முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்

செவ்வாய்க்கிழமை, 7 மே 2024      தமிழகம்
Cong 2024-05-04

நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது. உடல் கூறாய்வில், அவரது வாயில் பாத்திரம் துலக்கும் இரும்பு நார் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மர்ம மரணமடைந்த திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் உடல்கூறாய்வில் புதிய திருப்பமாக இந்த தகவல் வெளியாகியிருக்கிறது.திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் அவரது தோட்டத்தில் உடல் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார்.அவரது சடலத்தை காவல்துறையினர் கடந்த 4ஆம் தேதி மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். பின்னர் அவரது உடல் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவரது குடும்ப கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஜெயக்குமார் தனசிங் உடல்கூறாய்வு என்ன கூறப்பட்டிருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதாவது, ஜெயக்குமாரின் குரல்வளை முற்றிலும் எரிந்துள்ளது என்று கூறப்பட்டிருப்பதாகவும், ஜெயக்குமாரின் நுரையீரலில் திரவங்கள் எதுவுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயக்குமாரின் உடல்கூறாய்வு அறிக்கை, சென்னையில் உள்ள உயர் மருத்துவக் குழுவுக்கும் அனுப்பி, ஆலோசனை கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில், கிட்டத்தட்ட 30 பேருக்கு காவல்துறை சம்மன் அனுப்பி 15 பேரிடம் நேரில் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது. மரணத்துக்கு முன்பு, ஜெயக்குமார் எழுதிய இரண்டு கடிதங்களிலும் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதும், உடல் கூறாய்வுகளும் அவரது மரணத்தைப் பற்றிய சந்தேகங்களை அதிகரித்துள்ளது. ஏற்கனவே இறந்தவரை எரித்தால்தான், குரல்வளை முற்றிலும் எரிந்துபோகும் என்றும், எனவே இது கொலையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஜெயக்குமாரில் கை மற்றும் கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்டிருந்ததாகவும் உடல்கூறாய்வில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இது கொலையாக இருக்கலாம் என்றே காவல்துறை உறுதி செய்திருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயக்குமார் மரணமடையும் முன்பே தனது மொத்த குடும்பத்தினருக்கு எழுதியிருந்த கடிதத்தில் கூறியிருந்த தகவல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்துள்ளன. இந்த கடிதத்தின் பேரிலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 hours 46 sec ago இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 hours 14 min ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 months 10 hours ago
வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 months 10 hours ago ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 2 months 10 hours ago தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து