முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 5 மே 2024      தமிழகம்
OPS 2022 12 29

Source: provided

சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை  இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து காணப்படுகிறது.  இதனை நிரூபிக்கும் விதமாக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, ஜெயக்குமார் தன்சிங்கின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூக விரோதிகளை, வன்முறையாளர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கும் உறுதியான அரசு தமிழகத்தில் அமைய வேண்டுமென்ற எண்ணம் மக்களிடம் மேலோங்கி நிற்கிறது.எனவே, முதல்வர் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் தனிக் கவனம் செலுத்தி, வன்முறையாளர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென்றும், மேற்படி கொலைக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டுமென்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து