெளியேற்றிய போலீசார்
16 May 2024புதுச்சேரி, புதுச்சேரியில் நேற்று காலை முதலே அவ்வப்போது சாரல் மழை பொழிகிறது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
-
இந்திய சிறுவனின் நேர்மையை கவுரவித்த துபாய் போலீசார்
16 May 2024துபாய்:துபாயில் வசித்து வரும் இந்திய சிறுவன் யூனிஸின் நேர்மையை பாராட்டி துபாய் போலீசார் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.
-
2-ம் கட்டமாக வைகை அணை திறப்பு:நான்கு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
16 May 2024தேனி:2-ம் கட்டமாக வைகை அணையில் இருந்து நேற்று முதல் நீர் திறக்கப்பட்டதை அடுத்து மதுரை, தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு
-
4 கட்ட பார்லி. தேர்தல்களில் இதுவரை 45 கோடியே 10 லட்சம் பேர் வாக்களிப்பு தலைமை தேர்தல் ஆணையம் தகவல்
16 May 2024புதுடெல்லி:இதுவரை நடந்த 4 கட்ட பாராளுமன்ற தேர்தல்களில் 45 கோடியே 10 லட்சம் பேர் வாக்களித்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்திற்கு காவிரியில் 2.5 டி.எம்சி. நீரை திறக்க கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை
16 May 2024புதுடெல்லி:தமிழகத்திற்கு காவிரியில் மே மாதத்திற்கான 2.5 டி.எம்சி. நீரை திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்துள்ளது.
-
ரூ.32 கோடி சிக்கிய விவகாரம்:ஜார்கண்ட் அமைச்சர் ஆலமுக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்
16 May 2024ராஞ்சி:ரூ.32 கோடி சிக்கிய விவகாரத்தில் ஜார்கண்ட் அமைச்சர் அலம்கீர் ஆலமை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருந்த நிலையில் அவருக்கு 6 நாட்கள் அமலாக்கத்துறை காவல் அளித்த