முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 13 மே 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப்பு அளிக்கும் விதமாக கெஜ்ரிவால் தீர்ப்பை சுட்டிக் காட்டி இடைக்கால ஜாமின் வழங்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். இதில் அமலாக்கத் துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் நில மோசடியில் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கடந்த ஜனவரி 31-ந் தேதி அன்று கைது செய்யப்பட்டார். தற்போது, நீதிமன்ற காவலில் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியதைப் போல தனக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், தானும் ஜார்க்கண்ட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

ஹேமந்த் சோரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்கு உட்பட்டது இந்த வழக்கு. தேர்தல் பிரசாரம் செய்ய எனது மனுதாரருக்கும் இடைக்கால ஜாமீன் தேவை" என வாதிட்டார்.

அமலாக்க இயக்குனரகத்தை விசாரிக்காமல் ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கை மே 20-ஆம் தேதிக்கு பட்டியலிடுவதாகக் கூறினர். சோரன் தரப்பில் ஆஜரான சிபல் மற்றும் அருணாப் சவுத்ரி ஆகியோர், "அதற்குள் தேர்தல் முடிந்துவிடும். இந்த விவகாரத்தில் நீண்ட நாள் எடுத்துக்கொண்டால் அது அவருக்கு பாரபட்சம் காட்டுவதாக ஆகிவிடும்" என்று தெரிவித்தனர்.

இந்த வாரம் நிறைய விஷயங்கள் பட்டியலிடப்பட்டிருப்பதால், அதிக வேலை இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், மே 17-ஆம் தேதிக்கு வழக்கை விசாரிக்க நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர். மேலும், மே 17-ஆம் தேதிக்குள் இது விஷயத்தில் பதில் அளிக்க அமலாக்க இயக்குனரகத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, பணமோசடி வழக்கில் அமலாக்க துறையால்  தான் கைது செய்யப்பட்டதற்கு எதிராக ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் தாக்க் செய்த மனுவை விசாரித்த கடந்த மே 3-ஆம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், இடைக்கால ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்திருந்த மனுவையும் உயர் நீதிமன்றம் அன்றைய தினமே தள்ளுபடி செய்தது. இந்நிலையில், இதை எதிர்த்து தற்போது அவர் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஜார்க்கண்டில் 4 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 10 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல், மூன்று கட்டங்களாக மே 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து