எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட். தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் அவருக்கு வரும் ஜூன் 1-ம் தேதி வரையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கன்னா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, மக்களவைத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்ற காரணத்தை கருத்தில் கொண்டு, அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளதாக தெரிவித்தனர்.
திகார் சிறையில்...
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டிடம் மே 7-ம் தேதி விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு இந்த மனுவை விசாரித்தது. தேர்தலை முன்னிட்டு அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டால், அவர் அலுவலக பணியில் ஈடுபடக் கூடாது என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறினர். அவர் அரசு கோப்புகள் எதிலும் கையெழுத்திட மாட்டார் என அவரது வக்கீல் அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.
விடுவிக்க முடியுமா?
இதற்கு அமலாக்கத் துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. “மக்கள் பிரதிநிதிகள் தொடர்புடைய 5 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களை எல்லாம் ஜாமீனில் விடுவிக்க முடியுமா? ஒரு விவசாயிக்குகூட அறுவடை, விதை விதைப்பு போன்ற முக்கிய பணிகள் உள்ளன. விவசாயியைவிட அரசியல்வாதி மேலானவரா?” என கூடுதல் சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தார் கேள்வி எழுப்பினார்.
சிறப்பு காரணங்கள்...
அப்போது நீதிபதிகள் கூறும்போது, “இது அரசியல்வாதியின் வழக்கா, சாதாரண நபர் வழக்கா என்று நாங்கள் பார்ப்பது இல்லை. ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் சில சிறப்பு காரணங்கள் உள்ளன. விலக்குக்கான சந்தர்ப்பங்களும் உள்ளன. தேர்தல் நடைபெறுவதால்தான் இதுகுறித்து நாங்கள் பரிசீலிக்கிறோம்” என்று தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜுவிடம் நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறும்போது, “அர்விந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீது மே 10-ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படலாம்” என்றார்.
உரிமை அல்ல...
அதன்பின்னர், அமலாக்கத் துறை சார்பில் வியாழக்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட புதிய பதில் மனுவில், கெஜ்ரிவாலை ஜாமீனில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த மனுவில், “தேர்தல் பிரச்சார உரிமை, அடிப்படை உரிமையோ, அரசியல் சாசன உரிமையோ அல்லது சட்டப்படியான உரிமையோ அல்ல. தேர்தல் பிரச்சாரத்துக்காக இதுவரை எந்த அரசியல் தலைவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதில்லை.
போட்டி இல்லை...
நாட்டில் ஆண்டு முழுவதும் எங்காவது ஓர் இடத்தில் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 3 ஆண்டில் 124 தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. தேர்தல் பிரச்சாரத்துக்காக, இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டால், எந்த அரசியல்வாதியையும் கைது செய்து, நீதிமன்ற காவலில் வைக்க முடியாது. இந்த தேர்தலில் கெஜ்ரிவால் போட்டியிடவும் இல்லை. எனவே, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கூடாது” என்று அமலாக்கத் துறை கூறியிருந்தது. இந்தப் பின்னணியில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தற்போது இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை எதிர்ப்பு...
முன்னதாக இந்தியாவில் தேர்தல் வருடம் முழுவதும் நடைபெறுகின்ற காரணத்தால் கெஜ்ரிவாலுக்கு பிரச்சாரம் செய்ய ஜாமீன் வழங்குவது அரசியல்வாதிகளின் கைது நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வரும் என்று இந்த வழக்கில் அமலாக்கத் துறை வாதிட்டது. இதற்கு, கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி எதிர்ப்பு தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். வரும் ஜூன் 2-ம் தேதி அவர் மீண்டும் சரணடைய வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
வரும் 25-ம் தேதி....
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மேலும் தெரிவிக்கையில்., இந்தத் தீர்ப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால ஜாமீனை ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். எதிர்வரும் 25-ம் தேதி டெல்லியில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் இண்டியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி 4 மற்றும் காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிபந்தனைகள் என்னென்ன:-
1) கெஜ்ரிவால் முதல்வர் அலுவலகம், தலைமைச் செயலகம் செல்லக்கூடாது.
2) சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கு குறித்து கருத்து கூறக்கூடாது.
3) இடைக்கால ஜாமீன் தொகையாக ரூ.50,000 செலுத்த வேண்டும்.
4) அலுவலகம் சார்ந்த கோப்புகளில் கையெழுத்து போடக்கூடாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டைகோஸ் கட்லெட்2 days 35 min ago |
ஆனியன் ரிங்ஸ்5 days 8 min ago |
உருளைக்கிழங்கு ப்ரை1 week 2 days ago |
-
உங்கள் திறமையை கண்டு செஸ் உலகமே வியக்கிறது : பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
02 Jun 2024சென்னை : நார்வே செஸ் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தாவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
7 கட்டமாக நடந்த மக்களவை தேர்தல்: நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் : தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார்
02 Jun 2024சென்னை : நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடு பணிகள் தயார் நிலையில் உள்ளன
-
சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியீடு: அருணாச்சலில் ஆட்சியை தக்க வைத்தது பா.ஜ.க. - சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா அபார வெற்றி
02 Jun 2024புதுடெல்லி : அருணாச்சலப் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அருதிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க. வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சியமைக்கிறது.
-
தமிழகத்தில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
02 Jun 2024சென்னை : தமிழகத்தில் உள்ள 36 சுங்கச் சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
-
தேர்தல் அதிகாரிகளுடன் இண்டியா கூட்டணி கட்சியினர் நேரில் சந்திப்பு : 3 பிரச்னைகள் குறித்து முறையீடு
02 Jun 2024புதுடெல்லி : டெல்லியில் தேர்தல் அதிகாரிகளை இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் டி.ஆர்.பாலு, அபிஷேக் சிங்வி உள்ளிட்டோர் சந்தித்தனர்.
