முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியலமைப்பு குறித்து பேச்சு:ராகுல் மீது மத்திய அமைச்சர் புகார்

வியாழக்கிழமை, 9 மே 2024      இந்தியா
Rahul-Gandhi-2023-04-13

Source: provided

புதுடெல்லி:பா.ஜ.க. அரசியலமைப்பை மாற்றிவிடும் என்று ராகுல் காந்தி பேசியதற்கு எதிராக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

பாராளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடுவார்கள் என ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருவதாகவும், இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் மத்திய அரசின் சமூகநீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்: "மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை மாற்ற பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக ராகுல் காந்தி அடிக்கடி கூறி வருகிறார். இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி இந்த குற்றச்சாட்டுகளை பலமுறை மறுத்துள்ளார், ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிராக நான் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன். அவர் பா.ஜ.க. குறித்து இவ்வாறு பேசுவதை தடுக்க வேண்டும். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து