-
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு இ.வி.எம். சிப்புகளை பரிசோதிக்க விண்ணப்பிக்கலாம்: ஆணையம்
02 Jun 2024புதுடெல்லி : மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு இ.வி.எம். சிப்புகளை பரிசோதிக்க விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
ஆந்திராவில் வாக்குச்சாவடிக்குள் நுழைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு தடை : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
03 Jun 2024டெல்லி : ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குச்சாவடிக்குள் நுழைய ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
-
வாக்கு எண்ணிக்கை மையங்களில் 2 நாட்கள் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சார வாரியம் அறிவுறுத்தல்
03 Jun 2024சென்னை : தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் இன்று (ஜூன் 4) முதல் நாளை (ஜூன் 5) வரை தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என
-
மழை பிடிக்காத மனிதன் டீசர் வெளியீட்டு
03 Jun 2024இன்பினிட்டி பிலிம் வென்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீ
-
இந்த வாரம் வெளியாகிறது அஞ்சாமை
03 Jun 2024ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், முதல் முறையாக ‘அஞ்சாமை’ என்ற படத்தை முழுமையாக வாங்கி வெளியிடுகிறது.
-
டெல்லியில் நிலவும் குடிநீர் பஞ்சம்: அவசர கூட்டத்தை கூட்ட யமுனை வாரியத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
03 Jun 2024புதுடெல்லி : டெல்லியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க அருகில் உள்ள மாநிலங்களின் அவசர கூட்டத்தை நாளை (ஜூன் 5-ம் தேதி) கூட்ட யமுனை நதி வாரியத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட
-
இன்டியா கூட்டணியின் வெற்றியை கொண்டாட எதிர்நோக்கியுள்ளோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
03 Jun 2024சென்னை : நமது கூட்டணியின் வெற்றியை, இந்திய மக்களுக்கான வெற்றியை கொண்டாட எதிர்நோக்கியுள்ளோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மிஸ்டர் & மிஸஸ் மஹி’ (இந்தி) விமர்சனம்
03 Jun 2024தாழ்வு மனப்பான்மையுடன் தன்னால் எதுவும் முடியவில்லை, எதிலும் சாதிக்காமல் இருப்பதால் தன்னை யாரும் மதிப்பதில்லை, வெற்றி மட்டுமே மகிழ்ச்சியை கொடுக்கும், என்று எண்ணி தாழ்வு
-
சிக்கிம் சட்டசபை தேர்தலில் காங்கிரசை முந்திய நோட்டா
02 Jun 2024காங்டாக் : சிக்கிமில் காங்கிரஸ் கட்சியை (0.32%) விட நோட்டாவுக்கு(0.99%) அதிக ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-06-2024.
03 Jun 2024 -
காஷ்மீரில் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
03 Jun 2024ஜம்மு : காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் சஷி செலியா பங்கேற்கிறார்
03 Jun 2024மாஸ்டர்செப் ஆஸ்திரேலிய சீசன் 10-இன் வெற்றியாளரான புகழ்பெற்ற செஃப் சஷி செலியா, இந்த சீசனின் முதல் இம்யூனிட்டி பின் சவாலை தொடங்கி சமையலறையை அலங்கரிப்பதை காண, மாஸ்டர்செப்
-
ஹிட் லிஸ்ட் விமர்சனம்
03 Jun 2024ஒரு சிறு உயிருக்கு கூட தீங்கு விளைவிக்கக்கூடாது என்பதால் சைவ உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் என்ற கொள்கை கொண்ட நாயகன் விஜய் கனிஷ்கா, தனது அம்மா சித்தாரா, தங்கை ஆகியோருடன்
-
பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக்கணக்கு: திட்டத்திற்கான வழிகாட்டுதலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
03 Jun 2024சென்னை : பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக்கணக்குகளை தொடங்குவதற்கும், ஆதார் எண்களை இணைப்பதற்குமான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
-
தி அக்காலி விமர்சனம்
03 Jun 2024காவல்துறை உயர் அதிகாரி ஜெய்குமார் தலைமையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க குழு ஒன்று அமைக்கப்படுகிறது.
-
புஜ்ஜி அட் அனுப்பட்டி விமர்சனம்
03 Jun 2024கோவை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் சிறுமி பிரணிதி சிவ சங்கரன், ஆட்டுக்குட்டி ஒன்றை வளர்க்கிறார்.
-
சென்னையில் மேலும் ஒரு இடத்தில் 350 தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் : உணவு பாதுகாப்பு துறை தீவிர விசாரணை
03 Jun 2024சென்னை : சென்னை அரும்பாக்கம் ஆர்.கே.பார்மா நிறுவனத்தில், 350 தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
-
கருடன் விமர்சனம்
03 Jun 2024சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள்.
-
கோடை விடுமுறை நிறைவு: சென்னை உயர்நீதிமன்ற பணிகள் தொடங்கியது
03 Jun 2024சென்னை : ஒரு மாத கோடை விடுமுறை முடிந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று முதல் பணிகள் தொடங்கியது.
-
விஜய் சேதுபதியின் 50-வது படம் ‘மஹாராஜா’
03 Jun 2024படத்தை பற்றி இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் மற்றும் நாயகி மம்தா மோகன்தாஸ், சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, விஜய் சேதுபதி தேடும் லட்சுமி யார்?